வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Monday, April 13, 2009
எந்து பறஞ்சாலும் நீ எந்தேதல்லே வாவே....!

ஐடியா சிங்கர் காட்டிய இலைமறைகாய் திறமைகளில் வாணி விஸ்வநாத் போன்ற குரல்களை முன்னர் காட்டியிருந்தேன். இதோ இங்கே அம்ருதா சுரேஷின் கலக்கலான குரலில் அச்சுவிண்டே அம்மாவில் இசைஞானி கலக்கிய "எந்து பறஞ்சாலும் நீ எந்தேதல்லே வாவே".
இன்னும் பல உயரங்களைக் கடக்க இந்த இசைக்குயிலுக்கு வாழ்த்துக்கள்.



சித்ரா பாடும் மூலப்பாடல்
posted by கானா பிரபா 4:10 AM   9 comments
 
9 Comments:
  • At April 13, 2009 at 4:57 AM, Blogger ஆயில்யன் said…

    அம்ருதா சுரேஷுக்கு வாழ்த்துக்கள்


    சேட்டா விஷு ஆஷாம்ஷங்கள்! :)))

     

  • At April 13, 2009 at 5:35 AM, Blogger சந்தனமுல்லை said…

    நல்ல பாடல். பகிர்ந்தமைக்கு நன்றி!

    ஆயில்ஸ்..என்ன பாசம்..என்ன பாசம்..மலையாளத்துமேலே இருக்கும் பாசத்தை சொன்னேன்! :-)

     

  • At April 13, 2009 at 5:36 AM, Blogger Unknown said…

    எந்து பறஞ்ஞாலும் நீ எண்டேதல்லே வாவே
    நிண்ணு பிணங்காதே ஒண்ணு கூடிப்போரு பூவே

    இளையராஜாவின் இனிய இசை. சின்னகுயிலின் குரலில் அழகான பாட்டு. மீரா ஜாஸ்மின், ஊர்வசி இவர்களின் மீண்டும் பார்க்க தூண்டும் இயல்பான நடிப்பு.

    அம்ருதா சுரேஷின் குரலும் கலக்கல்தான்.

     

  • At April 13, 2009 at 6:08 AM, Blogger M.Rishan Shareef said…

    அருமையான பாடல். இரண்டையும் பார்த்தேன்..ரசித்தேன்..பகிர்ந்தமைக்கு நன்றி. அச்சுவிண்ட அம்மா தமிழிலும் வந்ததா? பார்க்க விரும்புகிறேன்.

     

  • At April 13, 2009 at 6:21 AM, Blogger M.Rishan Shareef said…

    http://www.youtube.com/watch?v=kOF003Qp2yY&feature=related

    இதை நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும் நண்பரே !

     

  • At April 14, 2009 at 3:14 AM, Blogger Thamiz Priyan said…

    விஷு ஆஷாம்ஷங்கள்! :)
    பாட்டு சூப்பர் தல... ஆனாலும் எங்க வாணி விஸ்வநாத் மாதிரி வராது.. ;-)

     

  • At May 7, 2009 at 6:58 AM, Blogger Dr.Sintok said…

    என்ன இருந்தாலும் துர்கா மாதரி வராது...

     

  • At June 20, 2009 at 10:07 AM, Blogger thamizhparavai said…

    நல்ல பகிர்வு தலை..ராஜா ராக்ஸ்...
    அம்மிணி நல்லாப் பாடுது...
    இந்தப் படத்தோட விமர்சனம் எங்க தலை..?
    //அச்சுவிண்ட அம்மா தமிழிலும் வந்ததா? பார்க்க விரும்புகிறேன்.//
    வரலை... ஆனா பி.வாசு இந்தப் படத்தைப் பார்த்து ரசித்ததைக் கேள்விப்பட்டதிலிருந்து கதிகலங்கிப் போயிருக்கிறேன்...

     

  • At June 21, 2009 at 3:02 AM, Blogger கானா பிரபா said…

    வாங்க தல

    பி.வாசு நல்ல படமென்று சொல்வதோடு நிறுத்திக்கட்டும், எங்களில் பதம் பார்க்க வேணாம் :)

    படம் தமிழில் வரவில்லை, வராமல் இருப்பது நல்லது. இந்தப் படம் குறித்து விரிவாக எழுத ஆசை. விரைவில் எழுதுவேன்.

     

Post a Comment
<< HOME
 
Thursday, April 2, 2009
அனியத்தி பிறாவு VS காதலுக்கு மரியாதை BGM ஒப்பீடு

இயக்குனர் பாசிலின் பல மலையாளப் படங்கள் தமிழுக்கு மாற்றம் கண்டு தயாரிக்கும் போது நிரந்தர இசையமைப்பாளராக இருப்பது இசைஞானி இளையராஜா. இசைஞானியின் பின்னணி இசையின் ஆழம் எவ்வளவு தூரம் சிறப்பாக இருக்கின்றது என்பதற்கு ஒரு உதாரணத்தை இங்கே தருகின்றேன்.

அனியத்தி பிறாவு திரைப்படத்தினை நான் காதலுக்கு மரியாதை திரைப்படம் வருவதற்கு முன்னர் பார்த்து ரசித்திருந்தேன். மீண்டும் அனியத்தி பிறாவு படத்தைப் பார்த்த போது "காதலுக்கு மரியாதை" திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா எவ்வளவு தூரம் தன் பின்னணி இசையினால் இன்னும் அந்தக் காவியத்தை உயரே தூக்கி நிறுத்தியிருக்கின்றார் என்பதை அழகாகக் காட்டுகின்றது இங்கே நான் தரும் இரண்டு படங்களின் இறுதிக் காட்சியும்.

முதலில் "அனியத்தி பிறாவு" படத்தின் இறுதிக்காட்சி, இசை வழங்கியவர் Ouseppachan


இதோ இசைஞானியின் ராக சாம்ராஜ்யத்தில் "காதலுக்கு மரியாதை" இறுதிக் காட்சி, குறிப்பாக நிமிடம் 2.07 வினாடிக்கு முன்னும் பின்னுமுள்ள இசைமாற்றத்தை அவதானித்துப் பாருங்கள். காதலர் கண்கள் சந்திக்கும் போது அதுவரை இருந்த இசை மெல்ல மாறி சோக இழையோடலில் என்னைத் தாலாட்ட வருவாளோ
posted by கானா பிரபா 5:07 AM   11 comments
 
11 Comments:
  • At April 2, 2009 at 5:44 AM, Blogger கலைக்கோவன் said…

    ராஜா ராஜா தான்..,
    அருமையான ஒப்பீடு..,

    வெயிலின் அருமை
    நிழலில் தானே தெரியும்பாங்க

     

  • At April 2, 2009 at 5:45 AM, Blogger U.P.Tharsan said…

    Supper

     

  • At April 2, 2009 at 5:47 AM, Blogger ஆயில்யன் said…

    எடுத்தோ
    எடுத்தோண்டு போக்கோ
    **********
    எடுத்துக்கோங்க
    கூட்டிட்டு போங்க

    வசனம் கேட்டு விசில் அடிச்ச கூட்டமில் ஞானும் ஒருவனாக்கும் பட்சே இவ்விட நான் முழுசாயிட்டு பேக் கிரவுண்ட் மியூசிக் கேட்டு நன்னாயிட்டு கலக்கியிருக்காரு ராசா!
    அதுவும் அந்த ஆனந்தமான தருணங்கள்
    சூப்பரேய்ய்ய்ய்

     

  • At April 2, 2009 at 6:21 AM, Blogger Raju said…

    வீடியோக்களை பார்க்க முடியவில்லை பிரபா...
    ஆனா இளையராஜாவுக்கு நிகர் அவரே...

     

  • At April 2, 2009 at 7:20 AM, Anonymous mani said…

    அருமை , கடற்கரையோரம் இருவரும் அமர்ந்து பிரிவை பற்றி பேசுவார்களே, அப்போது ஒலிக்கும் பின்னனி இசை அபாரம்.

     

  • At April 2, 2009 at 7:23 AM, Blogger வாசுகி said…

    பிரபா அண்ணா,

    இப்படி உங்களை போல இசையை அணு அணுவாக நான் ரசித்ததில்லை.
    இப்படி 2.07 வினாடி என்றெல்லாம்.
    ஆனால் ரசிக்கும் போது நல்லா இருக்கு.
    அதுவும் இளையராஜா என்றால் சொல்ல வேண்டுமா?

    சாலினி இன்னும் சில படங்களிலாவது நடித்திருக்கலாம்.
    ம்ம் நாம கொடுத்து வைத்தது அவ்வளவு தான்.



    வீடியோஸ்பதியில் மாதம் கடைசி ஒரு 3 பதிவுகளாவது எழுதலாமே.
    முன்பு போல.
    இப்படி இசையை ரசிக்கும் ஒருவரிடம் நான் எதிர்பார்ப்பது தப்பில்லை என நினைக்கிறேன்.
    உங்களது பதிவுகள் வாசித்த பின் தான் நான் இசையை நுணுக்கமாக அவதானிக்க தொடங்கினேன்.

    ம்ம் நேரம் உள்ள போது எழுதுங்கள்.

    நன்றி

     

  • At April 3, 2009 at 4:59 AM, Blogger Thamiz Priyan said…

    கலக்கல் தல!... அப்புறம் முதன் முதலில் இருவரும் புக் ஷாப்பில் சந்தித்துக் கொள்வார்கள். அந்த சீனையும் போட்டு இருக்கும். தலைவர் பிச்சு உதறி இருப்பார்.

     

  • At April 3, 2009 at 8:20 AM, Blogger கானா பிரபா said…

    கலைக்கோவன்

    வெயிலின் அருமையை தேடிக்கொண்டிருக்கிறோம் இல்லையா

    யூபி

    நன்றி :)

    ஆயில்ஸ்

    கனவுதேசம் டயலாக்கையும் விடலியா

    வாங்க டக்ளஸ்

    வணக்கம் மணி

    அந்த தொகுப்பையும் தருகின்றேன்.

    வணக்கம் வாசுகி

    மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு, நிச்சயமாக இது போன்ற எனக்கு எட்டிய விஷயங்களைத் தர நானும் ஆவலாக இருக்கின்றேன். ஷாலினி அருமையான, இயல்பான நடிப்பைத் தரும் ஒரு கலைஞர்.


    தமிழ்பிரியன்

    நீங்க சொன்ன சீனும் செம கலக்கலா இருக்கும்.

     

  • At April 8, 2009 at 2:46 PM, Anonymous Anonymous said…

    பிரபா,

    நல்ல பதிவு . இளைய ராஜாவின் ராக சாம்ராஜ்யத்திற்கு இன்னௌறு உதரணம்

    Fazil ன் வருஷம் 16. திரைப்படம்.
    வருஷம் 16ல் ராஜா வின் ராஜாங்கம் இசையில் தெரியும்.


    Malayalam title: என்னென்னும் கண்ணன் சேட்டன் Ennennum Kannetante(1986).
    இசை : ஜெரி அமல்டேவ் (Jeri Amaldev )


    http://www.youtube.com/watch?v=mSvSL7KdHJM&feature=related

    http://www.youtube.com/watch?v=dKs9sElRTEY&feature=related

    அருண்

     

  • At April 8, 2009 at 8:57 PM, Blogger P.S. Suresh Kumar said…

    Wow. Nice comparison. I have written in detail about KM background score here

    http://backgroundscore.blogspot.com/2008/05/listening-kaadhalukku-mariyaathai.html

     

  • At April 9, 2009 at 5:52 AM, Blogger கானா பிரபா said…

    வாங்க அருண்

    நீங்க என்னெட்டும் கண்ணெட்டானே, வருஷம் 16 ஒப்பீடு கூட கலக்கல். இதே மாதிரி இன்னொன்று கற்பூர முல்லை - எண்டே சூர்ய புத்ரிக்கு இரண்டுக்குமே ராஜா தான்


    வணக்கம் சுரேஷ்குமார்

    உங்க காதலுக்கு மரியாதை தொகுப்பையும் நண்பர்களோடு சேர்ந்து ரசித்தேன் அருமை

     

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
ஆயில்ஸ் வாழணும் நூறு ஆயுள்ஸ்
எஸ்.எஸ்.சந்திரன் மறைவில்
சாதித்துக் காட்டி நெகிழ வைத்த அபிநயா
அன்று கேட்டவை இன்று புத்தம் புதிதாய்
மண மேடையில் .:: மை பிரண்ட்::.
2009 சிறந்த மலையாள கானங்கள்
ஆயில்யன் - 1980
"மதுரை to தேனி வழி ஆண்டிப்பட்டி" சுகமான பயணம்
கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்
"காற்றில் எந்தன் கீதம்" ஒரு சிலாகிப்பு
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது