வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Saturday, June 13, 2009
நான் ரசித்த மலையாள மென் மெட்டுக்கள்
நான் பார்த்து ரசித்த சில மலையாளப் படங்களில் வெளிவந்த இனிய பாடல்களின் தொகுப்பை இங்கே பகிர்கின்றேன்.

சிபி மலயில் இயக்கி, நடிகை சாரதா தயாரிப்பில், திலீப், நவ்யா நாயர், சாரதா போன்றோர் நடித்த திரைப்படம் "மழைத்துளிக்காலம்" இந்தப் படத்தில் இருந்து மோகன் சித்தாரா இசையில் ஜெயச்சந்திரன் பாடும் இனிய பாடல் ஒன்று. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் சேதாரப்படாத குரலில் பாடலின் கனிவைக் காட்டுகின்றார் ஜெயச்சந்திரன்.



வித்யாசாகர் மழையடிக்கும் போது ஒதுங்கிப் போய் மலையாளத்தில் ஒரு கலக்கு கலக்கிவிட்டு வருவார். Rock N Roll என்ற திரைப்படம் மோகன்லால் நடித்து கலகலப்பாகப் பார்க்கக் கூடிய படம். இசைக் கலைஞன் சம்பந்தப்பட்ட திரைப்படம் என்பதால் இங்கே நான் தும் பாடலே போதும் வித்யாசாகரின் சாகித்யத்துக்கு. கடந்த ஆண்டு இந்தப் பாடல் மது பாலகிருஷ்ணனுக்கு சிறந்த பாடகர் விருதை அள்ளிக் கொடுத்தது.



"இஷ்டம்" திரைப்படத்தை இப்போது தான் பார்த்து முடித்து வந்திருக்கிறேன். திலீப், நெடுமுடிவேணு, நவ்யா நாயர், ஜெயசுதா ஆகியோர் நடித்த கலக்கலான படம். தன் தகப்பனின் நிறைவேறாத காதலை மகன் நிறைவேற்றும் வித்யாசமான கதையோட்டம் இது. தகப்பனின் காதல்கவிதையை மகன் பாடலாக்கிப் பாடும் காட்சி.

posted by கானா பிரபா 7:06 AM   7 comments
 
7 Comments:
  • At June 13, 2009 at 7:37 PM, Blogger ஆயில்யன் said…

    பாஸ் இந்த “காணும் போல்” பாட்டு நிறைய வாட்டி கேட்டிருக்கேன் பட் பார்த்ததில்லை இன்னிக்குத்தான் முத முதலா பாக்குறேன் நல்லா இருக்கு !

    நவ்யா நாயரும் கூட நல்லா இருக்காங்க :))))

     

  • At June 14, 2009 at 2:48 AM, Blogger கானா பிரபா said…

    பாஸ்

    நவ்யா நாயர் எப்போ அழகில்லாம இருந்திருக்காங்க?

     

  • At June 14, 2009 at 3:08 AM, Blogger ஆயில்யன் said…

    //கானா பிரபா said...

    பாஸ்

    நவ்யா நாயர் எப்போ அழகில்லாம இருந்திருக்காங்க?/


    கிகிகிகி அப்ப உங்களுக்கு அவுங்க மேல ஒரு கண்ணு இருக்கு! ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும்! :)))))))

     

  • At June 14, 2009 at 1:04 PM, Blogger G.Ragavan said…

    ஜெயச்சந்திரனின் குரல் வளமும் திறமையும் சிறப்பாகவே இருக்கின்றன. மலையாளியாக இருந்தாலும் தமிழை மதிக்கும் கலைஞர். அவருடைய கீழ்க்கண்ட வலைத்தளத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதை இங்கே கொடுக்கிறேன்.
    http://www.jayachandransite.com/html/profra.html

    Jayachandran likes to sing Tamil songs. He comments' "The natural flow of the Tamil language gives a musical touch to Tamil which makes its songs much more musical".

    இப்படித் தமிழை மதிக்கின்ற கலைஞர்களைத்தானே தமிழ் இசையமைப்பாளர்கள் மிகவும் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள். மிகவும் வருத்தமான விஷயம்.

    இவருடைய உச்சரிப்பும் இசையும் கலந்து சிறக்கும் திறமையைத் தமிழ்த் திரையுலகம் கண்டிப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

     

  • At June 21, 2009 at 3:05 AM, Blogger கானா பிரபா said…

    வாங்க ராகவன்

    சுவையான பல தகவல்களைத் தந்திருக்கீங்க, ஜெயச்சந்திரன் இன்னும் நம் தமிழ்த்திரையுலகம் பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ள சிறந்ததொரு பாடகர்.

     

  • At June 23, 2009 at 11:25 PM, Blogger Joe said…

    ஜெயச்சந்திரன் எனக்கும் பிடித்த பாடகர்.
    அவருக்கு வாய்ப்பு தராமல் எங்கிருந்தோ வடக்கிலிருந்து தமிழைக் கடித்துத் துப்பும் பாடகர்களை ஏன் இழுத்து வருகிறார்கள்?

     

  • At June 24, 2009 at 3:04 AM, Blogger கானா பிரபா said…

    வாங்க ஜோ

    வடக்கின் பாடகர்களை இது நாள் வரை அழைத்து வருவதன் மர்மம் எனக்கும் தான் புரியல,

     

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
ஆயில்ஸ் வாழணும் நூறு ஆயுள்ஸ்
எஸ்.எஸ்.சந்திரன் மறைவில்
சாதித்துக் காட்டி நெகிழ வைத்த அபிநயா
அன்று கேட்டவை இன்று புத்தம் புதிதாய்
மண மேடையில் .:: மை பிரண்ட்::.
2009 சிறந்த மலையாள கானங்கள்
ஆயில்யன் - 1980
"மதுரை to தேனி வழி ஆண்டிப்பட்டி" சுகமான பயணம்
கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்
"காற்றில் எந்தன் கீதம்" ஒரு சிலாகிப்பு
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது