வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Friday, September 21, 2007
பாடி அழைத்தேன் பாட்டின் மூலப் பாட்டு
மலையாளத்தின் தலை சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் திரு ரவீந்திரன். இவர் கடந்த ஆண்டு காலமாகி விட்டார். ஆனால் இவரின் பாடல்கள் என்றும் இவரின் நினைவை உயிர்ப்பிக்கும். அதற்கு உதாரணமாக இன்று இரண்டு மலையாளப் பாடல்களைத் தருகின்றேன். அவை நீங்கள் தமிழில் அடிக்கடி கேட்ட "ரசிகன் ஒரு ரசிகை" என்ற சத்யராஜ், அம்பிகா நடிப்பில் வந்த படப்பாடலான " பாடி அழைத்தேன், உன்னை இதே தேடும் நெஞ்சம்" என்ற பாடலின் மூலப் பாட்டாகும்.

மலையாளத்தில் 1981 ஆம் ஆண்டு "தேனும் வயம்பும்" என்ற பெயரில் பிரேம் நசீர், மோகன் லால், நெடுமுடி வேணு, சுமலதா போன்ற முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் வந்த இப்பாடல்களைக் கண்டு களியுங்கள்.

தமிழில் 1986 ஆம் ஆண்டு வெளி வந்த ரசிகன் ஒரு ரசிகை திரைப்படத்தை இயக்கியிருந்தவர், தற்போது நகைச்சுவை நடிகனாக வலம் வரும் பாலு ஆனந்த்

இதில் எனக்கு மிகவும் பிடித்த பாடலாக மலையாளத்தில் ஜானகி பாடும் பாடலை முதலில் தருகின்றேன். பாடல் காட்சியையும் பாருங்கள், எவ்வளவு அழகுணர்ச்சியோடு படமாக்கப் பட்டிருக்கின்றது. (இந்தப் பாடலை மட்டும் இரண்டு முறை கிளிக்கி You tube பக்கம் சென்ற பின் பார்க்கவும்)



மலையாளத்தில் ஆண் குரலில் ஒலிக்கும் பாடலில் தோன்றி நடிக்கின்றார் நெடுமுடி வேணு



இதோ தமிழுக்கு வந்த "ரசிகன் ஒரு ரசிகை" படப் பாடல்

posted by கானா பிரபா 2:48 AM  
 
11 Comments:
  • At September 21, 2007 at 3:36 AM, Anonymous Anonymous said…

    எந்தா பிரபு ஏட்டா!

    ஓணத்துக்கு போய் இன்னும் மலையாள நாட்டுல இருந்து வரலையா?

     

  • At September 21, 2007 at 4:07 AM, Anonymous Anonymous said…

    can u identify the begining of this song?

    "Vanchi magal koonthal kalanthirukka, vandhu thodum un kaigal vagideutkka, bothai kondu poo azhakka, thedi vandhu then edukka"

    this was sung by s.janaki & i think if i am right the name of the movie is "Eeramana Rojave" can u pls help

     

  • At September 21, 2007 at 8:47 AM, Blogger கானா பிரபா said…

    //எந்தா பிரபு ஏட்டா!

    ஓணத்துக்கு போய் இன்னும் மலையாள நாட்டுல இருந்து வரலையா?//

    சேட்டா

    ப்ரியப்பட்ட மகா ஜனங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஓணம் கொண்டாடலாம் ;)

     

  • At September 21, 2007 at 9:18 AM, Blogger கானா பிரபா said…

    //Anonymous said...
    can u identify the begining of this song?

    "Vanchi magal koonthal kalanthirukka, vandhu thodum un kaigal vagideutkka, bothai kondu poo azhakka, thedi vandhu then edukka"//

    வணக்கம் நண்பரே

    நீங்கள் கேட்ட பாட்டு " இசை மேடையில் இன்ப வேளையில் சுகராகம் பொழியும்" என்று ஆரம்பிக்கும். படத்தின் பெயர் இளமைக் காலங்கள். அந்தப் படத்தில் "ஈரமான ரோஜாவே" என்று தொடங்கும் பாட்டும் இருக்கின்றது. ஆனால் "ஈரமான ரோஜாவே" வேறு படம். இரண்டுக்கும் ஒரே ஒற்றுமை இசை இளையராஜா

     

  • At September 21, 2007 at 12:29 PM, Blogger G.Ragavan said…

    தேனும் வயம்பும் வாயில் தூவும் வானம்பாடி....இது மலையாள வரிகள். ஒரே ஒரு எழுத்து மட்டும் மாத்துனா தமிழ். தேனும் வசம்பும் வாயில் தூவும் வானம்பாடி....அழகான கவித்துவமான வரிகள். இதுல இருக்குற கவிதை பாடி அழைத்தேன் வரிகள்ள இல்ல.

    வசம்பு குழந்தைகளுக்கு உரசி ஊட்டுவாங்க. தூத்துக்குடி ஓதுவார் கடைல கிடைக்கும்.

    ரவீந்திரன் ஒரு இனிய கலைஞர். சமீபத்தில் இவருடைய இசையில் வந்த அம்மகிளிக்கூடு படத்துல வர்ர ஹ்ருதய கீதமாய் பாட்டு எனக்கு மிகமிகப் பிடித்த பாட்டு.
    http://www.youtube.com/watch?v=JlFNX9D0blI
    இதைக் கேட்கும்படி பரிந்துரைக்கிறேன்.

     

  • At September 21, 2007 at 12:31 PM, Blogger G.Ragavan said…

    ஒரு சிறிய தவறு செய்து விட்டேன். தேனும் வயம்பும் வாயில் என்று தவறாக எழுதி விட்டேன்.

    தேனும் வயம்பும் நாவில் தூவும் வானம்பாடி....

    வசம்பை உரசி நாவில்தான் தேய்ப்பார்கள்.

    இந்தப் பாட்டை முழுமையாக மலையாளத்தில் கேட்ட பொழுது இன்றைய தமிழ் சினிமா கவிஞர்கள் மேல் ஏமாற்றம் வந்தது. :(

     

  • At September 21, 2007 at 8:30 PM, Blogger SurveySan said…

    chetta, adipoli.

     

  • At September 22, 2007 at 2:13 AM, Blogger கானா பிரபா said…

    வணக்கம் ராகவன்

    நான் பாடலை ஒலியேற்றினாலும் ஒளியேற்றினாலும் உங்கள் கருத்துத் தான் எப்போதுமே அதற்கு மெருகூட்டுக்கின்றது. தேனும் வயம்பும் என்ற வரிகளில் "வயம்பு" என்றால் என்ன என்று தேடிக்கொண்டிருந்தேன். வசம்பு தெரிந்தும் கூட இப்படிப் பொருத்திப் பார்க்கவில்லை.

    மற்றப்படி பாட்டு வரிகள் தமிழில் எத்தனையோ படி கீழிறங்கியே இருக்கின்றது. மலையாளப் பாட்டுக்கு கேரள அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது பிஜு திருமலாவுக்குக் கிடைத்திருப்பது மேலுமொரு அங்கீகாரம்.

     

  • At September 22, 2007 at 6:28 PM, Blogger கானா பிரபா said…

    //SurveySan said...
    chetta, adipoli.//

    தாங்க் யூ சேட்டா ;-))

     

  • At September 23, 2007 at 7:45 AM, Blogger கோபிநாத் said…

    தல...இந்த பாட்டுக்கு இசையமைச்சது..ஒரு மலையாள இசையமைப்பாளர்ன்னு இப்பதான் இது தெரியும்...

    கலக்கல்...தல ;))

     

  • At September 23, 2007 at 2:13 PM, Blogger கானா பிரபா said…

    வாங்க தல,

    லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் ஆ வந்திருக்கீங்க, ரவீந்திரன் சார் இன்னும் சில படங்கள் தமிழில் பண்ணியிருக்கிறார்.

     

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
உந்தன் தேசத்தின் குரல்.....
ஆன்மீகப் பேச்சு வீடியோ நல்லை ஆதீனம்
பிஞ்சுமனம் - குறும்படம்
வீடியோஸ்பதி: காலத்தின் கட்டாயம்
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது