வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Friday, September 26, 2008
தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை
யாழ்ப்பாணத்தின் ஊரெழு என்ற சிற்றூரின் மைந்தன், யாழ்பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் இராசையா பார்த்திபன் என்னும் லெப்டினட் கேணல் திலீபன் தியாக தீபமாய் மறைந்து இன்றோடு 21 ஆண்டுகள் கழிந்து விட்டன.

சிறீலங்கா ராணுவத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக தம் உயர்கல்வியை உதறித்தள்ளி ஆயுதப் போராட்டமே சரியான வழி என்ற வகையில் அணி திரண்டவர்களில் திலீபன் அண்ணாவும் ஒருவர்.

ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்மக்களின் வாழ்வாதாரங்கள் காகிதத்தில் மட்டும் பேசப்பட்ட போது ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து அறவழிப்போராட்டத்திலும் தன் பங்கைக் காட்டியவர் திலீபன் அண்ணா.

1. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2. சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3..அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
4. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5. தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

என்பனவே அந்தக் கோரிக்கைகள். அந்தக் கோரிக்கைகள் இன்னும் தொடர்கின்றன.

பாடசாலைகளே திரண்டு நல்லூருக்குப் படையெடுத்து திலீபன் அண்ணாவின் நீராகாரம் கூட அருந்தாத அறவழிப் போராட்டத்தைக் காணச் சென்றபோது காற்சட்டைப் பையனாய் அவரைப் போய்ப் பார்த்த காலம் இன்னும் பசுமையாய் இருக்கு. அந்தப் பன்னிரண்டாம் நாள் இதே நாள், 21 வருஷத்துக்கு முன்னர் நிதர்சனம் தொலைக்காட்சியில் தியாகி திலீபன் அண்ணாவின் வெற்றுடல் சாய்ந்திருக்க, அவரை பரிசோதிக்க நிதமும் வரும் வைத்தியர், சோதித்து விட்டு அவரைக் மூன்று முறை கும்பிட்டவாறே அப்படியே அசையாது நிற்க, முன்னே குழுமியிருந்த மக்கள் குமுறிக்கொண்டே பேரிரைச்சலோடு அழுது தொலைத்த கணங்கள் அவை.

அந்தப் பன்னிரண்டு நாட்களை கவிஞர் வாஞ்சிநாதன் அவர்கள் "திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்" என்ற நூலினை எழுதியிருக்கின்றார். அதனை யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் குரல்வடிவம் கொடுத்துத் தயாரித்ததை இங்கே பகிர்கின்றேன்.

முதலாம் நாள்



இரண்டாம் நாள்



மூன்றாம் நாள்



நான்காம் நாள்



ஐந்தாம் நாள்



ஆறாம் நாள்



ஏழாம் நாள்



எட்டாம் நாள்



ஒன்பதாம் நாள்



பத்தாம் நாள்



பதினோராம் நாள்



பன்னிரண்டாம் நாள்



தியாகி திலீபன் முழு ஆவணத் தொகுப்பு



ஒலித்தொகுப்பு நன்றி: யாழ் இந்து பழைய மாணவர் சங்கம்

புகைப்படங்கள் நன்றி: அகிலன் தளம், இலங்கை தமிழ் சங்கம் அமெரிக்கா

Labels:

posted by கானா பிரபா 4:10 AM   8 comments
 
8 Comments:
  • At September 26, 2008 at 4:38 AM, Blogger ers said…

    பாடசாலைகளே திரண்டு நல்லூருக்குப் படையெடுத்து திலீபன் அண்ணாவின் நீராகாரம் கூட அருந்தாத அறவழிப் போராட்டத்தைக் காணச் சென்றபோது காற்சட்டைப் பையனாய் அவரைப் போய்ப் பார்த்த காலம் இன்னும் பசுமையாய் இருக்கு.///

    இது தியாகத்தின் வெளிப்பாடு... தமிழிழம் மலர இன்று பிரார்த்திப்போம்

     

  • At September 26, 2008 at 4:39 AM, Blogger ஆயில்யன் said…

    பிறருக்கென வாழ்ந்தவர் இறந்துமே இருக்கின்றார்!


    இறக்கும் வேளையில் இவர் நினைத்த கனவுகள் பிறக்கும் வேளை எதிர்நோக்கி காத்திருக்கும் ஈழ சகோதரர்கள் நினைத்தது நடக்கட்டும்!

     

  • At September 26, 2008 at 5:12 AM, Anonymous Anonymous said…

    எங்க சாமி ..

     

  • At September 26, 2008 at 5:54 AM, Blogger King... said…

    :(

     

  • At September 26, 2008 at 6:55 AM, Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said…

    :(

     

  • At September 26, 2008 at 3:07 PM, Blogger G.Ragavan said…

    வாழ்ந்தவர் கோடி
    மறைந்தவர் கோடி
    மக்களின் மனதில் நிற்பவர் யார்
    ஆறிலும் சாவு நூறிலும் சாவு
    தாயகம் காப்பது கடமையடா

    அணைந்த விளக்குகள்...தாங்கள் ஏற்றி வைத்த விளக்குகளில் ஜொலிக்கின்றன.

     

  • At September 27, 2008 at 7:50 AM, Blogger ஹேமா said…

    நான் நேரடியாகக் காணவில்லை திலீபனை.சந்தர்ப்பம் இல்லை.நிகழ்வு கேட்டு மனம் கனத்தது பிரபா.நன்றி...நன்றி

     

  • At September 27, 2008 at 8:36 AM, Blogger தமிழன் said…

    இப்படியே எத்தனை பேர் இன்னுயிர் நீத்தாலும் வேடிக்கை தான் பார்க்கும் இந்த மனிதாபிமானம் இல்லாத உலகம். வெட்கம் கெட்வர்கள் இந்த கொடுமையை என்று கண்டு மாறுவார்களோ?
    நல்ல உள்ளங்கள் பிராத்தனையில் தமிழீழம் நிச்சயம் வெல்லும்.

     

Post a Comment
<< HOME
 
Wednesday, September 24, 2008
மொழி தாவிய மெட்டுக்கள் "சங்கத்தில் பாடாத கவிதை"

இன்றைய இசைத் தொகுப்பு பகுதியிலே நான் தரவிருப்பது, ஒரே மெட்டு திரையிசையாக தமிழ், தெலுங்கு மலையாளப் பாடல்களாக வந்திருப்பதை அப்பாடல்களோடு இணைத்துத் தருகின்றேன்.

மூன்றாம் பிறை படத்தில் இடம்பெற்ற பின்னணி இசைக்கோர்ப்பு ஒன்றை அப்பட இயக்குனர் பாலுமகேந்திரா, தனது ஓளங்கள் மலையாளப்படத்தின் பாடல் வடிவமாக்கித் தருமாறு இசையமைப்பாளர் இளையராஜாவைக் கேட்கவும் அவர் அப்படியே மலையாளப்பாடலாக்கிக் கொடுத்திருந்தார். அப்பாடல் "தும்பிவா தும்பக் குடத்தில்" என்று ஜானகி பாடியிருப்பார்.



பின்னர் இப்பாடல் மெட்டு " சங்கத்தில் பாடாத கவிதை" என்று இளையராஜாவும், எஸ்.ஜானகியும் ஓட்டோ ராஜா தமிழ்த் திரைப்படத்தின் காதல் ஜோடிப் பாடலாக அமைந்தது.



தொடர்ந்து அதே மெட்டு பாலுமகேந்திராவின் "நிரீக்சனா" என்ற தெலுங்குப் படத்தில் " ஆகாசம் ஏனாதிதோ" என்ற பாடலாகவும் அமைந்தது.



ஹிந்தி வடிவில் Aur Ek Prem Kahani படத்திற்காக



ஹிந்தியில் "Paa" படத்திற்காக



மலையாளக் குயில் துர்கா விஸ்வநாத் பாடும் "தும்பி வா"

posted by கானா பிரபா 3:38 AM   26 comments
 
26 Comments:
  • At September 24, 2008 at 5:46 AM, Blogger கோபிநாத் said…

    அருமையான தொகுப்பு...நமக்கு பிடிச்சது.."தும்பிவா தான்...அதுல ஒரு தாய்மை இருக்கும் ;)

     

  • At September 24, 2008 at 5:56 AM, Blogger ஸ்ரீ சரவணகுமார் said…

    ஓலங்கள் மலையாள படம் 'கண்ணே கலைமானே' என்று தமிழிலே 'remake' செய்யப்பட்ட போது அதே பாடல் 'நீர் வீழ்ச்சி தீ மூட்டுதே ' என்று எஸ்.ஜானகியின் குரலில் வெளிவந்தது பலருக்கு தெரியாது. அந்த பாடலின் வரிகள் அபாரமாக இருக்கும். ஆனால் அதை எழுதியது யார் என்று தெரிய வில்லை.

     

  • At September 24, 2008 at 6:20 AM, Blogger கானா பிரபா said…

    தங்கக்கம்பி

    வருகைக்கு நன்றிகள்

    தல கோபி

    வாங்க வாங்க

    ஸ்ரீசரண்

    கண்ணே கலைமானே படம் தெலுங்கில் வந்த நிரீக்ஷணாவின் ரீமேக் அந்தப் படத்தை நானும் பார்த்திருந்தேன். பானுசந்தர் அர்ச்சனா ஜோடி. இது முன்னர் பாலுமகேந்திரா எடுத்த யாத்ரா என்ற மலையாளப்படத்தின் தெலுங்கு வடிவம்.

    இந்தப் பாடலையும் இங்கேயுள்ள வீடியோ கடைகளில் தேடி எடுத்துப் போடுகின்றேன்.

     

  • At September 24, 2008 at 6:20 AM, Blogger சந்தனமுல்லை said…

    நல்லாருக்கு...:-)

     

  • At September 24, 2008 at 6:30 AM, Anonymous Anonymous said…

    அதை எழுதியது கவிஞர் அறிவுமதி.

     

  • At September 24, 2008 at 7:44 AM, Blogger Tech Shankar said…

    அருமைங்க. நல்ல கற்பனையுடன் நல்லா தேடித்தேடி எடுத்துக்கொடுத்தமைக்கு நன்றிகள்.

     

  • At September 24, 2008 at 9:49 AM, Blogger Naga Chokkanathan said…

    இதுதவிர, ஹிந்தியிலும் இதே பாட்டு ஒரு வெர்ஷன் இருக்கு கானாபிரபா, ‘சண்டே கோ’ன்னு ஆரம்பிக்கும், மனோ பாடினது, ‘அவுர் ஏக் ப்ரேம் கஹானி’ன்னு பாலு மஹேந்திரா படத்தில வரும்

    - என். சொக்கன்,
    பெங்களூர்.

     

  • At September 24, 2008 at 5:29 PM, Anonymous Anonymous said…

    நல்லதோர் பாடலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் கானாஸ்

     

  • At September 24, 2008 at 6:31 PM, Blogger அருண்மொழிவர்மன் said…

    மூன்றாண்டுகளுக்கு முன்னர் இளையராஜா, அன்றும் இன்றும் என்றும் என ஒரு நிகழ்ச்சியை தந்தார். அதன் தீம் ம்யூசிக்காக அமைந்த மெட்டு இது. அதன் பிறகு சில நாள் என் மனதை விட்டு இறங்காமல் தம் தம் தம் தம்தன தம்தம் என்று தத்தகாரமாக இருந்த பாடல் இது.
    ஓட்டோ ராஜா திரைப்படத்துக்கு இளையராஜா , சங்கர் கணேஷ் உட்பட 4 அல்லது 5 பேர் இசையமைத்ததாக நினைவு.

    அதுசரி, மலரே என்னென்ன கோலம் பாடல் வந்த ஆட்டோராஜா இதே படம் தானா? ஆட்டோ ராஜா என்று இன்னுமொரு திரைப்படமும் வெளியானதா

     

  • At September 25, 2008 at 12:47 AM, Blogger முரளிகண்ணன் said…

    நல்ல பாடல்கள், நல்ல தொகுப்பு

     

  • At September 25, 2008 at 2:38 AM, Blogger கானா பிரபா said…

    வருகைக்கு நன்றி சந்தனமுல்லை

    மிக்க நன்றி மணி, முன்னர் அறிவுமதி பேட்டி ஒன்றிலும் இதைச் சொல்லியிருந்தார்.

    வருகைக்கு நன்றி தமிழ் நெஞ்சம் நண்பா

     

  • At September 25, 2008 at 2:40 AM, Blogger கானா பிரபா said…

    //Naga Chokkanathan said...
    இதுதவிர, ஹிந்தியிலும் இதே பாட்டு ஒரு வெர்ஷன் இருக்கு கானாபிரபா, ‘சண்டே கோ’ன்னு ஆரம்பிக்கும், மனோ பாடினது, ‘அவுர் ஏக் ப்ரேம் கஹானி’ன்னு பாலு மஹேந்திரா படத்தில வரும்//

    வாங்க சொக்கன்

    அந்தப் படமும் பார்த்திருக்கின்றேன், ரமேஷ் அர்விந்த், ரேவதி, ஹீரா நடித்தது. இந்தக் கதையையே பாலுமகேந்திரா ராஜா போல எல்லா மொழிகளிலும் பரவவிட்டுவிட்டார். முன்னர் காசெட்டில் பார்த்ததால் ஹிந்திப்படம் டிவிடியில் இருக்கின்றதா தெரியவில்லை, தேடுகின்றேன்.

     

  • At September 25, 2008 at 2:42 AM, Blogger கானா பிரபா said…

    வருகைக்கு நன்றி தூயா

    அருண்மொழிவர்மன்

    பல இசையமைப்பாளர்கள் இசையமைத்த ஆட்டோ ராஜா தான் இது. ஆட்டோ ராஜா என்று இன்னொரு திரைப்படமும் வெளியானதாக நினைக்கின்றேன். ஜெயா ரிவியின் ராஜா படைத்த இசை விருந்துக்கான இசையாக இது பயன்பட்டது உங்களுக்கு தெரியும் தானே.

     

  • At September 25, 2008 at 11:23 PM, Blogger Thamiz Priyan said…

    எனக்கு துர்காவின் பாட்டு மிகவும் பிடித்துப் போய் விட்டது.. நல்லது தொகுப்பு அண்ணே!

     

  • At September 26, 2008 at 3:43 AM, Blogger கானா பிரபா said…

    வருகைக்கு நன்றி முரளிக்கண்ணன் மற்றும் தமிழ் பிரியன்

    துர்காவின் பாட்டு கலக்கலா இருக்குதில்ல.

     

  • At September 27, 2008 at 6:32 AM, Blogger G.Ragavan said…

    ரொம்ப நல்ல பாட்டுங்க. இதுல எனக்குப் பிடிச்சது தமிழ் வடிவம். இளையராஜாவின் குரலும் எஸ்.ஜானகியின் குரலும் இணைந்து இயைந்து ஒலிக்கும். பாடல்களைக் கொடுத்தமைக்கு நன்றி.

     

  • At September 27, 2008 at 6:47 AM, Blogger கானா பிரபா said…

    வாங்க ராகவன்

    இங்கே கொடுத்த மூன்று பாட்டுக்களோடு மேலதிகமாக இருக்கும் தமிழ் பாட்டையும் ஹிந்திப்பாட்டையும் கூட தேடி எடுத்து போடணும்.

     

  • At October 5, 2008 at 6:40 AM, Blogger Dr.Sintok said…

    //அறிவுமதி பேட்டி ஒன்றிலும் இதைச் சொல்லியிருந்தார்.//

    அந்த பேட்டியை கேட்ட பிறகு இந்த பாடலை தேடிகிட்டு இருந்தேன்...இங்கு இனைத்ததுக்கு நன்றி....

    //தும்பிவா தும்பக் குடத்தில்//

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் ..............

    அந்த நடிகை ரொம்ம அழகா இருக்காங்க....

    ஒரு கட்டத்தில் அந்த யையனும் அவுங்களும் சிரிக்கும் இடம் அழகோ அழகு.................

    இனையத்தில் இந்த படம் கிடைக்குமா?

     

  • At October 5, 2008 at 6:50 AM, Blogger VIKNESHWARAN ADAKKALAM said…

    கடைசி பாட்டு சூப்பர்...

     

  • At October 6, 2008 at 1:00 AM, Blogger கானா பிரபா said…

    Dr.Sintok said...
    //அறிவுமதி பேட்டி ஒன்றிலும் இதைச் சொல்லியிருந்தார்.//

    அந்த பேட்டியை கேட்ட பிறகு இந்த பாடலை தேடிகிட்டு இருந்தேன்...இங்கு இனைத்ததுக்கு நன்றி....

    இனையத்தில் இந்த படம் கிடைக்குமா?//

    வருகைக்கு நன்றி நண்பரே, இப்படம் இணையத்தில் கிடைக்குமா என்று தெரியவில்லை.

    //VIKNESHWARAN said...
    கடைசி பாட்டு சூப்பர்...//


    வருகைக்கு நன்றி விக்கி

     

  • At June 8, 2009 at 4:59 AM, Blogger அரவிந்தன் said…

    ஆறு திரையங்குகளில் கண்ணே கலைமானே சென்னையில் இரு வாரங்கள் வெற்றிகரமாக ஓடியது.

     

  • At June 8, 2009 at 6:23 AM, Blogger கானா பிரபா said…

    நன்றி அரவிந்தன் :)

     

  • At September 26, 2009 at 9:29 AM, Anonymous அருண் said…

    அற்புதமான தொகுப்பு. இளையராஜா ஒரு இசைமேதை என்பதில் சந்தேகமே இல்லை!

     

  • At October 10, 2009 at 1:23 AM, Anonymous Kalai vannan said…

    Tamil - 2 versions
    Sangathil Paadatha kavithai
    Neer veezhchi thee mootudhae

    Malayalam - 1 version
    Thumbi vaa

    Telugu - 1 version
    Aakasham Enatidho

    Hindi - 1 version
    Monday tho

    In addition to the above versions there are 2 instrumental versions

    I got this information from the following URL.

    http://www.musicquencher.com/blog/2009/08/25/multiple-versions-of-a-single-tune/

     

  • At March 15, 2012 at 5:29 AM, Anonymous Baranee said…

    "நீர் வீழ்ச்சி தீ மூட்டுதே"
    http://www.youtube.com/watch?v=YkNNB_y15ZA

     

  • At December 8, 2017 at 8:14 PM, Anonymous Anonymous said…

    கவிஞர்அறிவுமதி

     

Post a Comment
<< HOME
 
Sunday, September 7, 2008
மங்களூர் சிவாவுக்கும் ஜெர்மன் பூங்கொடிக்கும்
சிவராமன் என்ற மங்களூர் சிவாவுக்கும் அவர் நண்பி ஜெர்மன் பூங்கொடிக்கும் திருமணம் நடைபெற உள்ளது.

வரும் செப்டம்பர் 11, 2008 தேதி வியாழன்
காலை 7.30 - 9.00 க்குள்
வடபழனி முருகன் ஆலயத்தில்

அனைவரும் தம்பதிகளை நீடூழி காலம் சீரோடும் சிறப்போடும் வாழ, இரண்டு பாடல் பரிசுகளோடு வாழ்த்துவோம் ;)

மங்களூர் சிவா - ஜெர்மன் பூங்கொடிக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்

ஜெர்மனியின் செந்தேன் மலரே.....



இருவிழியோ சிறகடிக்கும்....

posted by கானா பிரபா 1:02 AM   13 comments
 
13 Comments:
  • At September 7, 2008 at 1:22 AM, Blogger ஆயில்யன் said…

    வாழ்த்துக்களுடன் மீ த பர்ஸ்டூ :)))

     

  • At September 7, 2008 at 1:22 AM, Blogger ஆயில்யன் said…

    கல்யாண போட்டோ சூப்பர் :))

     

  • At September 7, 2008 at 1:27 AM, Blogger MyFriend said…

    இனிய வாழ்த்துக்கள் சிவா மற்றும் பூங்கொடி. :-)

     

  • At September 7, 2008 at 2:13 AM, Blogger சுரேகா.. said…

    நினைச்சதை நடத்திப்புட்டீகளே சிவா!

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    (2 பேருக்கும் சொல்லணுமில்ல)


    ஒரு மத்தியான சாப்பாடு பார்சல்...!

    :)

     

  • At September 7, 2008 at 2:14 AM, Blogger சுரேகா.. said…

    அடுத்தவர்
    ஜொள்ளா விட
    அழகுப் படங்களை
    அசத்தலா போட்டுத்தந்து
    அற்புதமாய் இருந்துவந்தார்
    நம்ம கும்மி புகழ் அன்பு நண்பர்
    சிவராமன்.! என்னமாயம் நடந்துச்சோ
    இப்பல்லாம் சொந்த ஜொள்ளை மட்டும்
    விட்டு கவிதையா அள்ளிவிட்டு, கலங்கடிச்சு
    பதிவிட்டு, பரிதவிச்சுபோயிருக்கார். நல்லபொண்ணு
    யாராவது நறுக்குன்னு வந்து நின்னு தொல்லை இல்லாம
    எங்களுக்கு நல்ல காலம் பொறக்கவை மங்களூரு மாரியாத்தா!

     

  • At September 7, 2008 at 2:14 AM, Blogger சுரேகா.. said…

    முடிவு கிட்டிருச்சு தங்கங்களா....

    கவிதை உண்மைதான்..
    எல்லாம் காதல் மயக்கத்தில்தான்
    பார்ட்ட்டி பீலிங்ஸ் காட்டிருக்கு!

    மொத்தத்துல நல்லது நடக்கப்போவுது!

    செப்டம்பர் 11 - சிவாவை சாச்சுப்புட்டாய்ங்கப்பூ !

     

  • At September 7, 2008 at 2:17 AM, Blogger pudugaithendral said…

    வாழ்த்துக்கள் சிவா, பூங்கொடி.

    பிரபா ஒரு திருத்தம் ஜெர்மன் பூங்கொடி அல்ல. இந்திய பூங்கொடிதான். :)))

     

  • At September 7, 2008 at 2:19 AM, Blogger நிஜமா நல்லவன் said…

    இனிய திருமண வாழ்த்துக்களினை சொல்லிடுங்க தல:)

     

  • At September 7, 2008 at 2:22 AM, Blogger நிஜமா நல்லவன் said…

    /புதுகைத் தென்றல் said...
    வாழ்த்துக்கள் சிவா, பூங்கொடி.

    பிரபா ஒரு திருத்தம் ஜெர்மன் பூங்கொடி அல்ல. இந்திய பூங்கொடிதான். :)))/

    ஆமா...ரொம்ப முக்கியம்....நாங்க தொண்டை தண்ணி வற்றிப்போய் கேட்டப்ப எல்லாம் சொல்லாம எல்லோருக்கும் தெரிஞ்ச பிறகு வந்து திருத்தம் எல்லாம் சொல்லுறீங்க....:))

     

  • At September 7, 2008 at 5:11 AM, Blogger Thamiz Priyan said…

    வாழ்த்துக்கள் சிவா அண்ணே! மற்றும் அண்ணி!

     

  • At September 7, 2008 at 5:17 AM, Blogger cheena (சீனா) said…

    அருமையான, பொருத்தமான படங்களுடன் பாடல்களும் இட்டு வாழ்த்தியமைக்கு ஒரு ரிப்பீஇட்ட்டேஎய்ய்ய்

     

  • At September 8, 2008 at 12:17 AM, Blogger Joe said…

    Congrats and all the best to both of you!

     

  • At September 10, 2008 at 6:42 PM, Blogger கானா பிரபா said…

    Thank you all



    இனிய வாழ்த்துக்கள் சிவா மற்றும் பூங்கொடி

     

Post a Comment
<< HOME
 
Wednesday, September 3, 2008
"பூங்காற்று புதிதானது" கமலுக்கு ஹிந்தி ரஜினிக்கு தமிழ்

கமல்ஹாசன் நடித்த மூன்றாம் பிறை திரைப்படம் கதையில் மட்டுமல்ல, பாடல்களாலும் மனசை வருடிய திரைப்படம். இப்படத்தின் முத்தான பாடல்களில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய "பூங்காற்று புதிதானது" பாடல் விலக்கமுடியாத ஒன்று.

இப்படம் ஹிந்தியில் சத்மா என்று எடுக்கப்பட்டப் போது அந்தப் பாடலின் மெட்டைக் கொஞ்சம் மாற்றி இசையில் ஏறக்குறைய ஒரே மாதிரி வாத்தியப் பின்னணியோடு சுரேஷ் வட்காரை வைத்துப் பாடவைத்தார் ராஜா.

பின்னர் ஹிந்திப் பாடலின் மெட்டையும் இசையையும் மீண்டும் தமிழுக்கு கொண்டு வந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் "என் வாழ்விலே" என்ற பாடலாக, ரஜினி நடித்த "தம்பிக்கு எந்த ஊரு" திரைப்படத்தில் பயன்படுத்தினார் இளையராஜா. இசையில் வித்தியாசத்தை மட்டுமல்ல, புதுமையையும் படைத்தார் ராஜா என்பதற்கு இதுவோர் உதாரணம்.

கமல்ஹாசன் நடித்த "சத்மா" ஹிந்திப் படத்தின் பாடல் Ae zindagi gale laga le (You tube by: rafie282000)

இதே பாடல் மெட்டும் இசையும் ரஜினி நடித்த "தம்பிக்கு எந்த ஊரு" படத்தில் என் வாழ்விலே" (You tube by:llBthere)




மேலே காட்டிய பாடல்களுக்கு மூலமான மூன்றாம் பிறை படப்பாடல் "பூங்காற்று புதிதானது"(You tube by: greatindiandons1)

posted by கானா பிரபா 5:15 AM   8 comments
 
8 Comments:
  • At September 3, 2008 at 5:45 AM, Blogger ஆயில்யன் said…

    மீ த பர்ஸ்ட்டூ! :))

     

  • At September 3, 2008 at 5:51 AM, Blogger ஆயில்யன் said…

    ஹிந்தி பாட்டு எனக்கு கேக்கலைங்கண்ணா!

    பட் மத்த ரெண்டு பாட்டும் சூப்பரூ!

    தல ரஜினி ஸ்டில்லும் சூப்பர்!

     

  • At September 3, 2008 at 5:51 AM, Blogger ஆயில்யன் said…

    ரஜினி பாட்டுலயும் கமல் பாட்டுலயும் இன்னொரு பொருத்தமும் இருக்கு!

    இண்ட்ரோ மியூசிக் ஒரு ஜோடி குதிரையில வரும் இன்னொரு ஜோடி உப்புமூட்டை தூக்கிட்டு ஒடியாரும் :))))

     

  • At September 3, 2008 at 11:31 AM, Blogger குட்டிபிசாசு said…

    பிரபா அண்ணை,

    பாடல்களுக்கும் தகவலுக்கும் நன்றி! வாழ்த்துக்கள்!

     

  • At September 3, 2008 at 7:05 PM, Blogger அருண்மொழிவர்மன் said…

    மூன்றாம் பிறை இளையராஜாவின் இசை ராஜாங்கம் விரிவடைந்த ஒரு திரைப்படம். இதில் பெரும்பாலானவர்களை கண்ணே கலைமானே கவர்ந்திருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் பூங்காற்று புதிதானது. அதிலும்
    "என் வாழ்விலே நீ வந்தது
    விதியென்றால்
    நீ எந்தன் உயிர் அன்றோ"... என்ற வரிகள். இது வைரமுத்துவின் வரிகள் என்று நினைக்கிறேன்.
    அதே சமயம் கண்ணே கலைமானே கண்ணதாசன் எழுதிய இறுதிப்பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

     

  • At September 3, 2008 at 9:01 PM, Blogger SurveySan said…

    ஒஹோ இவ்ளோ மேட்டரு இருக்கா இந்த பாட்டுல.

    பூங்காற்று புதிரானது - ஏ-கிளாஸ் பாட்டு. ஆரம்ப கிட்டாரு(?) பிட்ல ஆரம்பிச்சு, பாடல்கள் வரிகளும், ஏசுவின் குரலும்.. ஆஹா, ஆனந்தம்.

    ஹிந்திப் பாட்டு மெட்டும் நல்லாருக்கு, ஆனா, பூங்காற்று அளவுக்கு இழுக்கலை.

     

  • At September 4, 2008 at 6:10 AM, Blogger கானா பிரபா said…

    ஆயில்ஸ்

    ரஜினி பாட்டு மட்டும் கேட்குதுன்னு சொல்றது ஓவரு ;)

    வருகைக்கு நன்றி குட்டிப்பிசாசு

     

  • At September 7, 2008 at 3:40 AM, Blogger G.Ragavan said…

    ரெண்டு பாட்டுமே நல்ல பாட்டுகள். என் வாழ்விலேய விட.. ஏ ஜிந்தகி நல்லாருக்கு. ரெண்டு படத்துலயுமே எல்லாப் பாட்டுமே சூப்பர்.

     

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
ஆயில்ஸ் வாழணும் நூறு ஆயுள்ஸ்
எஸ்.எஸ்.சந்திரன் மறைவில்
சாதித்துக் காட்டி நெகிழ வைத்த அபிநயா
அன்று கேட்டவை இன்று புத்தம் புதிதாய்
மண மேடையில் .:: மை பிரண்ட்::.
2009 சிறந்த மலையாள கானங்கள்
ஆயில்யன் - 1980
"மதுரை to தேனி வழி ஆண்டிப்பட்டி" சுகமான பயணம்
கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்
"காற்றில் எந்தன் கீதம்" ஒரு சிலாகிப்பு
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது