வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Tuesday, November 20, 2007
நடிகர் விஜய் சுடப்போகும் அடுத்த படம் :)
கும்பலாப் படம் பார்க்கப் போன சர்வேசனிலிருந்து, சீடி வாங்கிப்பார்த்த இராம் வரை "அழகிய தமிழ் மகனை" நினைத்து விசும்பி விசும்பி அழுது பதிவு போடும் இவ்வேளை ஆறுதல் கொடுக்கும் முகமாக இதோ ஒரு செய்தி.

தெலுங்கு போக்கிரி மகேஷ்பாபுவின் புதுப் படம் அதிதி (Athidhi) மெகா ஹிட்டாம். நிச்சயம் புரட்சி இயக்குனர் சந்திரசேகர் அப்படத்தின் ரீமேக்கை வாங்கி விடுவார் என்ற நம்பிக்கையோடு அத்தடுவில் இருந்து சில காட்சிகள்.

அப்பாவி கோயிந்துவின் கொஸ்டின் டைம்

அடுத்த படத்தில் டாக்டர் விஜய்னு போடுவீங்களா?




posted by கானா பிரபா 7:36 PM   25 comments
 
25 Comments:
  • At November 20, 2007 at 8:03 PM, Blogger koothanalluran said…

    // அத்தடி //

    ஆத்தாடி

     

  • At November 20, 2007 at 9:14 PM, Blogger வவ்வால் said…

    விஜய் இந்த படத்தை சுட மாட்டார் சுட்டால் ஆதிக்கதை தான், ஏற்கனவே வந்த ஆதி என்ற விஜய் படமும் இதே கதை தான்!

    மகேஷ் பாபுக்கு கதைக்கு தான் பஞ்சம் என்று நினைத்தால் பேர் வைக்கவும் பஞ்சம் போல ,முன்னர் அத்தடு னு நடித்தார் இப்ப அத்தடி :-))

     

  • At November 20, 2007 at 9:26 PM, Blogger கானா பிரபா said…

    வணக்கம் கூத்தநல்லூரான்

    அத்திடி என்றால் தெலுங்கு படி ஆத்தாடியா?

    வணக்கம் வவ்வால்

    ஆதி படம் ஏற்கனவே தெலுங்கிலிருந்து சுட்டது, படம் பேர் Atanokkade

    இது புதுசு ;)

     

  • At November 20, 2007 at 9:41 PM, Blogger வவ்வால் said…

    கானா ,
    //இது புதுசு ;)//

    ரொம்ப புதுசு போல :-))

    ஆமாம் அதுவும் தெலுங்கு உருவல் தான் , ஆனால் அப்போ வந்த அதுவும் இதே போன்ற கதை என்பதால் இதை சுட மாட்டார் என்று சொன்னேன், யார் கண்டது, எத்தனை தடவை வேண்டுமானாலும் பழைய கள்ளை புது மொந்தையில் கு(டு)டிப்பார்களே சினிமாக்காரர்கள், நாமும் தான் :-))

     

  • At November 20, 2007 at 9:55 PM, Anonymous Anonymous said…

    அதுக்கும் முன்னால எடிட்டர் மோகன் வாங்கி, ராஜா டைரக்ஷனில் நம்ம ரவி நடிப்பார். ரீமேக்குல எங்கள அடிச்சுக்க முடியாதுங்கண்ணா!

    ஆமாம், இந்த விஜய் எல்லாம் எப்பிடிங்கண்ணா ஹீரா ஆனார்? முகத்தில் எப்பவும் ஒரு மூணு நாள் கழிச்சு கொல்லைக்கு பொறவன் முக்குறா மாதிரி ஒரு எக்ஸ்பிரஷன்!

     

  • At November 20, 2007 at 10:17 PM, Blogger theevu said…

    //இந்த விஜய் எல்லாம் எப்பிடிங்கண்ணா ஹீரா ஆனார்? முகத்தில் எப்பவும் ஒரு மூணு நாள் கழிச்சு கொல்லைக்கு பொறவன் முக்குறா மாதிரி ஒரு எக்ஸ்பிரஷன்!//

    :)

    கிண்டல் ..ஆ ....உங்களுக்கெல்லாம் ராமராஜன்தான் சரி

     

  • At November 20, 2007 at 10:43 PM, Blogger குட்டிபிசாசு said…

    பிரபா,
    அழகிய தமிழ்மகன் படம் வருவதற்கு முன் அதனை தெலுங்கில் ரீமேக் செய்யப்போவதாக மகேஷ்பாபு கூறியிருந்தார்.

     

  • At November 21, 2007 at 4:44 AM, Blogger கானா பிரபா said…

    //வவ்வால் said...
    எத்தனை தடவை வேண்டுமானாலும் பழைய கள்ளை புது மொந்தையில் கு(டு)டிப்பார்களே சினிமாக்காரர்கள், நாமும் தான் :-))//

    நண்பா

    எத்தனை முறை அடி வாங்கினாலும் உறைக்காது நமக்கு, திரும்பவும் பார்ப்போம் ;-)

    //Anonymous said...
    அதுக்கும் முன்னால எடிட்டர் மோகன் வாங்கி, ராஜா டைரக்ஷனில் நம்ம ரவி நடிப்பார். ரீமேக்குல எங்கள அடிச்சுக்க முடியாதுங்கண்ணா!//

    ஜெயம் ரவி சுடும் படங்கள் சித்தார்த் தான் பண்ணியிருக்க வேணுமாம் ;-)

    //theevu said...
    கிண்டல் ..ஆ ....உங்களுக்கெல்லாம் ராமராஜன்தான் சரி//

    தீவண்ணை

    ராஜ்கிரண், பாண்டியராஜனை விட்டிட்டியள்.

    //குட்டிபிசாசு said...
    பிரபா,
    அழகிய தமிழ்மகன் படம் வருவதற்கு முன் அதனை தெலுங்கில் ரீமேக் செய்யப்போவதாக மகேஷ்பாபு கூறியிருந்தார்.//

    அருண்

    பாவம் மகேஷ்பாபு ;-(

     

  • At November 21, 2007 at 4:50 AM, Blogger கோபிநாத் said…

    சாரி தல எல்லாம் என் கைவிட்டு போயிடுச்சி...;((
    அழகிய தமிழ் மகனை பார்த்துட்டேன்...அவ்வ்வ்வ்வ்வ்வ்...;(

     

  • At November 21, 2007 at 9:25 AM, Anonymous Anonymous said…

    இன்னாது அத்திதி படத்த ரீமேக் பண்றாங்களா?

    அதுவே அத்தடு, போக்கிரி, சைனிக்குடு படங்களோட ரீமேக் தானே?

    மஹேஷ்பாபு பாவமா? ஹலோ..., இதுதாங்க தெலுகுக்கு ஏத்த கத. சரியான நாயகிகள புடிச்சி போட்டுட்டாங்கன்னா அங்க ஹிட்தான்.

     

  • At November 21, 2007 at 2:11 PM, Blogger அ. இரவிசங்கர் | A. Ravishankar said…

    கானா பிரபா, இந்தப் படத்தின் சரியான உச்சரிப்பு athidhi. இந்தப் படம் தமிழில் திரும்ப எடுக்கப் பட வாய்ப்புகள் குறைவு என்று நினைக்கிறேன். தெலுங்கிலேயே அவ்வளவாக ஓடவில்லை என்பது தான் உண்மை. படத்தைப் பார்த்து விட்டேன். மிகச் சாதாரண பழி வாங்கல் கதை தான். மகேஷ் பாபு மேல் எந்தக் குறையும் சொல்ல இயலாத அளவுக்குத் தான் நடத்திருக்கிறார். ஆனால், அவர் திறமைக்குக் கதை எழுதத் தான் ஆட்கள் பஞ்சம் போல்

     

  • At November 21, 2007 at 2:24 PM, Blogger துளசி கோபால் said…

    ஏமண்டி இதி?
    'அதிதி' அன்னி தெலுகுலோ யுந்தி.மீரு அத்திடின்னு செப்புதாரு?

    சதுவேதானிக்கி ராதா?

     

  • At November 21, 2007 at 2:37 PM, Blogger ஜி said…

    ரவிசங்கர் சொன்னதுபோல அந்தப் படத்தின் பெயர் அதித்தி.. படம் சரியா போகல..

    இப்பெல்லாம் விஜய்க்கு பயந்தே மகேஷ் பாபு படங்கள அப்படியே டப் பண்ணி தமிழ்ல போட்டுடுறாங்க.. சைனிக்கூடு குமரன்னு வந்திச்சுன்னு நெனக்கிறேன் :)))

     

  • At November 21, 2007 at 6:18 PM, Blogger கானா பிரபா said…

    //கோபிநாத் said...
    சாரி தல எல்லாம் என் கைவிட்டு போயிடுச்சி...;(( //
    அழகிய தமிழ் மகனை பார்த்துட்டேன்...அவ்வ்வ்வ்வ்வ்வ்...;(//

    தப்பு பண்ணீட்டீங்களே தல


    //Anonymous said...
    இன்னாது அத்திதி படத்த ரீமேக் பண்றாங்களா?

    அதுவே அத்தடு, போக்கிரி, சைனிக்குடு படங்களோட ரீமேக் தானே?//

    அநானி நண்பா

    ஒரு ஊகம் தான், சுத்தி சுத்தி தமிழ்நாட்டுக்கே வந்துடும்லே

    //ரவிசங்கர் said...
    கானா பிரபா, இந்தப் படத்தின் சரியான உச்சரிப்பு athidhi. இந்தப் படம் தமிழில் திரும்ப எடுக்கப் பட வாய்ப்புகள் குறைவு என்று நினைக்கிறேன்.//

    வாங்க ரவி

    மசாலா இருந்தால் தமிழில் அரைச்சிடுவாங்களே ;-)

    //துளசி கோபால் said...
    ஏமண்டி இதி?
    'அதிதி' அன்னி தெலுகுலோ யுந்தி.மீரு அத்திடின்னு செப்புதாரு?

    சதுவேதானிக்கி ராதா?//


    துளசிம்மா

    அதிதியை தவறா போட்டது தப்புதான், அதுக்காக இப்பிடி திட்டாதீங்க ;(

    //ஜி said...
    இப்பெல்லாம் விஜய்க்கு பயந்தே மகேஷ் பாபு படங்கள அப்படியே டப் பண்ணி தமிழ்ல போட்டுடுறாங்க.. சைனிக்கூடு குமரன்னு வந்திச்சுன்னு நெனக்கிறேன் :)))//

    ஜி

    குமரன் போல இன்னொரு படம் வர்ரேண்டா மதுரைக்கு அதுவும் மகேஷ்பாபுவின் டப்பிங்

    November 21, 2007 2:37 PM

     

  • At November 21, 2007 at 6:35 PM, Blogger Anandha Loganathan said…

    உமக்கு எச்சரிக்கை,

    நடிகர் விஜய் என்பதை உடனே டாக்டர் விஜை என்று மாற்றவும். கூடவே பார்வை நேரம் 6 -10 என்றும் போடவும். :)
    எவ்வளவு கஷ்டபட்டு பட்டம் வாங்கி இருக்காக , நீங்க என்னாடன்ன சும்மா நடிகர்ன்னு போட்டுகிட்டு இருக்கீங்களே.

     

  • At November 22, 2007 at 3:09 PM, Blogger கானா பிரபா said…

    பொறுங்க பெருசு

    கொடுத்த டாக்டர் பட்டத்தை எடுக்கலாமானு யோசனை பண்றாங்க. முடிவு வரட்டும்.

     

  • At November 22, 2007 at 6:41 PM, Blogger வவ்வால் said…

    தலைவா,
    //குமரன் போல இன்னொரு படம் வர்ரேண்டா மதுரைக்கு அதுவும் மகேஷ்பாபுவின் டப்பிங்//

    அர்ஜுன் படம் தானே வர்ரேண்டா மதுரைக்கு னு வந்தது? இல்லை வேறப்படமா?

    எல்லாப்படமும் ஒரே போலவே இருக்கு ::-(

    நந்து னு ஒரு படம் வந்துச்சு அது அத்தடு போல, அதுவும் ஒரு தமிழ் படத்தோட கதை போலவே இருக்கும் நல்ல வேளை அதை யாரும் ரீ மேக் பண்ணலை :-))

     

  • At November 22, 2007 at 8:06 PM, Blogger கானா பிரபா said…

    தல

    அர்ஜூனின் படம் மருத மலை,

    வர்ரேண்டா மதுரைக்கு இன்னொரு டப்பிங், ஷ்ரேயா பிரகாஷ்ராஜ் கூட நடிச்சிருப்பாங்க, தெலுங்கில் அர்ஜின் என்ற பெயரில் வந்தது. இன்னொரு குழப்பம் ;-)

    நந்து படம் நிஜம் படத்தின் தழுவல் என்று நினைக்க்றேன்.

     

  • At November 23, 2007 at 2:33 PM, Blogger Anandha Loganathan said…

    //பொறுங்க பெருசு//

    நான் சின்ன பையன் தானுங்கோ !!! :)

     

  • At November 27, 2007 at 5:03 AM, Blogger வவ்வால் said…

    தலைவா கொழப்பிக்கிட்டிங்க !

    //தெலுங்கில் அர்ஜின் என்ற பெயரில் வந்தது. இன்னொரு குழப்பம் ;-)//

    நான் தெலுங்கில் அர்ஜுன் என்று வந்த படம் தானே என்று தான் கேட்க வந்தேன், அதில் தானே மதுரை மீனாட்சி அம்மன் கோவில் செட் போட்டாங்க, அதனால் தான் வர்றேண்டா மதுரைக்குனு டப் பண்ணிடாங்க போல.

    மருதமலைக்கு அரோகரா போட்டது நடிகர் அர்ஜுன் என்று தெரியாதா !

    இப்போ தான் நிஜம் படத்துக்கு தமிழில் விளம்பரம் வந்திருக்கு அப்போ அதுவும் முன்னரே வந்த படமா?

     

  • At November 28, 2007 at 2:50 AM, Blogger கானா பிரபா said…

    வணக்கம் நண்பா

    நிஜம் அதே பெயரில் தெலுங்கில் வந்திருந்தது. தெலுங்கில் வந்த போது நானும் பார்த்தேன். அக்மார்க் ஆச்சி மசாலா.

     

  • At December 2, 2007 at 7:08 AM, Blogger Jay said…

    கலக்கலாக ட்ரெயிலர் இருந்துச்சுப்பா!!!!

    விஜய் என்ன செய்றார் என்று பார்ப்பம்!!! தெலுங்குப் படம் ஒன்றும் பார்க்கேல... ஒரு ட்ரெயிலராவது பார்த்தேனே!!! :)

     

  • At December 4, 2007 at 4:20 AM, Blogger pudugaithendral said…

    தெலுங்கில் சக்கைப்போடு போட்ட "பொம்மரில்லு" அடுத்த உருவல் மன்னன் ஜெயம் ரவி நடித்து வெளியாகிறதாம்.

    நுவ்வொஸ்தானன்டே! நேன் ஒத்தட்டன்னா தெலுங்கில் பார்ததவ்ர்கள், தமிழில் வந்த "சம்திங், சம்திங்" பார்த்து கலங்கி போயிருப்பார்கள். (நான் பயந்தே போயிட்டேன்)

    ரீமேக்கலாம் தப்பில்லே. சரியான் பொறுத்தம்மான ஆளா இருக்கனும்.

    "போக்கிரி" தெலுங்கில் பார்த்துவிட்டு தமிழில் எனக்க்கு பார்க்க சகிக்கவில்லை.

    "அன்னவரம்" பவன் நடிப்பு நன்றாக இருந்ததாக தோன்றுகிறது. (தமிழில் சிவகாசி)

    விஜயும், ஜெயம் ரவியும் அடுத்த வருடத்திலாவது ரீமேக் படங்களில் நடிக்காமல் இருக்க ஆண்டவன் அருள் புரிய வேண்டும்

     

  • At December 4, 2007 at 1:59 PM, Blogger வெட்டிப்பயல் said…

    அதிதி எதிர்பார்த்தளவுக்கு ஹிட் இல்லையே :( (ரிவியூ படிச்சிட்டு நல்லா இல்லைனு தெரிஞ்சும் மகேஷ் பாபுக்காக போனோம். படம் முழுக்க சண்டை தான்)

    தமிழ்ல எடுக்கறது சந்தேகம் தான்... (டப்பிங்ல வந்துடும்னு நினைக்கிறேன். அத்தடு கூட டப் பண்ணி வந்துச்சு)

     

  • At December 5, 2007 at 6:35 PM, Blogger கானா பிரபா said…

    மயூரேசன்

    யூ டியூபில் தேடினால் நிறைய தெலுங்கைப் பிடிக்கலாம்.

    புதுகைத்தென்றல்

    அன்னாவரம் இங்கிருந்து தான் அங்கே போனது

    வெட்டிகாரு

    இது கலாய்த்தல் பதிவு தான், விஜய் என்ன அவ்வளவு ஏமாளியா? இப்பதானே பெரிய ஏமாற்றத்தில் இருக்கார்.

     

Post a Comment
<< HOME
 
Sunday, November 18, 2007
வாலிட்டெழுதிய நீலக்கடைக்கண்ணில் மீனோ?

எனக்குள் ஒருவர் திரையில் "தேர் கொண்டு வந்தவன் யாரென்று சொல்லடி தோழி" என்ற பாடலை இளையராஜா இசையில் பி.சுசீலா தனித்துப் பாடியிருப்பார். இந்தப் பாடல் "ஒன்னானு நம்மள்" (1984) திரைப்படத்தில் எஸ்.ஜானகி பின்னணி ஸ்வரம் பாட கே.கே.ஜேசுதாஸ் பாடியிருப்பார். மம்முட்டி, மோகன்லால், சீமா நடித்திருக்கின்றார்கள்.

நண்பர் ஜி.ராகவன் வெகு நாளாகத் தேடிக்கொண்டிருந்த பாட்டு இது. எனக்கும் இந்தப் பாடலைத் தேடிக் கேட்டு ரசிக்க வேண்டும் என்ற தீராக் காதல் இன்று நிறைவேறியிருக்கின்றது. மூலப் பாடலை இதோ ஒலி வடிவில் கேட்டு இன்புறுங்கள். பொதுவாக இளையராஜா தன் டியூனை இன்னொரு மானிலத்துக்கு கொண்டுபோகும் போது சிலவேளை சொதப்பி விடுவார். ஆனால் இங்கே நிலமை மாறியிருக்கின்றது என்பதற்கு இப்பாடல் ஓர் சான்று.


இப்பாடலை அம்ருதா தொலைக்காட்சி, மற்றும் ஏஷியா நெட்டில் பாடல் போட்டிகளில், போட்டிப் பாடகர்களால் பாடிய காணொளி இதோ:
posted by கானா பிரபா 3:37 AM   6 comments
 
6 Comments:
  • At November 18, 2007 at 7:31 AM, Blogger G.Ragavan said…

    வாலிட்டெழுதிய நீலக்கடக்கண்ணில் மீனோ...கவித்துவமான துவக்கம். அட..கவிதையே பாடல் போல அழகு. ரொம்ப நாளா தேடிக்கிட்டிருந்த பாட்டு. எடுத்துக்குடுத்துட்டீங்க :)

    அதுவுமில்லாம... பதிவும் போட்டுட்டீங்க. பிரமாதம் போங்க.

    தேர் கொண்டு சென்றவன் பாட்டு லிங்கையும் கொடுக்கலாமே. கேட்டு ரசிக்க நல்லாயிருக்குமே.

     

  • At November 18, 2007 at 8:47 PM, Blogger கானா பிரபா said…

    வணக்கம் ராகவன்

    அருமையான பாட்டு இல்லையா? இன்னும் அலுக்காமல் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்.

    தேர்கொண்டு சென்றவன் பாட்டு சுசீலா அம்மா பதிவில் வரும்

     

  • At November 20, 2007 at 5:25 AM, Blogger கோபிநாத் said…

    \\ரொம்ப நாளா தேடிக்கிட்டிருந்த பாட்டு. எடுத்துக்குடுத்துட்டீங்க :)\\

    தலன்னா தல தான்...;))

     

  • At November 20, 2007 at 6:01 PM, Blogger கானா பிரபா said…

    தல

    ஓவரா புகழாதீங்க, குளிரடிச்சு செத்துடுவேன் ;-)

     

  • At November 21, 2007 at 1:56 AM, Anonymous Anonymous said…

    நம்ப பிரபு அண்ணா போல ஒரு நல்லவர இந்த பதிவுலகில் பார்க்க முடியுமா?
    அவரைப் போல கிடைக்காத பாட்டை எல்லாம் தேடி பதிவு போட முடியுமா?
    அவரைப் போல தன்னடக்கம் வருமா?
    அவரைப் போல மத்தவங்களை பேசி அறுத்தே சாக அடிக்க முடியுமா??
    அவருக்கு இருக்கின்ற பெண் "விசிறிகள்" போல யாருக்காவது இருக்கின்றதா??

    பிரபு அண்ணா இப்போ குளிருதா??ஹிஹி

    பாட்டு நல்ல இருக்கு அண்ணா

     

  • At November 21, 2007 at 4:30 AM, Blogger கானா பிரபா said…

    தங்கச்சி

    ஏன் இந்தக் கொலவெறி?

     

Post a Comment
<< HOME
 
Friday, November 16, 2007
கீரவாணி.....இரவிலே கனவிலே பாட வா நீ

அலைகள் ஓய்வதில்லையில் ஆரம்பித்து ஓயாது அலையடித்துக் கொண்டிருந்த கார்த்திக் எண்பதுகளில் நடுப்பகுதியில் வாய்ப்பு கொஞ்சம் வற்றி விசு, ராமநாராயணன் வகையறாக்களின் படங்களில் வந்து போனதோடு தெலுங்கிலும் குறிப்பிட்ட சில படங்களில் நடித்தார். அதில் ஒன்று தான் தெலுங்கில் கார்த்திக், பானுபிரியா ஜோடி போட்ட அன்வேஷனா (Anveshana) தெலுங்கின் பிரபல இயக்குனர் வம்சியின் கைவண்ணத்தில் 1985 இல் வந்தது. அது பின்னர் தமிழில் பாடும் பறவைகள் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. அப்படத்தில் வந்த பாடல்களில் ஒன்றான "கீரவாணி! இரவிலே கனவிலே பாடவா நீ", தமிழிலும் வெகு பிரசித்தம். கீரவாணி ராகத்திலேயே அமைந்த இப்பாடலை ராகதேவன் இளையராஜாவின் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடுவதை இன்னும் 20 வருஷம் கழித்தும் அதே இனிய சுகத்தோடு கேட்கலாம்.

இரண்டு மொழிப் பாடல்களும் உங்களுக்காகக் காணொளியாக இதோ.

புகைப்படம் உதவி: வம்சி ரசிகர் தளம்
தெலுங்கு Youtube: suri2k6 & dee4kay
தமிழ் Youtube: unanoche98





posted by கானா பிரபா 1:58 AM   8 comments
 
8 Comments:
  • At November 16, 2007 at 2:39 AM, Anonymous Anonymous said…

    அண்ணா

    இந்தப் பாடல் எந்த படம் என்று

    "உன் கண்ணில் பூவும் பெண்ஜாதியோ"ம், பாடலின் துவக்கத்தையும் கூறவும். என்னுடைய ஞாபகம் சரியென்றால் பாடல் துவக்கம் "ஆகாயம் பூப்பூக்கும் நேரம்" பிழை என்றால் மன்னிக்கவும்.

    ஸ்ரீ

     

  • At November 16, 2007 at 2:50 AM, Blogger கானா பிரபா said…

    வணக்கம் ஸ்ரீ

    சட்டென்று படம் பெயர் ஞாபகம் வரவில்லை. இன்னும் ஓரிண்டு குறிப்பு தந்தீர்களென்றால் யோசித்துச் சொல்கின்றேன். அதாவது எக்கால கட்டத்தில் வந்தது, யார் நடித்தது?

     

  • At November 18, 2007 at 4:54 AM, Blogger கோபிநாத் said…

    ஆஹா...ஆஹா..எனக்கு மிகவும் பிடித்த பாடல் தல ;-))

    நன்றி ;-)

     

  • At November 18, 2007 at 9:03 PM, Anonymous Anonymous said…

    டியர் அண்ணா.

    என் ஞாபகம் சரியென்றால் விஜயகாந்த் நடித்தது. படம் பெயர் தெரியவில்லை. ஆனால் பாடலின் இடையில் வரும் வரிகள் "காஷ்மீரின் ரோஜா உன் ஜாதியோ. உன் கண்ணில் பூவும் பெண்ஜாதியோ". இதற்க்கு மேல் தெரியவில்லை. மன்னிக்கவும்.

    ஸ்ரீ

     

  • At November 18, 2007 at 9:17 PM, Blogger கானா பிரபா said…

    you are welcome thala

     

  • At November 20, 2007 at 6:03 PM, Blogger கானா பிரபா said…

    வணக்கம் சிறீ

    பாடல் இன்னும் ஞாபகத்தில் வரவில்லை, கட்டாயம் முயற்சிக்கின்றேன்.

     

  • At April 8, 2013 at 4:09 AM, Blogger Raj said…

    http://youtu.be/y5JGw-cgjoI

     

  • At April 8, 2013 at 4:09 AM, Blogger Raj said…

    Intha padala? http://youtu.be/y5JGw-cgjoI

     

Post a Comment
<< HOME
 
Thursday, November 8, 2007
பாவனா பேட்டி
பதிவுலகிலும், படவுலகிலும் தற்போது பரபரப்பாகப் பேசப்படும் நடிகை பாவனாவின் வீடியோ பேட்டி. தமிழ்ப்பித்தனின் புலநாய்வு அறிக்கைக்கு நெத்தியடி

SUNTV Interview Part 1

SUNTV Interview Part 2

SUNTV Interview Part 3
posted by கானா பிரபா 3:34 PM   2 comments
 
2 Comments:
Post a Comment
<< HOME
 
Monday, November 5, 2007
சின்ன மனுஷன் செயலைப் பார்த்து சிரிப்பு வருது!
சிரிப்பு வருது சிரிப்பு வருது......,
சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது,
சின்ன மனுஷன் செயலைப் பார்த்துச் சிரிப்பு வருது ;-)










posted by கானா பிரபா 6:37 PM   15 comments
 
15 Comments:
  • At November 5, 2007 at 7:28 PM, Blogger தமிழ்பித்தன் said…

    சிரிப்பு வருது சிரிப்பு வருது கானா பிரபா செயலைப்பார்த்து சிரிப்பு வருது

     

  • At November 5, 2007 at 7:31 PM, Blogger கானா பிரபா said…

    அப்பூ

    நான் உங்களைப் போல காண்டம் வாசிச்சனானே? ஏன் சிரிப்பு ;)

     

  • At November 5, 2007 at 7:45 PM, Blogger வவ்வால் said…

    கானா,
    சிரிப்பு வருது சிரிப்பு வருது என்ற சந்திரபாபு பாட்டைதான்(ஆண்டவன் கட்டளை) போட்டு இருக்கிங்க என்று வந்தால் ஒரு "சுந்தரபாபு" சுட்டிப்பையன் படம் காட்டுறிங்களே! இதெல்லாம் ரொம்ப சின்னப்புள்ளத்தனமா இருக்கே :-))

     

  • At November 5, 2007 at 8:10 PM, Blogger கானா பிரபா said…

    வாங்க வவ்வால்

    இதில் சந்திரபாபுவுக்கு ஒரு உள்குத்தும் கிடையாது, சுந்தரபாபுவுக்கு தான் ;-))

     

  • At November 5, 2007 at 8:16 PM, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said…

    அடுத்த இடுகைக்கு 'ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுகுதே' எண்டு தலைப்பு வையுங்க. சரியா.

    பின்பாட்டுப்பாட மைலாப்பூர் கச்சேரி ஓரமா ஆரையாவது கூட்டியண்டு வாறன். Or better yet the song 'More than a feeling' from the rockband Boston would be appropriate. ;)

    -மதி

     

  • At November 5, 2007 at 8:19 PM, Blogger கானா பிரபா said…

    //மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...
    அடுத்த இடுகைக்கு 'ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுகுதே' எண்டு தலைப்பு வையுங்க. சரியா.//

    நீங்க வேற, அடுத்த இடுகை "பிணம் தின்னிகள்" அல்லது "பிரேதப் பரிசோதனை", கூடவே ஈக்களை அழைத்து வருவேன் ;-)

     

  • At November 5, 2007 at 8:46 PM, Blogger குட்டிபிசாசு said…

    பிரபா,

    நானும் வவ்வால் போல தான் நினைச்சிட்டு வந்தேன். காமெடி பண்ணிடேள் போங்கோ!!

    இந்த பாட்ட கேளுங்க!

    http://www.youtube.com/watch?v=hOHZmIhYnHk

     

  • At November 5, 2007 at 8:53 PM, Blogger கானா பிரபா said…

    வாங்க நண்பா

    கனவு காணும் பாட்டோட மொழி மாற்று அருமை, நன்றி

     

  • At November 5, 2007 at 9:35 PM, Blogger குட்டிபிசாசு said…

    நண்பா,
    "சத்தியம், நம்பிக்கை, அன்பு என்ற வார்த்தைகள் பொய்த்துவிட்டன" என்று தொடங்கும் பாடல்!!

    இந்த சிச்சுவேஷனுக்கு பொருந்தும் என்று கொடுத்தேன்.

     

  • At November 5, 2007 at 11:18 PM, Blogger பனிமலர் said…

    இத்தனை கவிதைகளை எங்கே என்று எப்படி கண்டு பிடித்தீர்கள், அருமை அருமை அத்தனையும் அருமை.

     

  • At November 6, 2007 at 12:03 AM, Blogger கானா பிரபா said…

    //குட்டிபிசாசு said...
    நண்பா,
    "சத்தியம், நம்பிக்கை, அன்பு என்ற வார்த்தைகள் பொய்த்துவிட்டன" என்று தொடங்கும் பாடல்!!

    இந்த சிச்சுவேஷனுக்கு பொருந்தும் என்று கொடுத்தேன்.//

    அருமை நண்பா, கடந்த நாட்களின் மன இறுக்கத்தைக் கொஞ்சம் தளர்த்திவிட்டது.

    //பனிமலர் said...
    இத்தனை கவிதைகளை எங்கே என்று எப்படி கண்டு பிடித்தீர்கள், அருமை அருமை அத்தனையும் அருமை.//

    உண்மைதான் சகோதரி, நம்ம சுட்டிப் பதிவர் Baby Pavan இன் யூடியூப் இடுகை ஒன்றைப் பார்த்து இன்னும் கொஞ்சம் தேடலை மேற்கொண்டேன், கிடைத்தது ;-)

     

  • At November 6, 2007 at 1:32 PM, Blogger கோபிநாத் said…

    தல...சூப்பர் வீடியோகள் ;))

     

  • At November 6, 2007 at 3:14 PM, Blogger கானா பிரபா said…

    வாங்க தல

    சுட்டிப்பையங்க அலும்பு தாங்க முடியல இல்ல ;-)

     

  • At November 7, 2007 at 3:38 AM, Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said…

    பிரபா!!!
    தெய்வீகச் சிரிப்புக்கள்......

     

  • At November 8, 2007 at 4:09 AM, Blogger கானா பிரபா said…

    //யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
    பிரபா!!!
    தெய்வீகச் சிரிப்புக்கள்......//

    சரியாகச் சொன்னீர்கள் அண்ணா

     

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
ஆயில்ஸ் வாழணும் நூறு ஆயுள்ஸ்
எஸ்.எஸ்.சந்திரன் மறைவில்
சாதித்துக் காட்டி நெகிழ வைத்த அபிநயா
அன்று கேட்டவை இன்று புத்தம் புதிதாய்
மண மேடையில் .:: மை பிரண்ட்::.
2009 சிறந்த மலையாள கானங்கள்
ஆயில்யன் - 1980
"மதுரை to தேனி வழி ஆண்டிப்பட்டி" சுகமான பயணம்
கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்
"காற்றில் எந்தன் கீதம்" ஒரு சிலாகிப்பு
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது