வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Saturday, October 13, 2007
இளையராஜா ஆர்மோனியம் இசைத்த பாட்டு
இளையராஜா தெலுங்கில் இசைமைத்த, மணிரத்னம் இயக்கத்தில் வந்த படம் கீதாஞ்சலி, இது தமிழில் இதயத்தைத் திருடாதே என்று வந்தது. "அதில் சித்ரா பாடும் "ஜல்லண்ட" என்ற பாட்டுக்கு மெட்டுப் போட்டாயிற்று. சித்ராவிற்கும் பாடிக் காட்டியாயிற்று. வாத்தியக்காரர்களை ஒருங்கிணைத்து எப்படியான இசைக் கோர்வை பாட்டில் வரவேண்டும் என்று இளையராஜா எதிர்பார்த்ததையும் வாத்தியக்காரர்களுக்குச் சொல்லியாயிற்று. சரி, இனிப் பாடல் ஒலிப்பதிவுக்கு முன் ஒத்திகை ஆரம்பமாயிற்று.

குறித்த பாடலின் இடையில் வரும் ஆர்மோனிய வாத்திய வாசிப்பை ஆர்மோனியக்காரர் வாசிக்கின்றார். ஆனால் ராஜா மனதில் எதிர்பார்த்தது ஏனோ அதில் மிஸ்ஸிங். மீண்டும் மீண்டும் இளையராஜா, குறித்த வாத்தியக்காரரை அந்த இசையை வாசிக்கச் சொல்லிக் கேட்கின்றார். ம்ஹீம், ராஜா எதிர்பார்த்த அந்தச் சங்கதி வரவேயில்லை.
இளையராஜா ஆர்மோனியத்தை வாங்கிக் கொள்கின்றார். நேராக ஒலிப்பதிவு ஆரம்பம். சித்ரா பாடுகின்றார். மற்றைய வாத்தியங்கள் சங்கமிக்க, இளையராஜாவே நேரடியாக ஆர்மோனியத்தை வாசிக்க, அவர் எதிர்பார்த்த அந்தச் சங்கதியே ராஜாவின் வாசிப்பில் பாடலாக ஒலிப்பதிவு செய்யப்படுகின்றது. இந்தப் பாட்டினை அணு அணுவாக ரசிப்பவர்களுக்கு உண்மையில் ராஜா வேண்டிக் கேட்ட அந்த அற்புத ஆர்மோனிய வாசிப்பின் தாற்பர்யம் புரியும். வளைந்து நெளிந்து குழைந்து என்னமாய் பிரவாகிக்கின்றது இந்த இசை.



இதே திரைப்படத்தில் வந்த "ஓ ப்ரியா ப்ரியா" தெலுங்கு வடிவம். பாட்டும் அழகு, காட்சியும் அழகு. தெலுங்கில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடல்களைத் தமிழ் வடிவத்தில் மனோ பாடியிருப்பார்.



ஓ பாப்பா லாலி
posted by கானா பிரபா 9:22 PM  
 
6 Comments:
  • At October 14, 2007 at 2:04 AM, Blogger வடுவூர் குமார் said…

    விஜயவாடாவில் இந்த படத்தை பார்த்தேன்,பிச்சிகிட்டு ஓடியது அப்போ!
    பாடலகள் எல்லாம் அருமையாக படத்துடன் பிணைந்திருக்கும்.

     

  • At October 14, 2007 at 5:11 AM, Blogger கானா பிரபா said…

    வாங்க வடுவூர் குமார்

    ஆந்திர அரசின் நந்தி விருதை வாங்கிக் குவித்த படமல்லவா.

    ராஜாவின் பாடல்களில் இந்தப் படமும் ஒரு மைல்கல்.

     

  • At October 14, 2007 at 2:19 PM, Blogger கோபிநாத் said…

    தல அங்கே கேள்வி இங்கே பதிலா...கலக்கல் ;))

     

  • At October 14, 2007 at 6:53 PM, Blogger கானா பிரபா said…

    வாங்க தல

    எனக்கு இதயத்தைத் திருடாதே படத்தில் மனோ பாடியதை விட, தெலுங்கில் எஸ்.பி.பி பாடியதுதான் இன்னும் பிடிக்கும். அதையும் சேர்த்துக் கொடுத்திருக்கின்றேன்.

     

  • At October 14, 2007 at 8:39 PM, Blogger Vasanthan said…

    அண்ணை,
    உதில முதற்பாட்டில 'காவாலியே' எண்டு ஒரு சொல் வருது.
    உதுக்கு என்ன அர்த்தம் எண்டு ஒருக்கா கேட்டுச் சொல்லுவியளே?

     

  • At October 14, 2007 at 9:46 PM, Blogger கானா பிரபா said…

    காவாலி எண்டால் தேவை/வேண்டும் என்று அர்த்தம். என்னை முழுநேர மொழிபெயர்ப்பாளர் ஆக்கிற பிளானே ராசா?

     

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
ஆத்துமேட்டுல ஒரு பாட்டு கேட்குது...!
மலையாளம் தரும் "காற்றுவெளியிடைக் கண்ணம்மா"
வயிறு குலுங்கச் சிரிக்க வைத்த "பாண்டிப்படை"
மணிச்சித்ரதாளு -> ஆப்த மித்ரா -> சந்திரமுகி
நடிகர் விஜயனுக்காக
A படத்தில் எனக்குப் பிடிச்ச பாட்டு
பாடி அழைத்தேன் பாட்டின் மூலப் பாட்டு
உந்தன் தேசத்தின் குரல்.....
ஆன்மீகப் பேச்சு வீடியோ நல்லை ஆதீனம்
பிஞ்சுமனம் - குறும்படம்
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது