வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Friday, November 16, 2007
கீரவாணி.....இரவிலே கனவிலே பாட வா நீ

அலைகள் ஓய்வதில்லையில் ஆரம்பித்து ஓயாது அலையடித்துக் கொண்டிருந்த கார்த்திக் எண்பதுகளில் நடுப்பகுதியில் வாய்ப்பு கொஞ்சம் வற்றி விசு, ராமநாராயணன் வகையறாக்களின் படங்களில் வந்து போனதோடு தெலுங்கிலும் குறிப்பிட்ட சில படங்களில் நடித்தார். அதில் ஒன்று தான் தெலுங்கில் கார்த்திக், பானுபிரியா ஜோடி போட்ட அன்வேஷனா (Anveshana) தெலுங்கின் பிரபல இயக்குனர் வம்சியின் கைவண்ணத்தில் 1985 இல் வந்தது. அது பின்னர் தமிழில் பாடும் பறவைகள் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. அப்படத்தில் வந்த பாடல்களில் ஒன்றான "கீரவாணி! இரவிலே கனவிலே பாடவா நீ", தமிழிலும் வெகு பிரசித்தம். கீரவாணி ராகத்திலேயே அமைந்த இப்பாடலை ராகதேவன் இளையராஜாவின் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடுவதை இன்னும் 20 வருஷம் கழித்தும் அதே இனிய சுகத்தோடு கேட்கலாம்.

இரண்டு மொழிப் பாடல்களும் உங்களுக்காகக் காணொளியாக இதோ.

புகைப்படம் உதவி: வம்சி ரசிகர் தளம்
தெலுங்கு Youtube: suri2k6 & dee4kay
தமிழ் Youtube: unanoche98





posted by கானா பிரபா 1:58 AM  
 
8 Comments:
  • At November 16, 2007 at 2:39 AM, Anonymous Anonymous said…

    அண்ணா

    இந்தப் பாடல் எந்த படம் என்று

    "உன் கண்ணில் பூவும் பெண்ஜாதியோ"ம், பாடலின் துவக்கத்தையும் கூறவும். என்னுடைய ஞாபகம் சரியென்றால் பாடல் துவக்கம் "ஆகாயம் பூப்பூக்கும் நேரம்" பிழை என்றால் மன்னிக்கவும்.

    ஸ்ரீ

     

  • At November 16, 2007 at 2:50 AM, Blogger கானா பிரபா said…

    வணக்கம் ஸ்ரீ

    சட்டென்று படம் பெயர் ஞாபகம் வரவில்லை. இன்னும் ஓரிண்டு குறிப்பு தந்தீர்களென்றால் யோசித்துச் சொல்கின்றேன். அதாவது எக்கால கட்டத்தில் வந்தது, யார் நடித்தது?

     

  • At November 18, 2007 at 4:54 AM, Blogger கோபிநாத் said…

    ஆஹா...ஆஹா..எனக்கு மிகவும் பிடித்த பாடல் தல ;-))

    நன்றி ;-)

     

  • At November 18, 2007 at 9:03 PM, Anonymous Anonymous said…

    டியர் அண்ணா.

    என் ஞாபகம் சரியென்றால் விஜயகாந்த் நடித்தது. படம் பெயர் தெரியவில்லை. ஆனால் பாடலின் இடையில் வரும் வரிகள் "காஷ்மீரின் ரோஜா உன் ஜாதியோ. உன் கண்ணில் பூவும் பெண்ஜாதியோ". இதற்க்கு மேல் தெரியவில்லை. மன்னிக்கவும்.

    ஸ்ரீ

     

  • At November 18, 2007 at 9:17 PM, Blogger கானா பிரபா said…

    you are welcome thala

     

  • At November 20, 2007 at 6:03 PM, Blogger கானா பிரபா said…

    வணக்கம் சிறீ

    பாடல் இன்னும் ஞாபகத்தில் வரவில்லை, கட்டாயம் முயற்சிக்கின்றேன்.

     

  • At April 8, 2013 at 4:09 AM, Blogger Raj said…

    http://youtu.be/y5JGw-cgjoI

     

  • At April 8, 2013 at 4:09 AM, Blogger Raj said…

    Intha padala? http://youtu.be/y5JGw-cgjoI

     

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
பாவனா பேட்டி
சின்ன மனுஷன் செயலைப் பார்த்து சிரிப்பு வருது!
சங்கத்தில் பாடாத கவிதை - மூன்று வடிவில்
சுகமானி நிலாவு - நம்மள் பாட்டு ஒண்ணு
அவுஸ்திரேலியத் தேர்தலில் தீவிரவாதம் குறித்த விவாதம்
பாராளுமன்றத்து ஜல்லிக்கட்டு
மாடப்புறாவே வா..! (மலையாள வடிவம்)
காதல் வைத்து காதல் வைத்துக் காத்திருந்தேன்.....!
ஸ்ரீ வித்யா நினைவில்: பூங்காவியம் பேசும் ஓவியம்!
தெலுங்கு இளையராஜா vs ஹிந்தி ஆனந்த் மிலிந்த்
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது