வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Wednesday, October 31, 2007
சங்கத்தில் பாடாத கவிதை - மூன்று வடிவில்
ஒரே மெட்டு திரையிசையாக தமிழ், தெலுங்கு மலையாளப் பாடல்களாக வந்திருப்பதை அப்பாடல்களோடு இணைத்துத் தருகின்றேன்.

மூன்றாம் பிறை படத்தில் இடம்பெற்ற பின்னணி இசைக்கோர்ப்பு ஒன்றை அப்பட இயக்குனர் பாலுமகேந்திரா, தனது ஓளங்கள் மலையாளப்படத்தின் பாடல் வடிவமாக்கித் தருமாறு இசையமைப்பாளர் இளையராஜாவைக் கேட்கவும் அவர் அப்படியே மலையாளப்பாடலாக்கிக் கொடுத்திருந்தார். பின்னர் அதே மெட்டு பாலுமகேந்திராவின் "நிரீக்சனா" என்ற தெலுங்குப் படப்பாடலாகவும், ஓட்டோ ராஜா தமிழ்த் திரைப்படத்தின் காதல் ஜோடிப் பாடலாகவும் தாவியதை விபரிக்கின்றது இவ் ஒளித்தொகுப்பு.

மலையாள வடிவம் - தும்பி வா



தமிழ் வடிவம் - சஙகத்தில் பாடாத கவிதை


தெலுங்கு வடிவம் - ஆகாசம் ( எஸ்.பி.பாலசுப்ரமணியம் பங்கு பெறும் ஒரு நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளினி பாடுகின்றார்.
posted by கானா பிரபா 2:59 AM  
 
13 Comments:
  • At October 31, 2007 at 5:35 AM, Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said…

    பிரபா!
    தமிழ் வடிவம் படமாக இப்போது தான் பார்த்தேன்; இது விஜயகாந் படமா???
    தேடிப் போட்டதுக்கு நன்றி!

     

  • At October 31, 2007 at 7:51 AM, Anonymous Anonymous said…

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

     

  • At October 31, 2007 at 7:52 AM, Blogger உடுவை எஸ். தில்லைநடராசா said…

    பிரபா எனது வாழ்த்துக்கள்.

     

  • At October 31, 2007 at 3:14 PM, Blogger கானா பிரபா said…

    //யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
    பிரபா!
    தமிழ் வடிவம் படமாக இப்போது தான் பார்த்தேன்; இது விஜயகாந் படமா???
    தேடிப் போட்டதுக்கு நன்றி!//

    யோகன் அண்ணா

    ஆமாம் இது விஜயகாந்தின் ஆரம்பகாலப் படங்களில் ஒன்று. மிக்க நன்றி தங்கள் வருகைக்கு

     

  • At October 31, 2007 at 7:57 PM, Blogger கானா பிரபா said…

    அநானி நண்பர் மற்றும் தில்லை அண்ணாவின் வருகைக்கு நன்றிகள்

     

  • At November 2, 2007 at 7:42 AM, Blogger Ram Prasad said…

    ஆய்யா

    "சந்தத்தில் .." எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.

    உங்களிடம், "நண்டு" படத்தில் வரும் "மஞ்சள் வெய்யில்.." பாடல் உள்ளதா ?

    - ராம்

     

  • At November 2, 2007 at 8:29 PM, Blogger கானா பிரபா said…

    வணக்கம் ராம்

    இத்தொகுப்பில் உள்ள பாடல்கள் யூடிபில் பிடித்தவை. நண்டு பாடல் இருந்தால் போடுகின்றேன்.

     

  • At November 6, 2007 at 3:18 PM, Blogger கோபிநாத் said…

    தல என்ன சொல்லறது...வார்த்தைகளே இல்ல அந்த அளவுக்கு இந்த பாடல் எனக்கு பிடிக்கும்


    தும்பி வா.

    இப்போது தான் இந்த காட்சியை பார்க்கிறேன். பாலுமகேந்திரா பாலுமகேந்திரா தான்...ஒவ்வொரு காட்சியும் கவிதை...அந்த பாடலை சிதைக்காமல் எவ்வளவு அருமையாக காட்சிகளை அமைத்து கலக்கியிருக்காரு..கிரேட் ;)))
    படம் கிடைத்தால் பார்க்க வேண்டும்.

    இது உங்களுக்கு தெரியும் இருந்தாலும் சொல்லிவிடுகிறேன்....சென்னையில் நடந்த கச்சேரியில் ராஜா இந்த பாடலை வாத்தியங்களில் மூலம் கேட்டால் எப்படி இருக்கும் என்று இசை அமைத்து காட்டியிருப்பாரு...அந்த காட்சி கிடைத்தால் போடுங்கள் ;))

    தமிழ் வடிவம்....வேண்டாம் ஒன்றும் சொல்லவதற்கில்லை...;)

    இப்படி ஒரு அழகான பாடல் காட்சியை போட்டுவிட்டு ஒரு வார்த்தை கூட சொல்லாத உங்களுக்கு என் லேசான கண்டனங்கள் ;)

     

  • At November 6, 2007 at 3:22 PM, Blogger கானா பிரபா said…

    வாங்க தல

    ராஜா சொன்ன அந்த ஒளித்துண்டைத் தேடிப் போடுகின்றேன். பாட்டே ஆயிரம் சேதி சொல்லுதே? நான் வேற சொல்ல வேண்டுமா?

     

  • At November 6, 2007 at 6:22 PM, Blogger கோபிநாத் said…

    \\கானா பிரபா said...
    வாங்க தல

    ராஜா சொன்ன அந்த ஒளித்துண்டைத் தேடிப் போடுகின்றேன். பாட்டே ஆயிரம் சேதி சொல்லுதே? நான் வேற சொல்ல வேண்டுமா?\\

    தல இதோ கண்டுபிடிச்சிட்டேன்...

    http://www.youtube.com/watch?v=tV_IVtXcg4g

    பாருங்கள் ;)))

     

  • At November 6, 2007 at 6:34 PM, Blogger ஆதிபகவன் said…

    பிரபா,
    பாலுமகேந்திராவின் தெலுங்குப் படமொன்று தமிழில் டப் செய்தபோது இதே மெட்டில் வேறொரு பாடலாக வெளிவந்தது என நினைக்கிறேன்.

    "நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே
    தீ கூட குளிர் காயுதே...."
    என்று ஆரம்பிக்கும். பாடலை கவிஞர் அறிவுமதி எழுதியிருந்ததாக ஞாபகம்.

    பானுசந்தர் நடித்தா படமென நினைக்கிறேன்.

     

  • At November 7, 2007 at 2:03 AM, Blogger கானா பிரபா said…

    //கோபிநாத் said...

    தல இதோ கண்டுபிடிச்சிட்டேன்...

    http://www.youtube.com/watch?v=tV_IVtXcg4g

    பாருங்கள் ;)))//

    மிக்க நன்றி தல

    இதையும் இப்பதிவில் நாளை சேர்த்துவிடுகின்றேன்.

     

  • At November 7, 2007 at 2:06 AM, Blogger கானா பிரபா said…

    //ஆதிபகவன் said...
    பிரபா,
    பாலுமகேந்திராவின் தெலுங்குப் படமொன்று தமிழில் டப் செய்தபோது இதே மெட்டில் வேறொரு பாடலாக வெளிவந்தது என நினைக்கிறேன்.//

    வணக்கம் ஆதிபகவன்

    நீங்கள் சொல்லும் பாடல் தான் நான் தந்திருக்கும் தெலுங்குப்பாடல். இது நிரீக்ஷணா என்று தெலுங்கில் முதலில் வந்திருந்தது. பின்னர் கண்ணே கலைமனே என்று தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இன்னொரு தகவல், இதே படம் தான் மலையாளத்தில் யாத்ரா என்றும், தமிழில் அது ஒரு கனாக்காலம் என்றும் பாலுமகேந்திராவால் எடுக்கப்பட்டது.

     

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
சுகமானி நிலாவு - நம்மள் பாட்டு ஒண்ணு
அவுஸ்திரேலியத் தேர்தலில் தீவிரவாதம் குறித்த விவாதம்
பாராளுமன்றத்து ஜல்லிக்கட்டு
மாடப்புறாவே வா..! (மலையாள வடிவம்)
காதல் வைத்து காதல் வைத்துக் காத்திருந்தேன்.....!
ஸ்ரீ வித்யா நினைவில்: பூங்காவியம் பேசும் ஓவியம்!
தெலுங்கு இளையராஜா vs ஹிந்தி ஆனந்த் மிலிந்த்
ஆகாயப் பந்தலிலே SG A380 பறக்குதம்மா
இளையராஜா ஆர்மோனியம் இசைத்த பாட்டு
ஆத்துமேட்டுல ஒரு பாட்டு கேட்குது...!
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது