வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Sunday, June 29, 2008
இசையமைப்பாளர் ரவீந்திரன்
பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் இசைப்பள்ளியில் படிக்கும் போது நண்பராக அறிமுகமானவர் திரு ரவீந்திரன் அவர்கள். பின்னர் ஜேசுதாஸ் திரைத்துறைக்கு வந்து புகழ்பெற்றாலும் ரவீந்திரனால் பெரிய அளவில் பிரகாசிக்க முடியவில்லை. தன் நண்பன் ரவீந்திரனுக்காக ஐ.வி.சசியிடம் வாய்ப்புப் பெற்று சூலா என்ற திரைப்படத்தில் இவரை இசையமைப்பாளராக்கினார்.

ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, பரதம் உட்பட பல மலையாளத்திரைப்படங்களில் ரவீந்திரனின் இசை தான் ஹீரோ. கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் பண்ணியவர். பரதம் திரைப்படத்திற்காக தேசியவிருதும் பல மாநில விருதுகளையும் பெற்றவர். தமிழிலும் ரசிகன் ஒரு ரசிகை உட்பட சில படங்களுக்கு இசையமைத்திருக்கின்றார். இவரின் இசையில் வடக்கும் நாதன் திரைப்படம் வெளிவர முன்னரே 2005 இல் புற்றுநோயால் காலமாகிவிட்டார். இவரின் மகன் கூட ஒரு பாடகரே.

இவரின் தனிப்பாடல் ஒன்றை மலையாள ஏஷியா நெட்டுக்காகப் பாடும் காட்சி


இசையமைப்பாளர் ரவீந்திரன் இசையில் வந்த சில பாடல்கள்

Fim: His Highness Abdullah



Film:Bharatam


Film: Nandanam


Fim: David David Mr. David



Album: Ponnona Tharangini


Film: Tharattu (1981)


Sukhamo Devi (1986)


Fim: Vadakkum Nathan
posted by கானா பிரபா 4:03 AM   10 comments
 
10 Comments:
  • At June 29, 2008 at 9:21 PM, Blogger கோபிநாத் said…

    சில பாடல்களை கேட்டுயிருக்கிறேன். ஆனால் உங்கள் பதிவின் மூலம் தான் இசையமைப்பாளர் இவர் தான் என்று தெரிந்துக் கொண்டேன். அருமையான பாடல்கள்...நன்றி தல ;))

     

  • At June 30, 2008 at 1:58 AM, Blogger pudugaithendral said…

    ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, மற்றும் பரதன் பாடல்கள் கேட்டிருக்கேன். ரொம்ப பிடிக்கும்.

    நல்ல தகவல் மற்றும் அருமையான பாடல்களின் தொகுப்பு.

    நன்றி.

     

  • At June 30, 2008 at 3:10 AM, Blogger ஆ.கோகுலன் said…

    முதலிரு பாடல்களும் மிகவும் கவர்ந்தது.
    ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா பாடல் தரவிறக்கி காதுக்குள் கேட்டதில் தபேலாவின் பாயாவையும் மிருதங்கத்தின் வலந்தரையையும் கலந்து ஒலிப்பதிவு செய்திருந்தது அருமையாக இருந்தது.
    அறிமுகத்திற்கு நன்றி.

     

  • At June 30, 2008 at 5:39 AM, Blogger pudugaithendral said…

    இந்த பிளாக்கில் சமீபகாலமாக மலையாள வாடை அதிகமாகவே வீசுகிறது. :)))))))

    கொஞ்சம் தெலுங்குப் பக்கமும் வந்தா நல்லா இருக்கும்.

     

  • At June 30, 2008 at 7:27 PM, Blogger nagoreismail said…

    பாரதிராஜாவின் வேதம் புதிது படத்திற்கு இசை அமைத்தவர் இவரா?

     

  • At June 30, 2008 at 7:44 PM, Blogger கானா பிரபா said…

    தல கோபி

    வருகைக்கு நன்றி

    புதுகைத் தென்றல்

    தெலுகு ஏரியாவை உங்க கிட்ட விடுறேன் ;-)
    சித்து படங்களை மட்டும் மைபிரண்ட் பார்த்துப்பாங்க

    கோகுலன்

    மர்றப்பாடல்களும் சிறப்பானவை, மீண்டும் கேட்டுப் பாருங்கள்

    நாகூர் இஸ்மாயில்

    வேதம் புதிது படத்துக்கு இசை தேவேந்திரன், இருவரின் பாடல்களுமே பெரும்பாலும் ஒரே மாதிரி இருக்கும்.

     

  • At June 30, 2008 at 11:51 PM, Blogger G.Ragavan said…

    இசையமைப்பாளர் ரவீந்திரன் சிறந்த பாடல்கள் பலவற்றிற்குச் சொந்தக்காரர். மலையாள மெல்லிசைச் சிற்பி என்று கூடச் சொல்லலாம்.

    மாலை வீடு வந்து பாடல்களையும் கேட்கிறேன். இப்பொழுது அலுவலகம் ஓடுகிறேன். :-)

     

  • At July 2, 2008 at 3:22 AM, Blogger கானா பிரபா said…

    வாங்க ராகவன், மலையாளத்தின் மெல்லிசை மன்னர் இவர் என்றால் மிகையில்லை.

     

  • At July 9, 2015 at 3:07 AM, Blogger Kathasiriyar said…

    தெளிந்த ஓடை போன்ற இசை இவருடையது. ஹிஸ் ஹைனஸ் அப்துல்லாவில் கர்நாடக சங்கீதம் மட்டுமல்லால் அந்த ஹிந்தி பாடலும் கலக்கும்.

     

  • At July 9, 2015 at 3:12 AM, Blogger Kathasiriyar said…

    தெளிந்த ஓடை போன்ற இசை இவருடையது. ஹிஸ் ஹைனஸ் அப்துல்லாவில் கர்நாடக இசை பாணியுடன் ஹிந்தி பாடலையும் கலக்கி அசத்தியிருப்பார். ரசிகன் ஒரு ரசிகையின் 'பாடி அழைப்பேன் உன்னை' எப்போதும் பிடித்த பாடல்...

     

Post a Comment
<< HOME
 
Thursday, June 26, 2008
மலையாளம் பறயும் கமல்ஹாசன்
அவரின் நடிப்புலக ஆரம்பத்தில் நிறைய மலையாளப் படங்களில் நடித்திருத்த காரணத்தினாலோ என்னவோ மலையாள சினிமா உலகு மீது கமல்ஹாசனுக்கு எப்போதுமே அலாதிப் பிரியம். சில மாதங்களுக்கு முன்னர் இவரின் "கமஹாசண்டே ரெண்டு திரைக்கதாக்கள்" என்ற மகாநதி, ஹேராம் திரைக்கதையும் மலையாளத்தில் நூலாக வெளியிடப்பட்டபோது தன் ஓய்வுகாலத்தைக் கேரளாவில் கழிக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தியிருந்தார். தசாவதாரம் பாடல் வெளியீட்டில் மம்முட்டியின் தனியாவர்த்தனம் திரைப்படத்தைத் தமிழில் நடிக்க ஆசை என்றும் மேடையில் சொல்லியிருக்கிறார்.

எண்பதுகளில் இவரின் நாயகன் திரைப்படம் கொடுத்த புகழும், வெற்றியும் இருந்தாலும் குறுகிய வர்த்தகச் சந்தை வாய்ப்புள்ள மலையாளத் திரையுலகிலும் டெய்சி, சாணக்யன் ஆகிய படங்களில் நடித்திருப்பார். சாணக்யன் திரைப்படம் பின்னர் தமிழில் மொழி மாற்றப்பட்டும் வெளியானது. இதோ சாணக்யன் மலையாளத் திரைப்படத்தில் இருந்து ஒரு காட்சி.

சாணக்கியன் படத்தின் ஆரம்பம்


சாணக்கியன் படத்தின் இறுதிக்காட்சி



கமல்ஹாசன் நடித்த மலையாளத் திரைப்படங்கள் சிலவற்றின் பாடற் காட்சிகள்

kanyakumari



Sathyan savithri



Madhanotsavam





Premabhishekam



Appoopan



Laalanam
posted by கானா பிரபா 9:54 PM   9 comments
 
9 Comments:
  • At June 26, 2008 at 5:10 AM, Blogger pudugaithendral said…

    ஜெயா டீவியில் கலக்கப்போவது கமல் நிகழ்ச்சியில் ஒரு முறை சில மலையாளப் படங்களில் நடித்துவிட்டு வந்த சூட்டோடு பாடிய பாடலில்
    மலையாள வாசம் வீச தமிழ் பாட்டு பாடியதாக சொல்லியிருந்தார்.

    அந்தப் பாட்டு ஞாயிறு ஒளி மழையில்

    கேட்டுப்பாருங்கள் தெரியும்.

     

  • At June 26, 2008 at 5:18 AM, Blogger MyFriend said…

    கலக்கல் பதிவு பிரபாண்ணா. :-)

     

  • At June 26, 2008 at 5:36 AM, Blogger ஆயில்யன் said…

    எண்டே மலையாளம் :))))

    //.:: மை ஃபிரண்ட் ::. said...
    கலக்கல் பதிவு பிரபாண்ணா. :-)
    //


    ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

     

  • At June 26, 2008 at 9:55 PM, Blogger கானா பிரபா said…

    தரிசனத்துக்கு நன்றி புதுகைத் தென்றல், மைபிரண்ட், ஆயில்யன்

     

  • At June 27, 2008 at 12:56 AM, Blogger வித்யாசாகரன் (Vidyasakaran) said…

    That wasn't 'njayiRu oLi mazhaiyil'.
    It was 'panneer pushpangaLe'!

     

  • At June 27, 2008 at 1:13 AM, Anonymous Anonymous said…

    //புதுகைத் தென்றல்: ஜெயா டீவியில் கலக்கப்போவது கமல் நிகழ்ச்சியில் ஒரு முறை சில மலையாளப் படங்களில் நடித்துவிட்டு வந்த சூட்டோடு பாடிய பாடலில்
    மலையாள வாசம் வீச தமிழ் பாட்டு பாடியதாக சொல்லியிருந்தார்.

    அந்தப் பாட்டு ஞாயிறு ஒளி மழையில்

    கேட்டுப்பாருங்கள் தெரியும்//

    அந்த பாடல் பன்னீர் புஷ்பங்களே". அதில் தான் மலையாள வாடை அதிகம்.

     

  • At June 27, 2008 at 1:17 AM, Blogger கோபிநாத் said…

    தல

    சாரி கொஞ்சம் லேட்டு...

    எங்க இருந்து தல இப்படி எல்லாம் எடுக்கிறிங்க...கலக்கல் ;))

     

  • At June 27, 2008 at 2:39 AM, Blogger ஆ.கோகுலன் said…

    மலையாள கமல் அறிமுகத்திற்கு நன்றி.
    அண்மைக்காலமாக உங்களுக்கு மலையாளப்பற்று அதிகரித்திருக்கிறது..!!!?? :)

     

  • At June 28, 2008 at 8:19 AM, Blogger கானா பிரபா said…

    சரியான பாடலை சொன்ன வித்யாசாகரன், அநானி நண்பருக்கு நன்றி

    தல

    எல்லாம் யூ டிபில் தான் ;)

    கோகுலன்

    மலையாளப் பற்றா அவ்வ்வ்

     

Post a Comment
<< HOME
 
Thursday, June 19, 2008
மீரா நந்தன் வருகவே :-(::)

மீரா ஜாஸ்மின் மாண்டலின் இசைக்கப் போய்விட்டார். கோபிகா அயர்லாந்துக்குப் போகிறாராம். பாவனா சுந்தரத் தெலுங்கில் பாட்டிசைக்கப் போய்விட்டார். மல்லுவூட் என்ன செய்யும்? இதோ புத்தம் புது தயாரிப்பு, மீரா நந்தன். இயக்குனர் பாசிலின் உதவி இயக்குனர்களாக இருந்து பின் இரட்டை இயக்குனர்களாக உருவெடுத்த லால் ஜோஷின் புதுப்படமான "முல்லா" மூலம் வலது காலை எடுத்து வைத்திருக்கிறார் மீரா நந்தன் ;-)
தமிழுக்கு "வால்மீகி" படம் மூலம் வருகிறார்.

இதோ முல்லா படத்தில் இருந்து வித்யா சாகர் இசையில் சில தேன் மெட்டுக்கள். கூடவே போனஸாக மீரா நந்தன் பறயும் பேட்டி ஒண்ணு கேட்டோ








posted by கானா பிரபா 4:13 AM   7 comments
 
7 Comments:
  • At June 19, 2008 at 5:42 AM, Blogger ers said…

    எப்டி சேட்டோ நிங்கள் மட்டும் இப்படி பறையுது... என்ட மோள் இப்போ ரேடியோஸ்பதியில் கானம் கேட்க துடிக்குது...

     

  • At June 19, 2008 at 5:43 AM, Blogger வந்தியத்தேவன் said…

    ம் மீரா நந்தனும் அழகாகத்தான் இருக்கின்றார். ஆனாலும் நம்ம அசினின் அழகிற்க்கு முன் அவ்வளவாக எடுபடவில்லை.

     

  • At June 19, 2008 at 5:46 AM, Blogger ஆ.கோகுலன் said…

    வீடியோஸ்பதி தன் பணியை செவ்வனே செய்து வருகிறது.. :))

     

  • At June 19, 2008 at 3:22 PM, Blogger கொழுவி said…

    முன் அவ்வளவாக எடுபடவில்லை.//

    ஓ.. சரி சரி...

     

  • At June 19, 2008 at 9:58 PM, Blogger ஆயில்யன் said…

    :))
    :))
    :))
    :))

     

  • At June 19, 2008 at 10:14 PM, Blogger இவன் said…

    படங்கள் மட்டுமல்ல பிகருகளும் தரமா தரும் போல இருக்கே கேரளா....

     

  • At June 20, 2008 at 4:06 AM, Blogger கானா பிரபா said…

    தமிழ் சினிமா

    கானம் பின்ன வரும் ;-)

    வந்தி

    அசின் நம்ம கையை விட்டு பாலிவூட் போய் ரொம்ப நாளாச்சு

    கோகுலன்

    பார்த்தால் பசி தீரும் என்பது வீடியோஸ்பதி தாரக மந்திரம்

    கொழுவி

    ;-)))


    ஆயில்ஸ்

    எதுக்கு முச்சிரிப்பு

    இவன்

    மெல்பனுக்கே வந்திருக்கிறியள், வாழ்க ;-)

     

Post a Comment
<< HOME
 
Saturday, June 14, 2008
தசாவதாரம் நானும் பார்த்தேன்
"உரக்கப் பேசும், உரக்க நடிக்கும் தமிழ் சினிமாவில் சற்று மென்மையாக, கற்பனையுடன், நம்பும் படி நடக்கும் கமல்ஹாசனிடம் தமிழில் நவசினிமாவில் உதயத்தை எதிர்பாக்கின்றேன்".
(சுஜாதாவின் கணையாழியின் கடைசிப்பக்கங்கள் அக்டோபர் 1976, இகாரஸ் பிரகாஸின் வலையில் மீள இட்டிருந்தார்).

இப்படம் குறித்த ஏற்கனவே வந்த எந்த விதமான வலையுலக விமர்சனங்களையோ, கதைச்சுருக்கத்தையோ வாசிக்காமல் இப்போது தான் தசாவதாரத்தை பார்த்துவிட்டு வந்திருக்கிறேன். ஒவ்வொருவர் பார்வையில் கமல்ஹாசன் குறித்த எதிர்ப்பார்ப்போ அல்லது இப்படத்தின் பிரமாண்டம் கொடுத்த எதிர்பார்ப்போ அவரவர் ரசனையைத் தீர்மானித்திருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை படத்தின் ஆரம்பம் முதல் முடிவுவரை கட்டிப் போட்டு விட்டது என்றுதான் சொல்வேன். தெனாலி பார்க்கப் போய் மகாநதி கமலைத் தேடுவதும், ஹேராம் பார்க்கப் போய் மைக்கேல் மதன காமராஜனைத் தேடுவதும் தான் விமர்சனமாக அமையும் என்றால் அதை இப்படத்திற்கு செய்ய மாட்டேன்.

சில உறுத்தல்களை மட்டும் சொல்லிவைக்கிறேன்.
1. சோழமன்னனாக வரும் நெப்போலியனின் "தமிள்"
2. கமல் - அசினின் நீளமான அலும்புகள்
3. சில காட்சிகளில் வரும் புஷ், ஜப்பானியன், நெட்டை மனிதன், வில்லன் வேடங்களின் அதீத மேக்கப் உறுத்தல்கள்.

படம் முடியும் போது வரும் திரைப்பட உருவாக்கத்தில் ஈடுபட்டோர் குறித்த எழுத்தோட்டங்களில் கதை விவாதக் குழுவில் அமரர் சுஜாதாவும் இருக்கிறார்.
32 வருடங்களுக்கு முன்னர் கணையாழியில் அவர் சொன்னதை அவரே மெய்ப்பிக்க உதவிப் போயிருக்கிறார்.

பி.கு: என் பார்வை எல்லோர் பார்வையை ஒத்திருக்கவேண்டும் என்ற எந்த வித அவசியமும் இல்லை.

எனக்கு பிடித்த தசாவதாரம் கமல்கள் ஒழுங்கின் படி
1.பூவராகன் என்னும் சமூகப் போராளி
2. ரங்கராஜன் நம்பி என்னும் வைணவ பக்தர்
3. பல்ராம் நாயுடு என்னும் குடிவரவு அதிகாரி
4. சிதம்பரம் கிருஷ்ணா பாட்டி
5. ஜப்பானிய அண்ணன்
6. பாடகர் அவதார் சிங்
7. பத்தடி உயர காலிஃபுல்லா
8. புஷ்
9.வில்லன்
10. கோவிந்தராஜன் என்னும் வழக்கமான முகம் மழித்த ஹீரோ



posted by கானா பிரபா 5:48 AM   17 comments
 
17 Comments:
  • At June 14, 2008 at 6:41 AM, Blogger MyFriend said…

    :-))

     

  • At June 14, 2008 at 6:44 AM, Blogger VSK said…

    ஒரிஜினல் கமலுக்குப் பத்தாவது இடத்தைக் கொடுத்தது 'நச்'சுன்னு இருக்கு!

    நவராத்திரியில் ஒரு சின்னச் சின்ன உடை, முடி அலங்காரங்கள் மூலமாகவே ஒன்பது குணச்சித்திரத்தைக் காட்டிய நடிகர்திலகத்துக்கும், இத்தனை மேக்க்கப் உதவியுடன் இவர் செய்திருக்கும் 10 வேஷங்களையும் ஒப்பிடும்போதுதான் நடிகர்திலகத்தின் பெருமை இன்னமும் வானளாவி உயர்ந்து நிற்கிறது.

     

  • At June 14, 2008 at 6:44 AM, Blogger ஜோ/Joe said…

    நன்றி கானா பிரபா!

     

  • At June 14, 2008 at 6:46 AM, Blogger ஆ.கோகுலன் said…

    //"உரக்கப் பேசும், உரக்க நடிக்கும் தமிழ் சினிமாவில் சற்று மென்மையாக, கற்பனையுடன், நம்பும் படி நடக்கும் கமல்ஹாசனிடம் தமிழில் நவசினிமாவில் உதயத்தை எதிர்பாக்கின்றேன்".
    //

    வாசிக்கும்போதே ஒரு எக்கோ செளண்ட் வருகிறது.
    அமரர் சுஜாதா..:(

    //தெனாலி பார்க்கப் போய் மகாநதி கமலைத் தேடுவதும், ஹேராம் பார்க்கப் போய் மைக்கேல் மதன காமராஜனைத் தேடுவதும் தான் விமர்சனமாக அமையும் என்றால் அதை இப்படத்திற்கு செய்ய மாட்டேன்.//

    கொன்னுட்டிங்க..! :)

     

  • At June 14, 2008 at 6:47 AM, Blogger VIKNESHWARAN ADAKKALAM said…

    :-))

    நானும் ஸிமைலிதான் போடுவேன்... பிறகு பத்தை பார்த்துட்டுதான் பின்னூட்டம்.

     

  • At June 14, 2008 at 6:50 AM, Blogger G.Ragavan said…

    கடைசியாச் சொன்னீங்களே.. அதுதான் என் கருத்தும். உண்மையான கமலுக்கு இறுதியிடம்தான்.

    படத்தின் சிறப்பே...தொடர்புச் சங்கிலிதான். தொடங்கியதில் இருந்து முடியும் வரையில் சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று ஓடுகிறது.

    மேக்கப் சரியில்லை. உறுத்தலாகத் தெரிகிறது. நவராத்திரியிலோ மைக்கேல் மதன காமராஜனிலோ இவ்வளவு மேக்கப் தேவையிருக்கவில்லையெ!!!!!

     

  • At June 14, 2008 at 6:54 AM, Blogger Samuthra Senthil said…

    தசாவதாரம் பற்றி நடிகை அசினின் சிறப்பு பேட்டியை நிருபர் வலைப்பூவில் வெளியிட்டுள்ளோம். வந்து ஒரு எட்டு பார்த்து படித்து விட்டு செல்லுங்கள் வாசகர்களே...!

     

  • At June 14, 2008 at 7:03 AM, Blogger பினாத்தல் சுரேஷ் said…

    //தெனாலி பார்க்கப் போய் மகாநதி கமலைத் தேடுவதும், ஹேராம் பார்க்கப் போய் மைக்கேல் மதன காமராஜனைத் தேடுவதும் தான் விமர்சனமாக அமையும் என்றால் அதை இப்படத்திற்கு செய்ய மாட்டேன்.//

    அருமை!

    உங்கள் டாப் டென்னுடன் ஒத்துப்போகிறேன். தலைவரை நினைவு கூர்ந்தமைக்கும் நன்றி.

     

  • At June 14, 2008 at 8:13 AM, Blogger கானா பிரபா said…

    மைபிரெண்ட்

    என்ன சிரிப்பான் ;-) மீ த பெஸ்ட்னு சொல்ல வேண்டியது தானே.

    வாங்க வி.எஸ்.கே

    நடிகர் திலகத்தோடு யாரும் ஒப்பிட முடியாதவர்கள். ஆனால் இந்த தசாவதாரம் கதைக்களமும், பாத்திரங்களின் படைப்பும் மேக்கப்பின் தேவையை உணர்த்தியே இருக்கின்றன. மேக்கப்பில் அசிரத்தை இருப்பதை ஏற்கிறேன்.

    வருகைக்கு நன்றி ஜோ

     

  • At June 14, 2008 at 8:17 AM, Blogger கானா பிரபா said…

    வருகைக்கு நன்றி கோகுலன்

    வாங்க விக்னேஸ்வரன்

    மைபிரண்ட் படம் பார்த்துட்டு தான் ஸ்மைலி போட்டாங்க. எதுக்கும் இப்பவே ஒரு பாதுகாப்புக்கு ஸ்மைலி போட்டுக்குங்க ;-)

    வாங்க ராகவன்

    படத்தின் விறுவிறுப்பு சொல்லியே ஆகணும். வி.எஸ்.கே அவர்களுக்கு சொன்னது தான் நவராத்திரி, மைக்கேல் மதன காமராஜன் பாத்திரப்படைப்புக்கள் வித்தியாசமானவை.

    சினிமா நிருபர்

    தங்கள் தகவலுக்கு நன்றி

    சுரேஷ்

    இப்பட முயற்சியில் ஒத்துழைத்த சுஜாதா சார் தற்போது இருந்து முழுமையான படத்தைப் பார்க்கவில்லையே என்ற மனப்பாரம் இறுதி எழுத்தோட்டம் வரும்போது ஏற்பட்டது.

     

  • At June 14, 2008 at 7:18 PM, Blogger Thiruu00 said…

    உரக்கப் பேசும், உரக்க நடிக்கும் தமிழ் சினிமாவில் சற்று மென்மையாக, கற்பனையுடன், நம்பும் படி நடக்கும் கமல்ஹாசனிடம் தமிழில் நவசினிமாவில் உதயத்தை எதிர்பாக்கின்றேன்".

     

  • At June 14, 2008 at 8:24 PM, Blogger Unknown said…

    எதிர்பார்ப்பு இல்லைன்னா ஏமாற்றம் இல்லைதானே? :)

    எதார்த்தமான விமர்சனம்..

     

  • At June 15, 2008 at 1:15 AM, Blogger ஆயில்யன் said…

    நல்லா இருக்கு :))

    நான் இன்னும் பார்க்கலை படத்தை ஒன்லி விமர்சனங்கள் மட்டும் படிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டேன்!

    ////தெனாலி பார்க்கப் போய் மகாநதி கமலைத் தேடுவதும், ஹேராம் பார்க்கப் போய் மைக்கேல் மதன காமராஜனைத் தேடுவதும் தான் விமர்சனமாக அமையும் என்றால் அதை இப்படத்திற்கு செய்ய மாட்டேன்.//

    நானும் கூட முதலில் இதில் ஹேராமினை தேடினேன் :)

     

  • At June 15, 2008 at 2:40 AM, Blogger கோபிநாத் said…

    தல

    சுருக்கமாக சொன்னாலும் சூப்பராக சொன்னிங்க ;))


    \\தெனாலி பார்க்கப் போய் மகாநதி கமலைத் தேடுவதும், ஹேராம் பார்க்கப் போய் மைக்கேல் மதன காமராஜனைத் தேடுவதும் தான் விமர்சனமாக அமையும் என்றால் அதை இப்படத்திற்கு செய்ய மாட்டேன்.
    \\\

    சூப்பர் தல...சும்மா நச்சுன்னு சொன்னிங்க ;))

     

  • At June 15, 2008 at 4:01 AM, Blogger சுரேகா.. said…

    நல்லா சொல்லியிருக்கீங்க அண்ணா!


    எப்பவும் கமல் சார் அப்படித்தான்.

    அருகில் இருந்து பார்த்தவர்களுக்கு மட்டுமே அவர் பிரம்மாண்டம் புரியும்.

     

  • At June 15, 2008 at 6:09 AM, Blogger கானா பிரபா said…

    திரு, தஞ்சாவூரான், ஆயில்யன், தல கோபி, சுரேகா

    மிக்க நன்றி ;-))

     

  • At June 15, 2008 at 6:27 AM, Blogger சி தயாளன் said…

    //தெனாலி பார்க்கப் போய் மகாநதி கமலைத் தேடுவதும், ஹேராம் பார்க்கப் போய் மைக்கேல் மதன காமராஜனைத் தேடுவதும் தான் விமர்சனமாக அமையும் என்றால் அதை இப்படத்திற்கு செய்ய மாட்டேன்.//

    சரியாகச் சொன்னீர்கள்..! கதாநாயகன் கமல் அதீத heroism காட்டாமல், தன்னால் முடிஞ்ச அளவு மட்டும் போராடுவதாக காட்டியிருப்பதுதான் கமலின் சாணக்கியதனம்.. உதாரணம் கிளைமாக்ஸ் காட்சி..!

     

Post a Comment
<< HOME
 
Friday, June 13, 2008
கமல் ஹாஸ்யம் 10
கமல்ஹாசனின் சீரியஸ் நடிப்புக்குப் பல உதாரணங்கள் போல, நகைச்சுவை நடிப்பிலும் அதீத ஈடுபாடு கொண்டு பல படங்களில் நடித்தவர். கிரேசி மோகன் வசனக் கூட்டணியில் மிகவும் அதிகமான படங்களில் நடித்த நட்சத்திரமும் இவரே. நடிகர் கமல்ஹாசனின் நகைச்சுவைப் பாத்திரப் படைப்புக்களில் சிலவற்றை இங்கே பகிர்கின்றேன்.

புன்னகை மன்னன் (1986)
கதாபாத்திரம்: சாப்ளின் செல்லப்பா




மைக்கேல் மதன காமராஜன் (1991)
கதாபாத்திரம்: காமேஸ்வரன்




சிங்காரவேலன் (1992)
கதாபாத்திரம்: வேலன்




சதிலீலாவதி (1995)
கதாபாத்திரம்: சக்திவேல் கவுண்டர்




அவ்வை சண்முகி (1996)
கதாபாத்திரம்: சண்முகி மாமி




காதலா காதலா (1998)
கதாபாத்திரம்: ராமலிங்கம்




தெனாலி (2000)
கதாபாத்திரம்: தெனாலி சோமன்




பஞ்சதந்திரம் (2002)
கதாபாத்திரம்: ராம்




பம்மல் கே சம்பந்தம் (2002)
கதாபாத்திரம்: பம்மல் கே சம்பந்தம்



வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் (2004)
கதாபாத்திரம்: ராஜா

posted by கானா பிரபா 2:34 AM   7 comments
 
7 Comments:
  • At June 13, 2008 at 4:56 AM, Blogger M.Rishan Shareef said…

    சூப்பர் கலக்கல் பதிவு கானாபிரபா..
    ரொம்பவும் ரசித்தேன்.
    நன்றி நண்பரே :)

     

  • At June 13, 2008 at 4:57 AM, Blogger M.Rishan Shareef said…

    ஊர்வசி,கோவை சரளா ரெண்டு பேரும் கமலுடனான காமெடிக்குச் சூப்பரான ஜோடிகள் :)

     

  • At June 13, 2008 at 5:49 AM, Blogger Sanjai Gandhi said…

    கல்க்கபோவது யாரு...
    நிலைக்க போவது யாரு...
    தலைவர் சும்மா கலக்கறார்ல? :))

    நல்ல தொகுப்பு.. கலக்குங்க கானா.:)

     

  • At June 13, 2008 at 9:11 AM, Blogger கப்பி | Kappi said…

    சூப்பரு :)))


    தல..காதலா காதலா லிங்கம் சிவம் லேது :))

     

  • At June 13, 2008 at 9:20 AM, Blogger சின்னப் பையன் said…

    சூப்பர் தொகுப்பு...

     

  • At June 14, 2008 at 12:14 AM, Blogger ஆ.கோகுலன் said…

    கலக்கல் தொகுப்பு நான் நிரம்பவும் ரசிப்பது மை.ம.கா.ரா. தான். அதில்வரும் பாலக்காட்டு தமிழ் கலக்கல்.

     

  • At June 14, 2008 at 7:43 AM, Blogger கானா பிரபா said…

    ரிஷான்

    நீங்கள் சொன்னது போல் ஊர்வசியும் கோவை சரளாவும் தான் நகைச்சுவை கமலுக்கான சிறந்த ஜோடிகள்.

    சஞ்சய்

    மிக்க நன்றி, கலக்கப் போவது நம்மவரே தான் ;-)

    சினிமா நிருபர்

    தங்கள் தகவலுக்கு நன்றி

    கப்பிபய

    சுட்டிக் காட்டியதுக்கு நன்றி தல ;-) திருத்திட்டேன்.

    சின்னபையன், கோகுலன்

    வருகைக்கு மிக்க நன்றி

     

Post a Comment
<< HOME
 
Thursday, June 12, 2008
எனக்குப் பிடித்த 10 கமல்(கள்)

தசாவதாரம் வரும் வேளை, தமிழில் எனக்கு மிகவும் பிடித்தமான நாயகன் கமலின் படங்களில் பத்துப் படங்களின் கதாபாத்திரங்களை இங்கே காட்சிப்படுத்துகின்றேன்.
இவற்றைத் தவிர மேலும் வறுமையின் நிறம் சிகப்பு, பதினாறு வயதினிலே, இந்தியன் என்று பட்டியல் நீண்டாலும் என்னைப் பொறுத்தவரை அவையெல்லாம் இந்தப் பட்டியலின் பின்னர் தான் வைத்துப் பார்ப்பேன். இங்கே கொடுக்கப்பட்டவை தரவரிசையில் அமைந்தவை அல்ல. வெளிவந்த ஆண்டுகள் வரிசையில் இருக்கின்றன.
Youtube மூலத்தொடுகை கொடுத்தவர்களுக்கு தனித்தனியான நன்றிகள்.

மூன்றாம் பிறை (1982)
கதாபாத்திரம்: சிறீனிவாசன் என்னும் பள்ளி ஆசிரியர்




சலங்கை ஒலி/சாகர சங்கமம் (1983)
கதாபாத்திரம்: பாலகிருஷ்ணா என்னும் நடனத்தில் சாதிக்கத் துடிக்கும் இளைஞன்




நாயகன் (1987)
கதாபாத்திரம்: வேலுநாயக்கர் என்னும் பாதுகாவலன்




சத்யா (1988)
கதாபாத்திரம்: சத்தியமூர்த்தி என்னும் வேலையில்லாப் பட்டதாரி




அபூர்வ சகோதரர்கள் (1989)
கதாபாத்திரம்: அப்பு என்னும் குள்ள மனிதன்




இந்திரன் சந்திரன் (1990)
கதாபாத்திரம்: இந்திரன் என்னும் வில்லத்தனமான மேயர்




மைக்கேல் மதன காமராஜன் (1991)
கதாபாத்திரம்: காமேஸ்வரன் என்னும் பாலக்காட்டு ஐயர்




குணா (1992)
கதாபாத்திரம்: குணா என்னும் மனப்பிறழ்வு கொண்டவன்




மகாநதி (1993)
கதாபாத்திரம்: கிருஷ்ணா என்னும் அன்பான அப்பாவித் தந்தை




அன்பே சிவம் (2003)
கதாபாத்திரம்: நல்லசிவம் என்னும் சமூக சீர்திருத்தவாதி


posted by கானா பிரபா 2:00 AM   28 comments
 
28 Comments:
  • At June 12, 2008 at 4:45 AM, Blogger MyFriend said…

    என்னுடைய பத்து:

    மைக்கல் மதன காமராஜன்
    அபூர்வ சகோதரர்கள்
    அன்பே சிவம்
    கல்யாண ராமன்
    அவ்வை சண்முகி
    மூன்றாம் பிறை
    தேவர் மகன்
    புன்னகை மன்னன்
    இந்தியன்
    நாயகன்

     

  • At June 12, 2008 at 4:54 AM, Blogger VIKNESHWARAN ADAKKALAM said…

    சூப்பர் அண்ணாச்சி..

     

  • At June 12, 2008 at 4:57 AM, Blogger VIKNESHWARAN ADAKKALAM said…

    தேவர் மகன் படத்தில் ஒரு காட்சி இருக்கும். சிவாஜி இறந்துவிடுவார். அப்பொழுது 'என்ன ஆச்சி'னு சொல்லிகிட்டு ஓடி வருவார் பாருங்க... சூப்பரான காட்சி அது...

     

  • At June 12, 2008 at 4:59 AM, Blogger முரளிகண்ணன் said…

    இது 1 முதல் 10 வரையா? இல்லை மிகப்பிடித்த பத்தா? எப்படியானாலும் அருமை

     

  • At June 12, 2008 at 5:01 AM, Blogger puduvaisiva said…

    Very Nice Prabha

    thank you

    puduvai siva.

     

  • At June 12, 2008 at 5:14 AM, Blogger ஹேமா said…

    ஐயோ பிரபா...என்னைப் போலவே நீங்களும் கமல் பைத்தியமா!!!!!!!மூன்று முடிச்சு,நிழல் நிஜமாகிறது, உயர்ந்தவர்கள்,வாழ்வே மாயம், குருதிப்புனல்...இன்னும் இன்னும். எங்களுக்காக அதாவது ஈழத் தமிழருக்காக அவர் எதுவும் செய்தது இல்லைதான்.நளதமயந்தி,
    தெனாலியில் எங்களைக் கேலி செய்தது மாதிரியும் நடித்திருக்கிறார். என்றாலும் நடிப்பிற்கு நாயகன்.வாழ்க கமல்.பிரபாவுக்கு நன்றி. தசாவதாரத்திற்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.

     

  • At June 12, 2008 at 5:14 AM, Blogger மாயா said…

    thanks :))

     

  • At June 12, 2008 at 5:15 AM, Anonymous Anonymous said…

    Superb list :)

     

  • At June 12, 2008 at 5:21 AM, Blogger ஆ.கோகுலன் said…

    குணா ஏன் அவ்வளவு பின்னுக்கு..?!
    விருமாண்டியையும் எதிர்பார்த்தேன்..

     

  • At June 12, 2008 at 5:53 AM, Blogger கானா பிரபா said…

    மைபிரண்ட்

    அப்படியே ஏதாவது ஸ்பெஷல் ஷோ போடலாமே ;-)

    வாங்க விக்னேஸ்வரன்

    தேவர் மகன் விலக்கமுடியாதது தான், அருமையான படைப்பு அது.

    //முரளிகண்ணன் said...
    இது 1 முதல் 10 வரையா? இல்லை மிகப்பிடித்த பத்தா? எப்படியானாலும் அருமை//

    முரளி கண்ணன்

    இது தரவரிசையில் இல்லை, ஆண்டு வரிசையில் இட்டிருக்கிறேன்.

    மிக்க நன்றி புதுவை சிவா

     

  • At June 12, 2008 at 6:06 AM, Blogger கானா பிரபா said…

    ஹேமா

    கமலை வைத்து அவரால் மட்டும் தனித்துவமாக நடிக்கக்கூடிய பாத்திரங்கள் உங்கள் பட்டியலோடு நிறையவே இருக்கின்றன. நடனத்தில் இருந்து நடிப்புக்கு தாவியபோது முழுமையாக அதை நேசித்தார். அதன் விளைவே இப்படியான நல்ல படங்கள்.

    வருகைக்கு நன்றி மாயா

    நன்றி தூயா

    கோகுலன்

    நான் பின்னுக்கு தள்ளேல்லை, படம் வந்த ஒழுங்கில் போட்டிருக்கிறன் ;)

     

  • At June 12, 2008 at 8:59 AM, Anonymous Anonymous said…

    பேசும் படம் இல்லையா

     

  • At June 12, 2008 at 1:13 PM, Blogger கோபிநாத் said…

    தல

    சூப்பர் பத்து ;))

    வேற என்ன சொல்ல!!??

    இப்போதைய பத்தை பார்க்க நாளை போகிறேன் ;))

     

  • At June 12, 2008 at 3:31 PM, Blogger யாத்ரீகன் said…

    as Dr.Bruno said.. Paesum Padam/Pushpak is a class..

    and Kurudhipunal is just awesome bodylanguage from him

     

  • At June 12, 2008 at 3:33 PM, Blogger பாலராஜன்கீதா said…

    பின்னூட்டமிட்டவர்கள் எழுதிய படங்களுடன் களத்தூர் கண்ணம்மா, சதி லீலாவதி மரோசரித்ரா, ஏக் துஜே கே லியே, சிப்பிக்குள் முத்து (ஸ்வாதி முத்யம்) எங்களுக்குப் பிடித்தமானவை

     

  • At June 12, 2008 at 4:30 PM, Blogger U.P.Tharsan said…

    ahh supper

     

  • At June 12, 2008 at 6:47 PM, Blogger SurveySan said…

    நல்ல வரிசை.

    வ.நி.சிவப்பு
    உ.மு.தம்பி
    கு.புணல்
    போன்ற படங்களும் நல்லாவே பண்ணியிருப்பாரு.

     

  • At June 12, 2008 at 7:07 PM, Blogger ஜோ/Joe said…

    நம்மவர் நடித்ததில் 10 படங்களை தேர்ந்தெடுப்பது சிரமம் ..ஆனாலும் அதை கச்சிதமாக செய்திருக்கிறீர்கள்.

     

  • At June 12, 2008 at 7:40 PM, Blogger சுரேகா.. said…

    போறபோக்குல...அற்புதமான 10 கமல்களை ஞாபக அடுக்குகளிலிருந்து எடுத்து தந்திருக்கிறீர்கள்.

    சூப்பரு!

     

  • At June 12, 2008 at 10:06 PM, Blogger இறக்குவானை நிர்ஷன் said…

    சூப்பர் பிரபா! அசத்தல் அசத்தல் அசத்தல்!!!!!!!

     

  • At June 12, 2008 at 10:11 PM, Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said…

    வரிசைப்படுத்தறது கஷ்டம் தான்..
    இருந்தாலும் இதும் நல்ல கலெக்ஷன்.
    என் விருப்பம்.. மைக்.ம.கா
    அன்பேசிவம்

     

  • At June 12, 2008 at 10:41 PM, Blogger Sridhar V said…

    கமல் படங்களை கூர்ந்து பார்ப்பதாலோ என்னவோ ஒரு காட்சிக்கு அவர் எப்படியான நடிப்பை தருவார் என்று நமக்கு எதிர்பார்ப்புகள் அதிகமாகின்றன. உங்கள் வரிசையோடு ஒத்து போகும் சில பாத்திரப் படைப்புகள் -

    அவள் அப்படித்தான் - முற்போக்கு சிந்தனையோடு வரும் இளைஞன் பிற்பாடு மிகச் சாதாரணனாக் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் hypocryte இளைஞன்.

    சிப்பிக்குள் முத்து - இன்றும் கண்ணில் நீரை வரவழைக்கும் நடிப்பு.

    மீண்டும் கோகிலா - spontanity என்று சொல்வார்களே அந்த மாதிரி ஒரு performance. காமேச்வரனுக்கு முன்னோடி என்று சொல்லலாம்.

    துக்கடாவாக - மணக் கணக்கு என்னும் விஜய்காந்த் படத்தில் அருமையாக ஒரு கௌரவ வேடம் செய்திருப்பார். மிக அருமை.

    தப்புத் தாளங்களில் - தெலுங்கு பேசிக்கொண்டு ஒரு கௌரவ வேடம்.

    அவருக்கு 'வேட்டையாடு விளையாடு' படத்திற்கு விருது கொடுக்காமல் இருந்திருக்கலாம் :-)

     

  • At June 13, 2008 at 1:28 AM, Anonymous Anonymous said…

    கலக்கீட்டிங்க

     

  • At June 13, 2008 at 1:29 AM, Anonymous Anonymous said…

    கலக்கீட்டிங்க

     

  • At June 13, 2008 at 2:00 AM, Blogger வந்தியத்தேவன் said…

    என‌க்கு சகல கமலையும் பிடிக்கும். குறிப்பாக நகைச்சுவையில் பின்னி எடுக்கும் வசூல்ராஜா, பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம், சத்லீலாவதி கமல்கள்.

    ஆனாலும் ந‌டிப்பு என்று பார்க்கும்போது.
    1. நாய‌க‌ன் வேலு நாய‌க்க‌ர்
    2. அன்பே சிவ‌ம் ந‌ல்ல‌சிவ‌ம்
    3. வேட்டையாடு விளையாடு ராக‌வ‌ன்
    4. விருமாண்டி விருமாண்டி
    5. மைக்கல் மதன காமராஜன் காமேஸ்வரன்
    6. சதிலீலாவதி கமல்
    7. உன்னால் முடியும் தம்பி உதயமூர்த்தி
    8. புன்னகை மன்னன் சாப்ளீன்
    9. அபூர்வ் சகோதரர்கள் அப்பு
    10. தசாவதாரம் பூவ‌ராக‌வ‌ன்

     

  • At June 14, 2008 at 7:40 AM, Blogger கானா பிரபா said…

    //புருனோ said...
    பேசும் படம் இல்லையா//

    பேசும் படம் நல்ல படம் தான், என் விருப்பப் பட்டியலில் இவற்றுக்கு அடுத்து தான் அது.

    தல கோபி
    நன்றி

    யாத்ரீகன்

    குருதிப்புனல் படம், கமல் போட்ட காக்கிச்சட்டை வேடங்களில் முதன்மையானது.

    பாலராஜன் கீதா, யூபி தர்சன், சர்வேசன், ஜோ, சுரேகா, நிர்ஷான், சிறீதர் நாராயணன், கயல்விழி முத்துலெட்சுமி, பாரிஸ்திவா, வந்தியத்தேவன்

    உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

     

  • At June 15, 2008 at 10:57 AM, Anonymous Anonymous said…

    மிக அருமையான தேர்வுகள்.நன்றி.

     

  • At June 15, 2008 at 4:07 PM, Blogger தமிழன்-கறுப்பி... said…

    சூப்பரு... சலங்கை ஒலி அந்த காட்சி மறக்க முடியாதது...
    "பஞ்ச பூதங்களும் முகவடிவாகும்..."கமலை அது போல இன்னொரு படம் குடுக்க சொல்லணும்...

     

Post a Comment
<< HOME
 
Saturday, June 7, 2008
பச்சப்பனம் தத்தே பொன்னாரப்பூ முத்தே...!
M.ஜெயசந்திரன் மலையாளத்தில் தற்போதைய முன்னணி இசையமைப்பாளராக விளங்கிவருகின்றார். கே.ஜே.ஜேசுதாஸ் சிட்னி வந்திருந்த போது தன் இசை நிகழ்ச்சியிலும் இவரைப் பற்றி சிலாகித்துச் சொல்லிப் பாடிய பாடலை இன்றைய வீடியோ பதிவாக்குகின்றேன்.

"பச்சப்பனம் தத்தே" என்னும் இந்த இனிமையான பாடல் நோட்டம் என்னும் திரைப்படத்தில் பொன்குணம் தாமோதரன் இயற்ற கே.ஜே.ஜேசுதாஸ் தனிப்பாடலாகவும், சித்ரா தனிப்பாடலாகவும் பாடியிருக்கின்றார்கள். இசை வழங்கியிருப்பவர் எம்.ஜெயச்சந்திரன். ஒரு கிராமிய நாட்டுப்பாடல் வடிவில் தாலாட்டாக வரும் இந்தப் பாடல் என்றும் கேட்க இதமானது. இந்தப் பாடலைக் கேட்டதுமே இப்படத்தின் ஒரிஜினல் டி.வி.டியையும் வாங்கி வைத்துவிட்டேன். இனிமேல் தான் படத்தைப் பார்க்கவேணும்.

இந்தப் பாடலுக்கான கேரள அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது பொன்குணம் தாமோதரனுக்கு கிடைத்தது. இதே படத்தில் வேறு ஒரு பாடலான மெல்லே மெலே பாடலைப் பாடிய இசையமைப்பாளர் எம்.ஜெயசந்திரனுக்கும் (சிறந்த பாடகர்), மயங்கி போயி என்ற பாடலைப் பாடிய சித்ராவுக்கும் (சிறந்த பாடகி) கேரள மாநில விருதுகள் கிடைத்தன.


நியூயோர்க்கில் இருந்து சபிதா ஜேசுதாஸ் பாடுகின்றார்


ஒரு சிறுமி பாடுகிறார்
posted by கானா பிரபா 6:20 AM   7 comments
 
7 Comments:
  • At June 7, 2008 at 10:14 AM, Blogger ஆயில்யன் said…

    ஏற்கனவே கேட்ட அனுபவ இருக்கறதால் சூப்பர் பாட்டுன்னு சொல்லலாம் ( மல்லுக்கள் இத பாடச்சொன்ன அப்படியே பாடிக்கிட்டே இருக்காங்கங்க! )

    ஆமாம் எப்படி உங்களுக்கு ஒரு பாட்டு இவ்ளோ வெரைட்டியா கிடைக்குது? ( ஸ்ரேயா கோஷலுக்கு நான் தேடி தேடி தவிச்சுப்போறேன் எனக்கு மட்டும் ரகசியமாம் சொல்லலாமே!?)

     

  • At June 7, 2008 at 10:15 AM, Blogger ஆயில்யன் said…

    //நியூயோர்க்கில் இருந்து சபிதா ஜேசுதாஸ் பாடுகின்றார்//
    இவுங்க யாருங்க?

    நிறைய பாட்டு இவுங்க பாடி இருக்காங்க போல இது மாதிரி ??

     

  • At June 7, 2008 at 5:20 PM, Blogger கோபிநாத் said…

    ஆகா...ஆகா...சூப்பர் பாட்டு ;))

    தல

    இந்த பாட்டை பத்தி நாம ஏற்கனவே பேசியிருக்கோம்.

    இந்த பாட்டை கேட்டவுடன் எப்படி எடுத்திருப்பாங்கன்னு ஆவலுடன் சிடி வாங்கி பார்த்தேன். மிக அழகாக இயற்கையான இடங்களில் எடுத்திருப்பாங்க..;)))

    நான் நினைத்தது போலவே அந்த நாயகி அழகாக பாவடையை பிடிச்சிக்கிட்டு அழகாக ஆடியிருப்பா ;))

     

  • At June 7, 2008 at 5:22 PM, Blogger கோபிநாத் said…

    \\மயங்கி போயி என்ற பாடலைப் பாடிய சித்ராவுக்கும் (சிறந்த பாடகி) கேரள மாநில விருதுகள் கிடைத்தன.\\\

    ஆகா...நான் சுஜாதான்னு நினைச்சேன்.!

    இதே பாட்டு நாயகி மட்டும் பாடுவது போல வரும்..கிடைத்தல் அதையும் போடுங்க தல ;)

     

  • At June 7, 2008 at 8:05 PM, Blogger ஆ.கோகுலன் said…

    அழகான பாடல், அழகழகான காட்சிகள் வேறு. அறிமுகத்திற்கு நன்றி.


    இசையமைப்பாளர் ஜெயச்சந்திரனை வேறும் தொலைக்காட்சிப் போட்டிகளிலும் கவனித்திருக்கிறேன். திறமையானவர் தான்.
    சபிதா பாடுவதும் அருமை. கமராவைப்பார்க்கும் விதம்தான் கொஞ்சம் மிரட்டலாகவுள்ளது. :)

    சிறுமியினதில் ஒலித்தரம் சரியில்லை.

    //இந்தப் பாடலைக் கேட்டதுமே இப்படத்தின் ஒரிஜினல் டி.வி.டியையும் வாங்கி வைத்துவிட்டேன். //

    இவ்வாறு ஒருபாடலுடன் படத்தை தீர்மானிப்பது ஆபத்தானதாகவும் முடியலாம்!. :)

    குறிப்பு :- உங்களுக்கு பிற்காலத்தில் கேரளாவில் செட்டிலாகும் ஐடியா உள்ளதா..?!!

     

  • At June 7, 2008 at 9:32 PM, Anonymous Anonymous said…

    Although it's a good song, its actulay a remix song from old 70's.It was critized by various old age singers for killing the soul of the song. The original track was introduced on comunist drama stages and later 70's it got filmed with the music of devarajan master.

     

  • At June 8, 2008 at 7:31 AM, Blogger கானா பிரபா said…

    // ஆயில்யன் said...
    ஆமாம் எப்படி உங்களுக்கு ஒரு பாட்டு இவ்ளோ வெரைட்டியா கிடைக்குது?//

    ஆயில்ஸ்

    தொழில் ரகசியம் அது ;-)
    சபிதா ஜேசுதாஸ் ஒரு வெளிநாட்டில் வசிக்கும் பாடகி போல இருக்கு. மேலதிக விபரம் தெரியல.

    //கோபிநாத் said...
    ஆகா...ஆகா...சூப்பர் பாட்டு ;))

    தல

    இந்த பாட்டை பத்தி நாம ஏற்கனவே பேசியிருக்கோம்.//

    ஆமா தல, போன ஓணம் ஸ்பெஷலா இந்தப் பாடலை றேடியோஸபதியிலும் போட்டேனே.
    நீங்க கேட்ட பாட்டுக்களும் வரும்.

    // ஆ.கோகுலன் said...
    அழகான பாடல், அழகழகான காட்சிகள் வேறு. அறிமுகத்திற்கு நன்றி.//

    வாங்கோ கோகுலன், பாட்டைக் கேட்டதும் சீடியை வாங்கவேணும் போல தோன்றியது, அவ்வளவு தான் ;)

    கேரளாவில் செட்டிலாகும் எண்ணம் அடுத்த பிறவியில் உண்டு ;-)

    // Anonymous said...
    Although it's a good song, its actulay a remix song from old 70's.//

    வணக்கம் நண்பரே

    நீங்கள் சொன்னவிடயங்கள் எனக்கு புதிய தகவல்கள், அந்த மூலப்பாடலையும் தேடி எடுத்துக் கேட்கவேணும் போல இருக்கிறது.

     

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
ஆயில்ஸ் வாழணும் நூறு ஆயுள்ஸ்
எஸ்.எஸ்.சந்திரன் மறைவில்
சாதித்துக் காட்டி நெகிழ வைத்த அபிநயா
அன்று கேட்டவை இன்று புத்தம் புதிதாய்
மண மேடையில் .:: மை பிரண்ட்::.
2009 சிறந்த மலையாள கானங்கள்
ஆயில்யன் - 1980
"மதுரை to தேனி வழி ஆண்டிப்பட்டி" சுகமான பயணம்
கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்
"காற்றில் எந்தன் கீதம்" ஒரு சிலாகிப்பு
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது