வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Friday, October 12, 2007
ஆத்துமேட்டுல ஒரு பாட்டு கேட்குது...!
ஒரு நல்ல பாட்டை எப்படியெல்லாம் காட்சியில் எடுத்துக் கெடுக்கமுடியும் என்பதற்கு உதாரணமாக ஒரு பாடலை இங்கு தருகின்றேன். கிராமத்து அத்தியாயம் திரையில் இருந்து கங்கை அமரன் வரிகளில், மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி பாடும் "ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது" என்ற இனிய பாடல் எப்படிச் சுரத்தே இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கின்றது என்பதைப் பாருங்கள். இசைஞானி இளையராஜாவின் ஆரம்பகாலப் பாடல்களை உரியமுறையில் காட்சிப்படுத்தலில் கொண்டுவராமல் சதி செய்த இப்படியான இயக்குனர்கள் பலர் இருக்கின்றார்கள். நாயகனும் சரி நாயகியும் சரி ஒரு ஜீவனும் இல்லாமல் வந்து போகிறார்கள். இவர்களை இளையராஜா ஆண்டவர் மன்னிப்பாராக.

எலோ டைரக்டரு ! தமிழ் நாட்டுல இதை விட நல்ல ஒரு ஆத்துமேடும் உம்ம கண்ணில் படலியா?

posted by கானா பிரபா 7:37 PM  
 
22 Comments:
  • At October 12, 2007 at 7:51 PM, Blogger வி. ஜெ. சந்திரன் said…

    சுரத்தாவரணும் எண்டா என்ன செய்யவேணும் உவை ?

     

  • At October 12, 2007 at 8:25 PM, Blogger கானா பிரபா said…

    கானா பிரபா said...
    அண்ணை

    பாட்டை வடிவாப் பாத்தியளெண்டா விளங்கும். என்னட்டை கேளாதேங்கோ, சொல்ல மாட்டன்.

     

  • At October 12, 2007 at 8:49 PM, Blogger Unknown said…

    இந்த பாட்டை ஒரு நூறு முறையாவது கேட்டிருப்பேன். ஆனால், காட்சியை இப்போதுதான் பார்க்கிறேன்.... கொடுமைதான்!

     

  • At October 12, 2007 at 8:52 PM, Blogger கொண்டோடி said…

    முதற்கேள்வி: ஆத்துமேடு எண்டு எதைச்சொல்லிறியள்?
    'நல்ல ஆத்துமேட்டைத்தான்' காட்ட வேணுமெண்டால், இதயமெண்ட சொல்லுக்கு துடிக்கிற இதயத்தைக்காட்டிற ரி.ராஜேந்தரை ஏன் நக்கலடிக்க வேணும்?
    ரெண்டாவது கேள்வி: சந்திரன் கேட்டதுதான். (எனக்கெண்டா இதுதான் சரியான சுரத்துப் போல கிடக்கு. நாயகன் பெரும்பாலான நேரங்களில பல்லைக்காட்டிக் கொண்டிருக்கிற மாதிரித்தான் எங்கட பெடியள் பெட்டையளைக் கண்டால் நிப்பாங்கள் எண்டு நினைக்கிறன்.)

     

  • At October 12, 2007 at 8:59 PM, Blogger கானா பிரபா said…

    கொண்டோடி அண்ணை

    இதை விட இன்னும் எழிலான ஆற்றுப்படுக்கை, களனி எல்லாம் இலவச லொகேஷனாக தமிழகம் முழுதும் விரவியிருக்கின்றது. அதில் எடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்பதே என் உள்ளக் கிடக்கை. மற்றப்படி ராஜேந்தர் மாதிரி முழு இதயத்தை செட்டில் வைத்துப் படம் எடுப்பது போல அவ்வளவு நெருக்கமாகவும் வரத்தேவையில்லை. உங்கட கதையைப் பார்த்தால் "உன் மூச்சுக் காற்று நான்" எண்ட வரி வந்தால் ஆளைச் சாகடிக்கோணுமோ எண்டு கேட்பியள் போல.

    சுரத்து என்ற விசயத்தைக் கவனிப்போம்.
    இப்பாடலின் துள்ளும் மெட்டுக்கும், இசைக்கும் அவர்கள் பிடிக்கும் அபிநயதை நன்றாகக் கவனித்துப் பார்த்தால் புரியும். எந்தவிதமான ஈடுபாடும் இல்லாத அபிநயங்கள்.

    இவ்வளவும் போதும் எண்டு நினைக்கிறன்.

     

  • At October 12, 2007 at 9:33 PM, Blogger கானா பிரபா said…

    //தஞ்சாவூரான் said...
    இந்த பாட்டை ஒரு நூறு முறையாவது கேட்டிருப்பேன். ஆனால், காட்சியை இப்போதுதான் பார்க்கிறேன்.... கொடுமைதான்!//

    வாங்க தஞ்சாவூரான்

    உங்க ஊர்லயே நிறைய இடம் இருக்கில்லையா. இந்தப் பாடலில் எனக்கிருக்கும் அளவுகடந்த அபிமானம் தான் இந்த ஆதங்கத்துக்கு காரணம்.

     

  • At October 12, 2007 at 9:55 PM, Blogger MyFriend said…

    என்ன கொடுமை பிரபா இது!

    பாடலை ஏற்கனவே கேட்டிருந்தாலும் இன்னைக்குதான் அதன் காட்சியை பார்க்கிறேன். இயக்குனருக்கு ஒரு :-(

     

  • At October 13, 2007 at 1:57 AM, Blogger கானா பிரபா said…

    //.:: மை ஃபிரண்ட் ::. said...
    என்ன கொடுமை பிரபா இது!//

    இது கொலக்கொடுமை மை பிரண்ட்
    ;-)

     

  • At October 13, 2007 at 3:01 AM, Blogger உண்மைத்தமிழன் said…

    கானா தம்பி.. என் வாழ்க்கைல முதல் முறையா இப்பத்தான் இந்தக் கொடுமையை பார்க்குறேன்..

    ஆனாலும் இது மட்டுமில்லே.. ஆரம்பக் கால விஜயகாந்த் படங்கள், கார்த்திக் படங்களிலெல்லாம் பார்த்தீர்களானால் அவைகளும் இந்த லட்சணத்தில்தான் எடுத்திருப்பார்கள்.

    அது வேறு காலம் பிரபா.. அப்போது சினிமா வெறும் பொழுது போக்கு மட்டுமே.. சர்க்கஸ் மாதிரி.. அப்போது அழகுணர்ச்சி, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இயக்கம் என்பதெல்லாம் தேவையே இல்லாமல் இருந்தது. அதனால்தான் இப்படி ஒரு கொடுமையும் நடந்துள்ளது..

    சுட்டிக்கும், தகவலுக்கும் நன்றி பிரபா..

     

  • At October 13, 2007 at 3:13 AM, Blogger கானா பிரபா said…

    வாங்கோண்ணா அட வாங்கோண்ணா ;-))

    அந்தக் காலத்திலும் அழகுணர்ச்சியோடு பாடல்கள் எடுத்தவர்கள் பலர் இருக்கின்றார்கள். பாரதிராஜா (வெள்ளுடைத் தேவதைகள் தவிர்த்து), மகேந்திரன், பாலுமகேந்திரா என்று பட்டியல் நீளும். என்ன செய்வது பிளாக்கில் தான் மொக்கை என்றால், இங்கே பாடலிலும் மொக்கை போடுகிறார்கள்.

    சோளக் கொல்லை பொம்மைக்கு வேட்டி சுத்தினமாதிரி நம்ம கதாநாயகன்
    வேற ;-))

     

  • At October 13, 2007 at 3:38 AM, Blogger G.Ragavan said…

    பிரபா மிகவும் அருமையான பாட்டு. உங்கள் கருத்தோடு பாதிதான் ஒத்துப் போகிறேன். என்னுடைய கருத்தைச் சொல்வதற்கு முன் ஒரு டிஸ்கி. இந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாட்டு. பாடியவர்கள், இசை எல்லாமே மிகமிக அருமை. சரி. இப்பொழுது கருத்துக்குப் போவோம்.

    1. என்னைக் கேட்டால் பாடற்காட்சி மிகமிக இயல்பாகவும்..இசை பலபடிகள் இயல்பிற்கும் மேலாகவும் இருப்பது போலத் தோன்றுகிறது. தமிழர்களில் நூற்றுக்கு 99 பேர் இப்பிடித்தான் ஆடுவார்கள். இப்படித்தான் சிரிப்பார்கள். இப்படித்தான் முழிப்பார்கள். ஆகையால்தான் பாடற்காட்சியும் இசையும் பொருந்தி வரவில்லை. இதை மிகத் திறமையாகக் கையாண்டவர் மகேந்திரன். யாரும் பாட மாட்டார்கள். பாடற்காட்சி போய்க்கொண்டேயிருக்க பின்னணியில் பாடல் ஒலிக்கும். நித்தம் நித்தம் நெல்லிச்சோறு விதிவிலக்கு. அதுவும் மெல்லிசை இசைக்கோர்வையோடு. இந்தப் பாடல் அளவிற்கு அதீத இனிமையான இசைக்கோர்வை இருக்காது. இயக்குனர் மனதில் நினைத்ததும்...இசையமைப்பாளரிடம் சொன்னதும் சரியாகப் பொருந்திடவில்லை. ஆகையால்தான் பொருத்தமில்லாமல் இருக்கிறது.

    2. மிகமிக இனிமையான இந்தப் பாடலை மிக அழகாகவும் படமாக்கியிருக்கலாம். பலர் செய்திருக்கிறார்கள். அந்த வகையில் செய்திருக்கலாம். அதில் மாற்றுக்கருத்தில்லை.

     

  • At October 13, 2007 at 3:44 AM, Blogger கானா பிரபா said…

    வாங்க ராகவன்

    //என்னைக் கேட்டால் பாடற்காட்சி மிகமிக இயல்பாகவும்..இசை பலபடிகள் இயல்பிற்கும் மேலாகவும் இருப்பது போலத் தோன்றுகிறது. //

    ராஜாவைக் குறை சொன்னதை மன்னிக்கிறேன் ;-)

    இசையமைத்த பாட்டைத் தானே காட்சிப்படுத்தினார்கள்? எனவே ஒன்றுக்கு நாலு முறை யோசித்திருக்கலாம். குறிப்பா லொகேஷனிலும், மெதுவாக அபிநயம் பிடிக்கும் பாங்கையும், காமிரா கோணத்தையும் சிரத்தையோடு பார்த்திருக்கலாம்.

    சரி படம் வந்து 27 வருசமாச்சு விட்டுடுவோம் ;-)

     

  • At October 13, 2007 at 7:37 AM, Blogger G.Ragavan said…

    // வாங்க ராகவன்

    ராஜாவைக் குறை சொன்னதை மன்னிக்கிறேன் ;-) //

    ஆகா...பிரபா, நான் எப்போ ராஜாவைக் குறை சொன்னேன்? அந்தப் பின்னூட்டத்துல தவறு எங்க நேர்ந்திருக்குன்னு எனக்குத் தோணியதைத் தெளிவாச் சொல்லீருக்கேனே.

    ===============================
    இயக்குனர் மனதில் நினைத்ததும்...இசையமைப்பாளரிடம் சொன்னதும் சரியாகப் பொருந்திடவில்லை. ஆகையால்தான் பொருத்தமில்லாமல் இருக்கிறது.
    ===============================

    நானும் இயக்குனர் மேலதான தவறைச் சொல்லியிருக்கிறேன். :)

     

  • At October 13, 2007 at 8:32 AM, Blogger ramachandranusha(உஷா) said…

    பிரபா. நல்லாதானே இருக்கு, ரெண்டு பேரும் இயற்கையாய் நடிச்சிருக்காங்க. உங்களுக்கு எல்லாம் சிவாஜி மன்னிச்சிக்குங்க ரஜினி, ஸ்ரேயா குதிச்சாதான் திருப்தி படும் :-)

     

  • At October 13, 2007 at 12:03 PM, Blogger SurveySan said…

    தலைவரே,நல்லாதான் இருக்கு.
    அந்த காலகட்டத்துக்கு ஏத்த போல இருக்கு.

    என்ன, ஹீரோவும் ஹீரோயினும் டொக்கா இருக்காங்க; கமலும் ஸ்ரீதேவியும் ஆடியிருந்தா ப்ரமாதமாயிருக்கும் ;)

    உங்க டெம்ப்ளேட் அம்புட்டு நல்லால்ல, வீடியோத் தளம் என்பதற்க்கு ஏத்தமாதிரி ஏதாவது நச்சுனு செய்யலாம்.

     

  • At October 13, 2007 at 12:22 PM, Blogger கோபிநாத் said…

    \\தஞ்சாவூரான் said...
    இந்த பாட்டை ஒரு நூறு முறையாவது கேட்டிருப்பேன். ஆனால், காட்சியை இப்போதுதான் பார்க்கிறேன்.... கொடுமைதான்!\\

    ஆஹா...நான் மட்டும் தான்னு நினைச்சேன் ஒரு கூட்டமா தான் இருக்கோம் போல இருக்கு..;))))

    தல இதே போல ஒரு விஜயகாந்த் பாட்டு இருக்கு....;))

     

  • At October 13, 2007 at 3:15 PM, Blogger கானா பிரபா said…

    //G.Ragavan said...
    // வாங்க ராகவன்

    ஆகா...பிரபா, நான் எப்போ ராஜாவைக் குறை சொன்னேன்? அந்தப் பின்னூட்டத்துல தவறு எங்க நேர்ந்திருக்குன்னு எனக்குத் தோணியதைத் தெளிவாச் சொல்லீருக்கேனே.//

    மன்னிக்கணும் ராகவன், ஒத்துக்கிறேன் ;-)


    //ramachandranusha(உஷா) said...
    பிரபா. நல்லாதானே இருக்கு, ரெண்டு பேரும் இயற்கையாய் நடிச்சிருக்காங்க. உங்களுக்கு எல்லாம் சிவாஜி மன்னிச்சிக்குங்க ரஜினி, ஸ்ரேயா குதிச்சாதான் திருப்தி
    படும் :-)//

    என்ன உஷாக்கா, இப்பிடி சொல்லீட்டீங்க ;-),

     

  • At October 13, 2007 at 3:19 PM, Blogger கானா பிரபா said…

    //SurveySan said...
    உங்க டெம்ப்ளேட் அம்புட்டு நல்லால்ல, வீடியோத் தளம் என்பதற்க்கு ஏத்தமாதிரி ஏதாவது நச்சுனு செய்யலாம்.//

    சர்வேசரே

    அப்பிடியும் இருக்கலாம் இல்லையா. சரி வீடியோஸ்பதியில் இன்னும் வேறு விஷயங்களும் வரும்.

    //கோபிநாத் said...
    ஆஹா...நான் மட்டும் தான்னு நினைச்சேன் ஒரு கூட்டமா தான் இருக்கோம் போல இருக்கு..;))))//

    வாங்க கொ.ப.செ ;-))

     

  • At October 13, 2007 at 4:45 PM, Blogger செல்லி said…

    எனக்குப் பிடிச்ச பாடல்களில இதுவும் ஒன்று. காட்சியை இப்பதான் பாக்கிறேன்.
    நன்றி, பிரபா

     

  • At October 14, 2007 at 5:10 AM, Blogger கானா பிரபா said…

    வருகைக்கு நன்றி செல்லியக்கா

     

  • At October 14, 2007 at 7:05 AM, Blogger கொண்டோடி said…

    //உங்கட கதையைப் பார்த்தால் "உன் மூச்சுக் காற்று நான்" எண்ட வரி வந்தால் ஆளைச் சாகடிக்கோணுமோ எண்டு கேட்பியள் போல.//

    ஐயா பிரபா,
    பிளேட்டை மாத்திப் போடுறியள் பாருங்கோ. உப்பிடிக் கேக்கக்கூடிய கட்சி உங்கட.. அதைத்தான் நான் கேள்வி கேட்டிருக்கிறன். நீங்கள் மாறி என்னையே திருப்பிக் கேக்கிறியள்.

    சரி, அதை விடுங்கோ..
    இஞ்ச ராகவனும் உஷா அக்காவும் சொன்னதோட கிட்டத்தட்ட ஒத்துப்போறன்.
    இந்தப்படத்தின்ர கதையென்ன, அது எப்பிடி எடுக்கப்பட்டது எண்டது எனக்குத் தெரியாது. ஆனால் நாயக, நாயகி முகங்களும் சரி, பாடற்காட்சியும் சரி மிக இயல்பாயிருக்கு எண்டதை மட்டும் சொல்லிக்கொள்ளிறன்.

    உங்களுக்கெல்லாம் வடநாட்டுக்காரி ஆராவது வந்து ஆடினாத்தான் பிடிபடும்...
    ;-)

     

  • At October 14, 2007 at 7:09 AM, Blogger கானா பிரபா said…

    கொண்டோடி அண்ணை

    திரும்பவும் சொல்றன். வட நாட்டுக்காரி தேவையில்லை. கொடுத்த பாட்டை ஒழுங்காப் பயன்படுத்தியிருக்கலாம். இயல்பு என்பது ஆளைச் சாகடிக்கும் வரை இருக்கவேணும் எண்டு எதிர்பார்க்கவில்லை ;)

     

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
மலையாளம் தரும் "காற்றுவெளியிடைக் கண்ணம்மா"
வயிறு குலுங்கச் சிரிக்க வைத்த "பாண்டிப்படை"
மணிச்சித்ரதாளு -> ஆப்த மித்ரா -> சந்திரமுகி
நடிகர் விஜயனுக்காக
A படத்தில் எனக்குப் பிடிச்ச பாட்டு
பாடி அழைத்தேன் பாட்டின் மூலப் பாட்டு
உந்தன் தேசத்தின் குரல்.....
ஆன்மீகப் பேச்சு வீடியோ நல்லை ஆதீனம்
பிஞ்சுமனம் - குறும்படம்
வீடியோஸ்பதி: காலத்தின் கட்டாயம்
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது