வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Friday, September 26, 2008
தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை
யாழ்ப்பாணத்தின் ஊரெழு என்ற சிற்றூரின் மைந்தன், யாழ்பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் இராசையா பார்த்திபன் என்னும் லெப்டினட் கேணல் திலீபன் தியாக தீபமாய் மறைந்து இன்றோடு 21 ஆண்டுகள் கழிந்து விட்டன.

சிறீலங்கா ராணுவத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக தம் உயர்கல்வியை உதறித்தள்ளி ஆயுதப் போராட்டமே சரியான வழி என்ற வகையில் அணி திரண்டவர்களில் திலீபன் அண்ணாவும் ஒருவர்.

ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்மக்களின் வாழ்வாதாரங்கள் காகிதத்தில் மட்டும் பேசப்பட்ட போது ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து அறவழிப்போராட்டத்திலும் தன் பங்கைக் காட்டியவர் திலீபன் அண்ணா.

1. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2. சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3..அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
4. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5. தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

என்பனவே அந்தக் கோரிக்கைகள். அந்தக் கோரிக்கைகள் இன்னும் தொடர்கின்றன.

பாடசாலைகளே திரண்டு நல்லூருக்குப் படையெடுத்து திலீபன் அண்ணாவின் நீராகாரம் கூட அருந்தாத அறவழிப் போராட்டத்தைக் காணச் சென்றபோது காற்சட்டைப் பையனாய் அவரைப் போய்ப் பார்த்த காலம் இன்னும் பசுமையாய் இருக்கு. அந்தப் பன்னிரண்டாம் நாள் இதே நாள், 21 வருஷத்துக்கு முன்னர் நிதர்சனம் தொலைக்காட்சியில் தியாகி திலீபன் அண்ணாவின் வெற்றுடல் சாய்ந்திருக்க, அவரை பரிசோதிக்க நிதமும் வரும் வைத்தியர், சோதித்து விட்டு அவரைக் மூன்று முறை கும்பிட்டவாறே அப்படியே அசையாது நிற்க, முன்னே குழுமியிருந்த மக்கள் குமுறிக்கொண்டே பேரிரைச்சலோடு அழுது தொலைத்த கணங்கள் அவை.

அந்தப் பன்னிரண்டு நாட்களை கவிஞர் வாஞ்சிநாதன் அவர்கள் "திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்" என்ற நூலினை எழுதியிருக்கின்றார். அதனை யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் குரல்வடிவம் கொடுத்துத் தயாரித்ததை இங்கே பகிர்கின்றேன்.

முதலாம் நாள்



இரண்டாம் நாள்



மூன்றாம் நாள்



நான்காம் நாள்



ஐந்தாம் நாள்



ஆறாம் நாள்



ஏழாம் நாள்



எட்டாம் நாள்



ஒன்பதாம் நாள்



பத்தாம் நாள்



பதினோராம் நாள்



பன்னிரண்டாம் நாள்



தியாகி திலீபன் முழு ஆவணத் தொகுப்பு



ஒலித்தொகுப்பு நன்றி: யாழ் இந்து பழைய மாணவர் சங்கம்

புகைப்படங்கள் நன்றி: அகிலன் தளம், இலங்கை தமிழ் சங்கம் அமெரிக்கா

Labels:

posted by கானா பிரபா 4:10 AM  
 
8 Comments:
  • At September 26, 2008 at 4:38 AM, Blogger ers said…

    பாடசாலைகளே திரண்டு நல்லூருக்குப் படையெடுத்து திலீபன் அண்ணாவின் நீராகாரம் கூட அருந்தாத அறவழிப் போராட்டத்தைக் காணச் சென்றபோது காற்சட்டைப் பையனாய் அவரைப் போய்ப் பார்த்த காலம் இன்னும் பசுமையாய் இருக்கு.///

    இது தியாகத்தின் வெளிப்பாடு... தமிழிழம் மலர இன்று பிரார்த்திப்போம்

     

  • At September 26, 2008 at 4:39 AM, Blogger ஆயில்யன் said…

    பிறருக்கென வாழ்ந்தவர் இறந்துமே இருக்கின்றார்!


    இறக்கும் வேளையில் இவர் நினைத்த கனவுகள் பிறக்கும் வேளை எதிர்நோக்கி காத்திருக்கும் ஈழ சகோதரர்கள் நினைத்தது நடக்கட்டும்!

     

  • At September 26, 2008 at 5:12 AM, Anonymous Anonymous said…

    எங்க சாமி ..

     

  • At September 26, 2008 at 5:54 AM, Blogger King... said…

    :(

     

  • At September 26, 2008 at 6:55 AM, Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said…

    :(

     

  • At September 26, 2008 at 3:07 PM, Blogger G.Ragavan said…

    வாழ்ந்தவர் கோடி
    மறைந்தவர் கோடி
    மக்களின் மனதில் நிற்பவர் யார்
    ஆறிலும் சாவு நூறிலும் சாவு
    தாயகம் காப்பது கடமையடா

    அணைந்த விளக்குகள்...தாங்கள் ஏற்றி வைத்த விளக்குகளில் ஜொலிக்கின்றன.

     

  • At September 27, 2008 at 7:50 AM, Blogger ஹேமா said…

    நான் நேரடியாகக் காணவில்லை திலீபனை.சந்தர்ப்பம் இல்லை.நிகழ்வு கேட்டு மனம் கனத்தது பிரபா.நன்றி...நன்றி

     

  • At September 27, 2008 at 8:36 AM, Blogger தமிழன் said…

    இப்படியே எத்தனை பேர் இன்னுயிர் நீத்தாலும் வேடிக்கை தான் பார்க்கும் இந்த மனிதாபிமானம் இல்லாத உலகம். வெட்கம் கெட்வர்கள் இந்த கொடுமையை என்று கண்டு மாறுவார்களோ?
    நல்ல உள்ளங்கள் பிராத்தனையில் தமிழீழம் நிச்சயம் வெல்லும்.

     

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
மொழி தாவிய மெட்டுக்கள் "சங்கத்தில் பாடாத கவிதை"
மங்களூர் சிவாவுக்கும் ஜெர்மன் பூங்கொடிக்கும்
"பூங்காற்று புதிதானது" கமலுக்கு ஹிந்தி ரஜினிக்கு த...
"கே.ஆர்.எஸ் சிறப்பு" கண்ணன் பாட்டுக்கள்
சுப்ரமணியபுரம் நாயகி வந்த கதை
பிடித்த ரஜினி பத்து...!
.:: மை ஃபிரண்ட் ::. இன் ஹாப்பி டே இன்று ;-)
காலம் மறக்காத Bobby பாடல்
நெல்சன் மண்டேலா - 90
சுப்ரமணியபுரம் - விளம்பரப் பாடல்
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது