வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Sunday, December 2, 2007
"இதழில் கதை எழுதும் நேரமிது" - ஜேசுதாஸ் to எஸ்.பி.பாலா
ருத்ரவீணா என்ற படம் கே.பாலசந்தர் தெலுங்கில் இயக்கி சிரஞ்சீவி, ஜெமினி கணேசன், ஷோபனா நடித்தது. இப்படம் இளையராஜாவுக்கு 1988 இற்கான சிறந்த இசையமைப்பாளர் விருதையும் கொடுத்த படமது. இப்படத்திற்குப் புகழ் கிடைத்த அளவுக்கு கல்லாப்பெட்டியை நிறைக்கவில்லை.

நடிகர் கமலஹாசன் தன் வாழ்க்கைத் தொடரை ஜெமினி சினிமாவில் எழுதியபோது தெலுங்கில் தோல்வியைக் கண்ட ருத்ரவீணாவை தன் குருநாதர் கே.பாலசந்தர் வீம்பாகத் தமிழில் எடுத்ததாகக் குறிப்பிட்டிருந்தது இப்போது ஞாபகத்துக்கு வருகின்றது. தமிழில் உன்னால் முடியும் தம்பி என்ற பெயரில் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் தன்னம்பிக்கை கருத்து நூலின் தலைப்பையே வைத்து, நாயகனுக்கும் உதயமூர்த்தி என்ற பெயரிட்டு கமலஹாசன், ஜெமினி கணேசன், சீதா நடிப்பில் கே.பாலசந்தர் இயக்கி வந்திருந்தது அப்படம். மென்மையான கதாபாத்திரங்களில் ஒரு காலத்தில் நடித்து நீண்ட இடைவெளிக்குப் பின் ஜெமினி கணேசனுக்கு மீள் வரவாக அமைந்த இப்படத்தில் பிலஹரி மார்த்தாண்டம்பிள்ளையாக அவர் கர்ஜித்ததத மறக்க முடியுமா?

இப்பதிவில் தெலுங்கில் ருத்ர வீணாவிலும், தமிழில் உன்னால் முடியும் தம்பியிலும் வந்த ஒரே மெட்டு பாட்டு இரண்டாக காட்சிகளைத் தருகின்றேன். லலிதா ராகத்தில் தெலுங்கில் கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா பாடிய அதே மெட்டில் தமிழில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும், சித்ராவும் பாடியிருக்கிறார்கள். எது நல்ல ஜோடி என்று நினைக்கின்றீர்கள்?

தெலுங்கில் "லலித ப்ரிய கமலம்" (you tube: vasilihari)


தமிழில் "இதழில் கதை எழுதும் நேரமிது ( your tube : bbsarav )
posted by கானா பிரபா 2:45 AM  
 
31 Comments:
  • At December 2, 2007 at 3:24 AM, Blogger G.Ragavan said…

    லலித ப்ரிய கமலம் விரிச்சினதி...ஆகா...அருமையா இருக்கு. இப்பத்தான் கேக்குறேன். ஏசுதாசும் சூப்பரா பாடியிருக்காரு. ரொம்பவே நல்லாப் பாடியிருக்காரு. தமிழில் பாலுவும் நல்லாப் பாடியிருக்காரு. தமிழை விட சித்ரா தெலுங்குல நல்லாப் பாடியிருக்குறாப்புல இருக்கு. தமிழ்ல ஏற்கனவே சிலச்சில இடங்கள்ள கஷ்டப்பட்ட மாதிரி ஒரு எண்ணம் இருந்துச்சு. ஆனா தெலுங்குல அந்தக் கஷ்டம் தெரியலை. நல்ல ஒழுங்கு இருக்கு. கூட்டிக்கழிச்சிப் பாத்தா தெலுங்குல பாட்டு நல்லாருக்கு. பாடல்கள் வரிகளை வெச்சுப் பார்க்கும் போது தராசு நடுவுலதான் நிக்குது. நல்லா பாட்டு அறிமுகப் படுத்தியிருக்கீங்க.

     

  • At December 2, 2007 at 10:18 AM, Blogger Sridhar V said…

    ஜேசுதாஸை மிகவும் பிடிக்கும் என்றாலும், இந்த பாடலை பொறுத்தவரையில், தெரிந்த மொழி, பாடல் படமாக்கப்பட்ட விதம், நடித்தவர்களின் spontaneity போன்றவைகளினால் தமிழ்தான் எனக்குப் பிடித்தது.

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் மற்றும் படம். மிக்க நன்றி!

     

  • At December 2, 2007 at 12:24 PM, Blogger கோபிநாத் said…

    தல அட்டகாசமான பாட்டு..தெலுங்கில் இப்ப தான் கேட்கிறேன்.

    ஜேசுதாஸ்+சித்ரா - சூப்பர்

    அப்படியே ஷோபனா டான்ஸ் சூப்பரு ;)

     

  • At December 2, 2007 at 3:24 PM, Blogger கானா பிரபா said…

    வணக்கம் ராகவன்

    இப்படியான பாட்டுக்கு தெலுங்கில் பாலுவையும், தமிழில் ஜேசுதாசையும் விடுவது தான் வழக்கமான சமாச்சாரம்,. ஆனால் வித்தியாசமாக இடமாற்றிய "ராஜ" தந்திரத்தை என்னவென்று சொல்ல ;)

     

  • At December 2, 2007 at 3:37 PM, Blogger CVR said…

    அட அட அட!!
    பாட்டு நிச்சயமா யேசுதாசின் குரலுக்கு ஏற்ற பாட்டு!!
    அதில் எந்த வித சந்தேகமும் இல்லை.நான் வழக்கமாகவே யேசுதாசின் குரலுக்கு பரம இரசிகன்.இந்த பாட்டை கேட்டு கிறங்கி விட்டேன்.
    மெல்லிய மாலை சூரியனுடன் பாடலை படமாக்கிய விதமும் அருமை!!
    அலைபாயுதே படத்தில் வரும் "நகிட நகிட நகிடா" பாட்டில் வரும் reverse playback technique (dunno whats the techinical jargon for that,its the funda wherein video is played back reverse) தமிழ் பாட்டிலும் உபயோகப்படுத்தியிருக்காங்க!!இப்போதான் பாக்கறேன்.
    தமிழ் பாட்டின் படமாக்கமும் அருமை.ஆனால் ஷோபனாவின் கண்களின் அழகும் நடனமும் சீதாவின் நளினத்தினை தூக்கி சாப்பிட்டுவிடுகிறது.
    மொத்தத்துல கூட்டி கழிச்சு பாத்தா தெலுங்கு பாட்டுக்கே என்னோட வோட்டு (close)

    பி.கு:ஒரு பதிவு போட்டா என்னமா மொக்க போடுறான்டா இந்த சீவீயாரு :-P !!

     

  • At December 2, 2007 at 6:05 PM, Blogger கானா பிரபா said…

    //Sridhar Venkat said...
    ஜேசுதாஸை மிகவும் பிடிக்கும் என்றாலும், இந்த பாடலை பொறுத்தவரையில், தெரிந்த மொழி, பாடல் படமாக்கப்பட்ட விதம், நடித்தவர்களின் spontaneity போன்றவைகளினால் தமிழ்தான் எனக்குப் பிடித்தது. //

    தமிழ்ப்பாட்டு இன்னொரு வகையில் காட்சிப்படுத்தப்பட்டும் இருக்கிறது இல்லையா

    //கோபிநாத் said...
    அப்படியே ஷோபனா டான்ஸ் சூப்பரு ;)//

    தல

    ரொம்ப ஜொள்ளிடாதீங்க, கீபோர்ட் மழையில் நனைஞ்ச காக்கை போல வந்திடும் ;-)

     

  • At December 2, 2007 at 8:27 PM, Blogger SurveySan said…

    யேசுதாஸ் ரொம்பவே பிடிக்கும், ஆனாலும், இந்த பாட்டுக்கு,

    SPB & Chitra தான் என் favourite!

     

  • At December 2, 2007 at 10:47 PM, Blogger pudugaithendral said…

    சந்தேகமே இல்லாமல் யேசுதாஸ் + சித்ரா ஜோடிதான்.

     

  • At December 2, 2007 at 11:16 PM, Blogger M.Rishan Shareef said…

    தெரிந்த மொழியென்பதாலும் அழகான வெளிப்புறக் காட்சிப்படுத்தலாலும்,அருமையான கவி வரிகளாலும் (நாளும் நிலவது தேயுது மறையுது...மங்கை முகமென யாரதைச் சொன்னது?) தமிழ்ப் பாடல்தான் நன்றாக இருப்பதாகத் தோணுகிறது.
    சித்ரா இரண்டிலும் நன்றாகப் பாடியிருக்கிறார்.அது சரி,குயில் எந்த மொழியில் கூவினாலும் நன்றாகத் தானே இருக்கும்...?
    கே.யேசுதாஸ்,எஸ்.பி.பாலசுப்ரமணியம் இருவரும் இரு மொழிகளுக்கும் சிறப்புச் சேர்த்திருக்கிறார்கள்.
    தமிழில் அப்பாடலைத் தந்த பாடலாசிரியரையும் குறிப்பிட்டிருக்கலாமே?

     

  • At December 2, 2007 at 11:37 PM, Blogger வந்தியத்தேவன் said…

    பத்மஸ்ரீ ஜேசுதாஸ் சித்ரா காம்பினேசனுடன் நம்ம கமலும் சோபனாவும் தமிழில் ஆடியிருந்தால் சூப்பராக இருக்கும். இருவரும் முறைப்படி பரத நாட்டியம் படித்தவர்கள்.

    ம்ம்ம் அந்தக் காலத்தில் ராஜா ராஜாங்கம் நடத்திய காலம். எத்தனையோ முறை இந்தப் படம் பார்த்தேன் இன்னமும் அலுக்கவில்லை.

     

  • At December 3, 2007 at 12:42 AM, Blogger கானா பிரபா said…

    //CVR said...
    அட அட அட!!
    பாட்டு நிச்சயமா யேசுதாசின் குரலுக்கு ஏற்ற பாட்டு!!
    அதில் எந்த வித சந்தேகமும் இல்லை.//

    காமிரா கவிஞரே

    கவித்துவமான பின்னூட்டம் போட்டு விட்டு மொக்கை என்று சொல்றீங்களே? ரெம்பத் தான் தன்னடக்கம் உங்களுக்கு.

    //SurveySan said...
    யேசுதாஸ் ரொம்பவே பிடிக்கும், ஆனாலும், இந்த பாட்டுக்கு,

    SPB & Chitra தான் என் favourite!//

    சர்வேசரே

    சபாஷ் சரியான போட்டி ;-)

     

  • At December 3, 2007 at 3:32 AM, Blogger கானா பிரபா said…

    //புதுகைத் தென்றல் said...
    சந்தேகமே இல்லாமல் யேசுதாஸ் + சித்ரா ஜோடிதான்.//

    வாங்க புதுகைத் தென்றல்

    மாறி மாறி தெரிவுகள் வருது ;-)

    //எம்.ரிஷான் ஷெரீப் said...
    தமிழில் அப்பாடலைத் தந்த பாடலாசிரியரையும் குறிப்பிட்டிருக்கலாமே?//

    ரிஷான்,

    அந்தப் படத்தில் புலமைப் பித்தனும், முத்துலிங்கமும் பாடல்களை எழுதியிருக்கின்றார்கள். இந்தப் பாடலை எழுதியவர் புலமைப்பித்தன் என்று நினைக்கின்றேன்.

    //வந்தியத்தேவன் said...
    பத்மஸ்ரீ ஜேசுதாஸ் சித்ரா காம்பினேசனுடன் நம்ம கமலும் சோபனாவும் தமிழில் ஆடியிருந்தால் சூப்பராக இருக்கும். இருவரும் முறைப்படி பரத நாட்டியம் படித்தவர்கள்.//

    வந்தியத் தேவன் சரியாச் சொன்னியள் மூன்று பேர் கூட்டணி கூட இனிமையாக இருக்கும்.

     

  • At December 3, 2007 at 6:04 AM, Blogger cheena (சீனா) said…

    பாடும் நிலா பாலுவின் பாடல் தமிழ்ப் பாடல் - எனக்குப் பிடித்தது. ஜேசுதாசின் இனிய குரலும் என்னை மயக்கியது. இரண்டுமே காதில் பாய்ந்த தேன்

     

  • At December 3, 2007 at 12:53 PM, Blogger M.Rishan Shareef said…

    உங்களிடம் கேட்டால் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு பாடல் கேட்கப் போகிறேன் கானா பிரபா.
    எனக்கு எஸ்.பி.பி,மற்றும் ஜானகியம்மா பாடிய
    "பார்த்த பார்வையில் என் உள்ளம் என்ன பள்ளமானது?"
    பாடல் வேண்டும். படம் "பார்த்த பார்வையில்".
    இந்தப் படம் பற்றிய தகவல்களோடு பாட்டும் வேண்டும்..தரமுடியுமா நண்பரே?

     

  • At December 3, 2007 at 6:55 PM, Blogger கானா பிரபா said…

    வாங்க சீனா

    நடுநிலையா தீர்ப்புக் கொடுத்திருக்கீங்க ;-)



    ரிஷான்

    நீங்கள் கேட்ட பாட்டு வீடியோவாக இல்லை, ஓடியோவில் சில நாட்களில் றேடியோஸ்பதி பதிவில் தருகின்றேன். பார்த்த பார்வையில் பாட்டு, "கெளரி மனோகரி" படத்தில் வந்தது. இசை: இனியவன், படத்தில் நடித்தவர்கள் நாயகன் நாயகி உட்பட புதுமுகங்கள்.

     

  • At December 3, 2007 at 7:18 PM, Blogger CVR said…

    /// At December 3, 2007 12:53 PM, எம்.ரிஷான் ஷெரீப் said…

    உங்களிடம் கேட்டால் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில////

    கேட்டதும் கொடுப்பவனே கானா கானா
    நீங்க கானா பிரபாவா?? இல்ல கர்ணா பிரபாவா??
    :-P

     

  • At December 3, 2007 at 7:44 PM, Blogger கானா பிரபா said…

    கேட்டதும் கொடுப்பவனே கானா கானா
    நீங்க கானா பிரபாவா?? இல்ல கர்ணா பிரபாவா??
    :-P//

    ஸ்ஸ் யப்பா, அனல் வெயிலடிக்கிற சிட்னியில் இப்பிடி குளிருதே ;-))

     

  • At December 3, 2007 at 8:36 PM, Blogger pudugaithendral said…

    எனக்கு ஒரு பாடல் தேடி தருவீர்களா?

    பாடல் வரிகள் மட்டுமே தெரியும்

    கூவின பூங்குயில்,குருவிகள் இயம்பின
    இயம்பின சங்கம், எம்பெருமான் பள்ளி
    எழுந்தருளாயே.

    செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
    மென்பஞ்சு மேகமே கோலம் போடு.

    தோள்கள் இரண்டில் கையோடு மாலை இட்டு
    ஆடச் சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி

    இப்படி போகும் பாடலில்....

    ஒரு கிளி உறங்குது தோளோடு,
    ஒரு கிளி உறங்குது மார்போடு,
    குடும்பமே ஆனந்த கிளிக்கூடு

    தேடிக் கொடுத்தால் ஆனந்த மடைவேன்

    அத்தோடு

    தேடுகின்ற கண்களுக்குள் குடியிருக்கும் சாமி எனும் ஐயப்பன் பாடல். திரைப்படப்பாடல் தான்

     

  • At December 3, 2007 at 9:41 PM, Blogger கானா பிரபா said…

    வாங்க புதுகைத் தென்றல்

    நீங்கள் கேட்ட அதிகப்படியான பாடல்கள் கைவசமே இருக்கு, றேடியோஸ்பதி மூலம் தந்துதவுகின்றேன். வரும் போது மடலில் தெரியப்படுத்துகின்றேன்.

     

  • At December 4, 2007 at 4:47 AM, Anonymous Anonymous said…

    /கேட்டதும் கொடுப்பவனே கானா கானா
    நீங்க கானா பிரபாவா?? இல்ல கர்ணா பிரபாவா??
    :-P
    //

    நம்ப கானா பிரபா அண்ணா ஒரு மனுசனே இல்லை.அவரு தெய்வம்ன்னு சொல்ல வந்தேன்.பாட்டு அருமை அண்ணா ;)

     

  • At December 4, 2007 at 1:47 PM, Blogger கானா பிரபா said…

    தங்கச்சி

    பாட்டு அருமை இருக்கட்டும், சைக்கிள் கேப்பில இந்த அண்ணனை இப்படி வாரிட்டியேம்மா?

     

  • At December 4, 2007 at 8:23 PM, Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said…

    அருமையான பாடல்.
    பிரபாவின் பதிவையும் பார்த்தேன்!
    CVR பதிவையும் பார்த்தேன்!

    பின்-னால் வந்த பதிவென்பதால், பின்-ஊட்டம் அந்தப் பதிவுக்கு முதலில் இட்டு விட்டேன்! பிரபா அண்ணே கோச்சிக்காதீங்க! :-)

    பாடல் வரிகள் மட்டும் இல்லை!
    இசையும் அப்படியே! இரண்டு பத்திகளையும் பாருங்கள்!

    //இனிய பருவமுள்ள இளங்குயிலே//
    ன்னு இழைவாகத் துவங்கும் பாடல்...

    //நானும் எழுதிட இளமையும் துடிக்குது
    நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது//
    என்று டமடம என்று வேகமாக முடியும்!

    பின்னர்...
    //தோகை போலேமின்னும்
    பூவை உந்தன்கூந்தல்//
    ன்னு மீண்டும்...அடங்கி இழைவாகத் தொடங்கும்!

    கூடல் உவகையில்...
    துவங்கும் போது இருக்கும் மென்மை,
    நடுவில் வேகம் கூடுது...பின்பு மீண்டும் மென்மை ஆவதை இசையிலேயே எப்படிக் கொண்டு வராரு பாருங்க ராஜா! :-)

    தெலுங்கிலும் சரி, தமிழிலும் சரி...இந்த ஸ்டைல் அப்படியே இருக்கு! இசை சில சமயங்களில் மொழியையும் கடக்கிறது!

    தொட்டுத் தொட்டுச் செல்வதை/சொல்வதை விடத் தொட்டும் தொடாமலும் செல்வதில்/சொல்வதில் தான் சுவை கூடவே வரும்! :-)

    நேத்து ராத்திரியம்மா ன்னு புயல் பாடல்கள் வரும் அதே திரை இசையில்,
    இது போல் தென்றல் பாடல்கள் அவ்வப்போது வருவது நெஞ்சத்தைக் கிள்ளும்! :-)

     

  • At December 4, 2007 at 9:02 PM, Blogger M.Rishan Shareef said…

    நன்றிகள் கானா பிரபா.
    இன்னும் நிறையப் பாடல்கள் உங்களிடம் கேட்கப்படுவதற்காகக் காத்திருக்கின்றன.இனி வரும் காலங்களில் ஒவ்வொன்றாகக் கேட்கிறேன்.தொந்தரவுக்கு மன்னிக்கவும் நண்பா.

     

  • At December 5, 2007 at 6:41 PM, Blogger கானா பிரபா said…

    kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    அருமையான பாடல்.
    பிரபாவின் பதிவையும் பார்த்தேன்!
    CVR பதிவையும் பார்த்தேன்!

    பின்-னால் வந்த பதிவென்பதால், பின்-ஊட்டம் அந்தப் பதிவுக்கு முதலில் இட்டு விட்டேன்! பிரபா அண்ணே கோச்சிக்காதீங்க! :-)

    கண்ணபிரான்

    சிவிஆர் நம்ம பங்காளி தான், அவருக்கு மொய் வச்சாலே போதும் ;-)
    -இந்தப்பாடுக்கு இவ்வளவு ரொமான்டிக் சமாச்சாரங்களா ஆகா

     

  • At December 5, 2007 at 7:49 PM, Anonymous Anonymous said…

    அதுசரி, இதழில் கதையெழுத எது நல்லநேரமெண்டு இன்னும் நீங்கள் சொல்லேலயே?
    நானும் நம்பி வந்து ஏமாந்துபோனன்.
    ஏற்கனவே கனக்க இதழ்களுக்குக் கதையெழுதி அனுப்பியும் ஒருத்தனும் பிரசுரிக்கிறானில்லை.
    நீங்கள் 'இதழில் கதையெழுதும் நேரமெது' எண்டு சொன்னால் முயற்சித்துப் பார்க்கலாம்.

     

  • At December 5, 2007 at 11:46 PM, Anonymous Anonymous said…

    அண்ணா

    செம்மீன் பற்றிய பதிவு எங்கே?? இந்தப் பாடல் நினைவிருக்கிறதா என்று பாருங்களேன்.

    "வெண்ணிலா முற்றத்திலே வேணுகானம், மேல்மாடி கரயில நீயும் நானும்."

    மூன்று தினங்களாக குழம்பிக் கொண்டிருக்கிறேன். தயவு செய்து கண்டுபிடித்து சொல்லவும்

    ஸ்ரீ

     

  • At December 6, 2007 at 2:06 PM, Blogger கானா பிரபா said…

    அநானி அண்ணை

    இதழில் கதையெழுத நேரம் முக்கியமா? 24 மணி நேர சேவையெல்லோ?

    வணக்கம் ஸ்ரீ

    செம்மீன் லிங் இதோ
    http://kanapraba.blogspot.com/2006/03/blog-post_31.html

    "வெண்ணிலா முற்றத்திலே வேணுகானம், மேல்மாடி கரயில நீயும் நானும்."

    கேட்டமாதிரி இருக்கு, கண்டுபிடிக்க முயல்கின்றேன்.

     

  • At December 6, 2007 at 2:20 PM, Blogger G.Ragavan said…

    வெண்ணிலா நேரத்திலே வேணுகாணம்
    மேல்மாடி முத்தத்திலே நானும் நீயும்...

    படம் : நேயர் விருப்பம்
    இசை : விஜயபாஸ்கர்

    இந்தப் படத்துலயே மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராமா ராமான்னு கூட பாட்டு ஒன்னு இருக்கு. அதுவும் நல்லாருக்கும்.

     

  • At December 6, 2007 at 2:32 PM, Blogger கானா பிரபா said…

    ஆபத்பாந்தவரே மிக்க நன்றிகள் ;-)

    என்னிடம் அந்தப்பாட்டு இல்லை, இணையத்தில் தேடிப் பார்க்கின்றேன்.

     

  • At December 6, 2007 at 2:54 PM, Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said…

    பிரபா!
    தெலுங்கிலுமுண்டென்பது இப்போதே தெரியும், ஜேசுதாஸ் பிரியமானாலும்
    இங்கே பாலா தான் முன்னிற்கிறார்.
    சோபனா,சீதா நளினங்கள் குறைவில்லை,கமல் ரசிக்கும்படியுள்ளார்.
    சிரஞ்சீவி ஐயோ பாவமாக இருக்கிறார்.
    மெட்டு மறக்கமுடியாதது...ராஜாவின் வைரத்திலொன்று...

     

  • At December 8, 2007 at 3:35 AM, Blogger கானா பிரபா said…

    வணக்கம் யோகன் அண்ணா

    தெலுங்கில் சிரஞ்சிவிக்கு இப்படியான வேடங்கள் பொருந்தாது, அங்கேயும் கமல-ஹாசனே நடித்திருக்கலாம்.

     

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
நடிகர் விஜய் சுடப்போகும் அடுத்த படம் :)
வாலிட்டெழுதிய நீலக்கடைக்கண்ணில் மீனோ?
கீரவாணி.....இரவிலே கனவிலே பாட வா நீ
பாவனா பேட்டி
சின்ன மனுஷன் செயலைப் பார்த்து சிரிப்பு வருது!
சங்கத்தில் பாடாத கவிதை - மூன்று வடிவில்
சுகமானி நிலாவு - நம்மள் பாட்டு ஒண்ணு
அவுஸ்திரேலியத் தேர்தலில் தீவிரவாதம் குறித்த விவாதம்
பாராளுமன்றத்து ஜல்லிக்கட்டு
மாடப்புறாவே வா..! (மலையாள வடிவம்)
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது