வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Thursday, December 13, 2007
பார்த்தேன் சிரித்தேன் - தமிழும் தெலுங்கும்
வீர அபிமன்யூ என்ற திரைப்படம் தமிழில் ஏ.வி.எம்.ராஜான், காஞ்சனா நடிப்பில் வந்திருந்தது. அதே திரைப்படம் காஞ்சனாவோடு சோபன் பாபு ஜோடி போட்டு வந்தது. இரண்டுக்கும் இசை கே.வி.மகாதேவன்.

தமிழில் வந்த படத்தில் வரும் "பார்த்தேன் சிரித்தேன்" என்ற பாடல் P.B.சிறீனிவாஸ், மற்றும் P.சுசீலா பாடி ஏக பிரபலம். இந்தப் பாட்டின் மெட்டும் இசையும் தெலுங்கில் கண்டசாலாவும் சுசிலாவும் பாடுவதைக் கண்டு ரசியுங்கள். இவற்றைப் பரிந்துரைத்த நண்பர் ஜி.ராகவனுக்கு மிக்க நன்றி ;-)

Tamil You Tube: prakashviswanathan

Telugu You Tube: MadhuraGeetalu
posted by கானா பிரபா 2:30 AM  
 
17 Comments:
  • At December 13, 2007 at 3:04 PM, Blogger கோபிநாத் said…

    தெலுங்கும் நல்லா தான் இருக்கு...;))

     

  • At December 13, 2007 at 3:52 PM, Blogger CVR said…

    குரல் வரிகள் இரண்டிலும் தமிழ் பாட்டு எனக்கு பிடித்தமையால் தெலுங்கு பதிப்பு அவ்வளவாக என்னிடத்தில் சோபிக்கவில்லை :-)

     

  • At December 13, 2007 at 6:23 PM, Blogger கானா பிரபா said…

    //கோபிநாத் said...
    தெலுங்கும் நல்லா தான் இருக்கு...;))//



    தல

    பாட்டைத் தானே சொல்றீங்க ;)

     

  • At December 13, 2007 at 7:22 PM, Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said…

    PB ஸ்ரீநிவாஸ் குரலில் தவழும் மென்மை கண்டசாலாவில் கொஞ்சம் மிஸ்ஸிங்!
    மத்தபடி சுசீலாம்மா ரெண்டிலுமே கலக்கி இருக்காங்க!

    தமிழ்ல தேன் தேன்-ன்னு முடிஞ்சா
    தெலுங்குல சி, சி-ன்னு முடியுது!
    நல்லாத் தேன் இருக்கு!

     

  • At December 13, 2007 at 8:18 PM, Blogger Sridhar V said…

    அருமையான பாடல். கண்ணதாசனின் (அவர்தானே) வரிகள் மறக்க முடியாதவை.

    ஏவிஎம் ராஜன் பல படங்களில் செகண்ட் பிடில் வாசித்துவிட்டு பின்னர் சினிமாவே ஒரு பாவப்பட்ட தொழில் என்று வெறுத்து ஒதுக்கிவிட்டார்.

    தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகை கலக்கிய காஞ்சனா பின்னர் தனது 60 வயதில் ஆந்திராவில் ஒரு கோவிலில் தங்கி அங்கேயே சேவகம் செய்து கொண்டிருந்த்தாக ஆனந்த விகடனில் படித்த ஞாபகம். ஹ்ம்ம்ம்...

     

  • At December 13, 2007 at 8:54 PM, Blogger pudugaithendral said…

    பழைய மிஸ்ஸம்மாவிலும் அருமையான பாடல்கள் தமிழ் & தெலுங்கில் இருக்கு. அதையும் பாருங்க.

    மாயா பஜார், இப்படி எத்தனையோ,

    மாமா, மாமா எனும் பாடல் கூட நல்லா இருக்கும். (தமிழில் M.ஆர். ராதா ஆடுவார்)

     

  • At December 14, 2007 at 1:42 AM, Blogger கானா பிரபா said…

    // CVR said...
    குரல் வரிகள் இரண்டிலும் தமிழ் பாட்டு எனக்கு பிடித்தமையால் தெலுங்கு பதிப்பு அவ்வளவாக என்னிடத்தில் சோபிக்கவில்லை :-)//

    வாங்க சிவிஆர்

    நமக்குத் தான் சிறீநிவாஸ் உயிர், தெலுங்கர்களுக்கு கண்டசாலா தான் எல்லாமே ;-)

    //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    PB ஸ்ரீநிவாஸ் குரலில் தவழும் மென்மை கண்டசாலாவில் கொஞ்சம் மிஸ்ஸிங்!
    மத்தபடி சுசீலாம்மா ரெண்டிலுமே கலக்கி இருக்காங்க!//

    கண்ணபிரான்

    உங்க ஒப்பீடு கலக்கல்

     

  • At December 14, 2007 at 1:58 AM, Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said…

    பிரபா!
    இந்தத் "தேனை" பிடிக்காதவர்; இருக்கார்.
    இதன் இனிமைக்கு கண்டசாலாவின் குரலைவிட சிறிநிவாஸ் குரலே பொருத்தமென்பது என் அபிப்பிராயமும் கூட.
    அன்றைய புகழ் பெற்ற பாடல்கள் யாவும் மறுபிறவி எடுத்துள்ளன.
    மேலும் "சமரசம் உலாவுமிடமே"...என்ற தமிழ்ப்பாடல் ,சிங்கள உருவில் உண்டு. கிடைத்தால் இடவும்.

     

  • At December 14, 2007 at 4:10 AM, Blogger செல்லி said…

    தேனைப் போல " அத்திக்காய் காய் காய்
    ஆலங்காய் வெண்ணிலவே"யும் கவிஞரின் கவித்திறனை எடுத்துக்காட்டும் பாடல்களல்லவா!

     

  • At December 14, 2007 at 4:24 PM, Blogger கானா பிரபா said…

    //Sridhar Venkat said...

    ஏவிஎம் ராஜன் பல படங்களில் செகண்ட் பிடில் வாசித்துவிட்டு பின்னர் சினிமாவே ஒரு பாவப்பட்ட தொழில் என்று வெறுத்து ஒதுக்கிவிட்டார்.//

    வணக்கம் Sridhar

    ஏவிஅம் ராஜனும் மனைவி புஷ்பலதாவும் இப்போ கிறீஸ்தவ போதனை நிகழ்ச்சிகளைச் செய்து வருகின்றார்கள். பாடல் வ்ரிகள் உண்மையிலேயே இனிமை தான்.

    //புதுகைத் தென்றல் said...
    பழைய மிஸ்ஸம்மாவிலும் அருமையான பாடல்கள் தமிழ் & தெலுங்கில் இருக்கு. அதையும் பாருங்க.//


    வாங்க புதுகைத் தென்றல்

    மிஸ்ஸியம்மா பாட்டுக்கள் எல்லாமே இனிமை. அதே போல் மனிதன் மாறி விட்டான் என்று ஒரு படம் தமிழிலும் தெலுங்கிலும் வந்தது. ஜெமினி, நாகேஸ்வரராவ் நடித்தது. அதுவும் அருமை.

     

  • At December 15, 2007 at 5:51 AM, Blogger கானா பிரபா said…

    // யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
    பிரபா!
    இந்தத் "தேனை" பிடிக்காதவர்; இருக்கார்.
    இதன் இனிமைக்கு கண்டசாலாவின் குரலைவிட சிறிநிவாஸ் குரலே பொருத்தமென்பது என் அபிப்பிராயமும் கூட.//

    யோகன் அண்ணா

    எனக்குப் பிடித்த பழைய பாடகர்களில் முதல் வரிசையில் இருப்பவர் சிறீனிவாஸ். இந்தப் பாட்டு அவருக்கு ஒரு தனிமுத்திரை கொடுத்த பாட்டும் அல்லவா.

    //செல்லி said...
    தேனைப் போல " அத்திக்காய் காய் காய்
    ஆலங்காய் வெண்ணிலவே"யும் கவிஞரின் கவித்திறனை எடுத்துக்காட்டும் பாடல்களல்லவா!//

    செல்லியக்கா

    கவிஞர் இது போல் ஏகப்பட்ட புதுமையகள் செய்திருக்கின்றார். இதே போல் இன்னொன்று வான் நிலா அல்ல பாட்டு.

     

  • At December 15, 2007 at 7:03 AM, Blogger தமிழ்பித்தன் said…

    சீ...சீ.. என்று நம்மட ஆக்களுட்ட பாடினால் அன்றே கதை கந்தள்தான்

     

  • At December 15, 2007 at 11:41 AM, Blogger G.Ragavan said…

    தமிழில் கவிதை அருமை. பாடிய குரல்கள் அருமை. பீ.பி.சீனிவாசும் பி.சுசீலாவும். இசையமைப்பும் அருமைதான்.

    தெலுங்கில் இசையும் பெண்குரலும் தமிழில் இருந்ததுதான். ஆனால் கவிதை மாறியிருக்கிறது. சூச்சி வலச்சி செந்தக்கு பிலச்சி...பார்த்தேன் சிரித்தேன் மாதிரித்தான் முயன்றிருக்கின்றார்கள். சொல் விளையாட்டு இருக்கிறது. மொழி புரிவதால் தமிழ் வரிகளில் உள்ள ஆழம் தெலுங்கு வரிகளில் இல்லை என்பதும் புரிகிறது. தெலுங்கிலேயே ஆழம் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இந்தப் பாடல் வரிகளில் இல்லை.

    அடுத்த குறை கண்டசாலா. இவர் நல்ல பாடகர்தான். ஆனால் ஏற்ற இறக்கங்கள் இறங்கியே இருக்கும். பீ.பி.ஸ்ரீநிவாஸ் தெலுங்கும் பேசத் தெரிந்தவர். அவரே பாடியிருக்கலாம். இசையரசியைச் சொல்ல வேண்டியதில்லை. தமிழில் அவர் செய்த சிறப்பைத் தெலுங்கிலும் செய்திருக்கிறார்.

    அது சோபன் பாபுவா? யார் இந்த நெளிந்த இடுப்பர்னு நெனச்சேன். :)

     

  • At December 15, 2007 at 1:50 PM, Blogger L N Srinivasakrishnan said…

    தெலுங்கிலெ பொதுவாக டானஸ் எல்லாம் தமிழை காட்டிலும் இன்னும் கொஞ்சம் 'கும்'ன்னு இருக்கும் - இது என்னடா இப்படி இருக்கே-ன்னு யோசிக்க வைத்து விட்டது.

     

  • At December 16, 2007 at 4:18 AM, Blogger கானா பிரபா said…

    //தமிழ்பித்தன் said...
    சீ...சீ.. என்று நம்மட ஆக்களுட்ட பாடினால் அன்றே கதை கந்தள்தான்//

    தம்பி, நீர் உந்த விசப்பரீட்சையில் இறங்கட்டால் அதுவே போதும் ;-)

    //G.Ragavan said...
    தமிழில் கவிதை அருமை. பாடிய குரல்கள் அருமை. பீ.பி.சீனிவாசும் பி.சுசீலாவும். இசையமைப்பும் அருமைதான்.//

    ராகவன்

    உங்கள் ஆய்வு அருமை, பாடலைப் பரிந்துரைந்தமைக்கு மீண்டும்
    நன்றி ;-)

    //L N Srinivasakrishnan said...
    தெலுங்கிலெ பொதுவாக டானஸ் எல்லாம் தமிழை காட்டிலும் இன்னும் கொஞ்சம் 'கும்'ன்னு இருக்கும் - இது என்னடா இப்படி இருக்கே-ன்னு யோசிக்க வைத்து விட்டது.//

    வாங்க சிறீனிவாசகிருஷணன்

    இது பழைய தெலுங்கு என்பதால் கும் குறைச்சலா இருக்கும்.

     

  • At December 27, 2007 at 5:23 AM, Blogger Kanags said…

    பிபி ஸ்ரீ்நிவாஸ் பாடல்கள் இன்றும் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். பாடல் காடசி்யைத் தந்தமைக்கு நன்றி.

    இவர் ஏ.வி.எம்.ராஜன் சில ஆண்டுகளுக்கு முதல் சிட்னிக்கு வந்து கிறிஸ்தவ சமயப் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்ததார். பலர் மதம் மாறினார்கள் என்றும் கேள்விப்பட்டேன்.

     

  • At December 27, 2007 at 2:34 PM, Blogger கானா பிரபா said…

    வணக்கம் சிறீ அண்ணா

    ஏ.வி.எம். ராஜன் கிறீஸ்தவத்துக்கு மாறி இப்போது மதப் பிரச்சாரங்கள் செய்கின்றார்.

     

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
"இதழில் கதை எழுதும் நேரமிது" - ஜேசுதாஸ் to எஸ்.பி....
நடிகர் விஜய் சுடப்போகும் அடுத்த படம் :)
வாலிட்டெழுதிய நீலக்கடைக்கண்ணில் மீனோ?
கீரவாணி.....இரவிலே கனவிலே பாட வா நீ
பாவனா பேட்டி
சின்ன மனுஷன் செயலைப் பார்த்து சிரிப்பு வருது!
சங்கத்தில் பாடாத கவிதை - மூன்று வடிவில்
சுகமானி நிலாவு - நம்மள் பாட்டு ஒண்ணு
அவுஸ்திரேலியத் தேர்தலில் தீவிரவாதம் குறித்த விவாதம்
பாராளுமன்றத்து ஜல்லிக்கட்டு
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது