வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Wednesday, September 26, 2007
நடிகர் விஜயனுக்காக
திரையுலகில் மளமளவென்று சிலருக்கு வாய்ப்புக்கள் வந்து கொட்டும். அதுவும் கிடைத்த வாய்ப்புக்கள் எல்லாமே குறிப்பிடத்தக்க, சொல்லிக் கொள்ளத் தக்கதாக வந்தது நடிகர் விஜயனுக்கு. ஆனால் அதை அனுபவிக்கத்தான், அவருடைய குறுகியகாலச் சந்தோஷங்கள் இடங் கொடுக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் அவர் தமிழ் சினிமாவுலகில் மீளக் கால் பதித்தபோது ஒரு வாரப் பத்திரிகைக்காகத் தன்னையே நொந்து கொண்டு நடிகர் விஜயன் கொடுத்த பேட்டி இப்போது நினைவுக்கு வருகின்றது. தொடர்ந்து வருடா வருடம் படங்களில் நடித்துக் குவித்தவர், ஒரு கட்டத்தில் ஒன்றுமே இல்லாமலும் இருந்து மீண்டு(ம்) வந்தார்.


உதிரிப்பூக்கள், நிறம் மாறாத பூக்கள், தனி மரம், விடுகதை ஒரு தொடர்கதை, பசி என்று அவருக்குத் தனி முத்திரை கொடுத்த படங்களின் பட்டியல் நீளும். மலையாளத் திரையுலகில் கூட அவருக்கென்று ஒரு இடமுண்டு. இவர் நடிகராக மட்டுமன்றி திரைக் கதாசிரியராகவும் இருந்திருக்கின்றார்.
அண்மையில் மறைந்த விஜயன் நினைவாக "நிறம் மாறாத பூக்கள்" திரையில் இருந்து "ஆயிரம் மலர்களே மலருங்கள்"

பாடல் உதவி: யூ ரியூப் வழி ரெக் சதீஷ்

posted by கானா பிரபா 3:02 AM  
 
10 Comments:
  • At September 26, 2007 at 5:37 AM, Blogger  வல்லிசிம்ஹன் said…

    விஜயன் மறைவு மிக்க வருத்தத்தை கொடுத்தது.
    நல்லதொரு நடிகர்.

    எடுத்த பாத்திரங்களின் பரிணாமங்களை அறிந்து பூரணமாகப்
    படைத்துக் காட்டினார்.

    அவரைச் சரியாகப் பயன்படுத்தவில்லை என்பதுதான் சோகம்.
    நன்றி பிரபா.

     

  • At September 26, 2007 at 6:19 AM, Blogger மங்கை said…

    ஆம்...ஏனோ அவருக்கு வாய்புகள் வரவேயில்லை...ஹ்ம்ம் கேள்விப்படதும் மிகவும் வருத்தமாகத்தான் இருந்தது...

     

  • At September 26, 2007 at 5:31 PM, Blogger கானா பிரபா said…

    வருகைக்கு நன்றிகள் வல்லி சிம்ஹன் மற்றும் மங்கை

    விஜயனைத் தேடி நல்ல வாய்ப்புக்கள் வராமல் இல்லை, ஆனால் போதையின் பாதையில் சில காலம் அவர் வழி தவறிவிட்டார், அது திரையுலகிற்கும் ஒரு இழப்பே.

     

  • At September 26, 2007 at 6:50 PM, Blogger வவ்வால் said…

    கானாப்பிரபா,

    வழக்கம் போல நல்லப்பதிவு அதுவும் , தற்போது மறைந்த விஜயன் அவர்களின் நினைவாக போட்டிருப்பது ஒரு கலைஞனுக்கான அஞ்சலியாகவும் அமையும், நன்றி!

    //விஜயனைத் தேடி நல்ல வாய்ப்புக்கள் வராமல் இல்லை, ஆனால் போதையின் பாதையில் சில காலம் அவர் வழி தவறிவிட்டார், அது திரையுலகிற்கும் ஒரு இழப்பே.//

    உண்மை தான் போதையின் பாதையில் வழி தவறியவர் தான், திரை உலகில் அனேகமாக அனைவரும் மது அருந்துவார்கள், ஆனால் அது கேமிராவுக்கு பிறகே , இவர் படப்பிடிப்பிலே மது அருந்திவிட்டு தான் நடிப்பார் எனவும் செய்தியுண்டு, மேலும் சரியான காலத்தில் படத்தை முடிக்க உதவாமல் பல சமயங்களில் இழுப்பார் எனவும் கேள்வி அதனாலேயே பட வாய்ப்புகள் போயிற்று.

    இதனாலேயே திறமை இருந்தும் பிரகாசிக்க முடியாமல் போயிற்று.உணவுக்கே நண்பர்களை எதிர்ப்பார்த்து தான் வாழ்வதாக அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்!அவ்வப்போது கிடைக்கும் சிறிய பாத்திரங்கள் மூலம் அப்படி என்ன பிரமாதமான வருவாய் வந்திருக்கும்.

     

  • At September 26, 2007 at 8:27 PM, Blogger கானா பிரபா said…

    வாங்க வவ்வால்

    விஜயனின் படங்கள் பற்றிப் பேசிக்கொண்டே போகலாம்,
    சுஜாதா என்றொரு படம், அதில் "நீ வருவாய் என நான் இருந்தேன்" என்ற பாடலும் உண்டு, இதன் கதை கூட விஜயன் எழுதியதாக எங்கோ படித்த ஞாபகம் ஆனால் இதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை.

    காஜா இயக்கத்தில் வந்த "ஒரு விடுகதை ஒரு தொடர்கதையும்" இவரின் நல்ல படங்களில் ஒன்று. இப்படத்தின் பாடலொன்று இன்றிரவு றேடியோஸ்பதியில் வரவிருக்கின்றது.

     

  • At September 26, 2007 at 8:32 PM, Blogger VSK said…

    திறமையான ஒரு நடிகர் தன் பழக்கங்களினால் சோடை போனதுதான் பெரிய சோகம்.

    இன்னொருவர் கார்த்திக்!

     

  • At September 26, 2007 at 10:38 PM, Blogger கானா பிரபா said…

    //VSK said...
    திறமையான ஒரு நடிகர் தன் பழக்கங்களினால் சோடை போனதுதான் பெரிய சோகம்.

    இன்னொருவர் கார்த்திக்!//



    கரெக்டா சொன்னீங்க வீ.எஸ்.கே

     

  • At September 26, 2007 at 11:15 PM, Blogger  வல்லிசிம்ஹன் said…

    குடித்தல் என்ற அரக்கன் எல்லோரையும் விழுங்கி விடுகிறான்.
    அந்த விஷயத்தில் சாவித்திரி நினைவும் வருகிறது.:((((

     

  • At September 26, 2007 at 11:39 PM, Anonymous Anonymous said…

    Dear sir

    One more doubt pls.

    this is vijayakanth movie. song:Anthipoo kanatha penmai manjathil vandhathu
    senganthal malargalai kai enre nee sonnal naan nambavo

    can u pls identify this song beginning and the name of the picture pls

     

  • At September 26, 2007 at 11:46 PM, Blogger கானா பிரபா said…

    வாங்க நண்பரே

    நீங்கள் கேட்ட பாடல் "ஆட்டோ ராஜா"வில் வரும் "சங்கத்தில் பாடாத கவிதை என்ற பாடல். இசை இளையராஜா

     

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
A படத்தில் எனக்குப் பிடிச்ச பாட்டு
பாடி அழைத்தேன் பாட்டின் மூலப் பாட்டு
உந்தன் தேசத்தின் குரல்.....
ஆன்மீகப் பேச்சு வீடியோ நல்லை ஆதீனம்
பிஞ்சுமனம் - குறும்படம்
வீடியோஸ்பதி: காலத்தின் கட்டாயம்
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது