வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Saturday, February 2, 2008
மனோரமாவிற்காக கமல் பாடிய பாடல்
"தமிழ் சினிமா 75" என்ற மலேசியாவில் நடிகர்களின் கலை நிகழ்ச்சியை சமீபத்தில் பார்த்திருந்தேன். நாலு மணி நேர நிகழ்ச்சியில் இரண்டு மணி நேர விளம்பரமும், குத்தாட்டமும் நிரம்பியிருக்க, அவற்றை ஓட விட்டுப் பார்த்த நிகழ்ச்சியில் தேறியதை மட்டும் You tube இல் ஏற்றி உங்களோடு பகிரலாம் என்று இந்தப் பதிவைத் தருகின்றேன்.

நடிகை மனோரமாவிற்கான கெளரவமாக இடம்பெற்ற நிகழ்வில், நடிகர் கமலஹாசன் இந்த நிகழ்ச்சிக்கு வராமலே (அதுவும் நல்லதுக்கு தான்), மனோரமாவுடன் இணைந்து போற்றிப் பாடிய "முத்துக்குளிக்க வாரீகளா" பாட்டு புது வடிவில் சிறப்பாக இருந்தது. ஏற்கனவே பாடிவைத்து ஒலிப்பதிவு செய்த கமலஹாசனின் குரலுக்கு நடிகர் பரத் வாயசைக்க மனோரமாவும் கூடவே இணைந்து கொண்டார். ஆனால் சில இடங்களில் அவர் பாடும் கணங்களை மறந்து வாயை மூடி இருந்ததும் கவனிக்கத் தவறவில்லை. இதோ அந்தக் காட்சி.
posted by கானா பிரபா 5:21 AM  
 
11 Comments:
  • At February 2, 2008 at 6:17 AM, Blogger MyFriend said…

    நானும் பார்த்தேன்.. என்னடா பரத் கமல் குரல்ல பாடுறாரேன்னு. பாட்டு முடிஞ்சதும்தான் தெரிஞ்சது ஏற்கனவே ரெக்கார்ட் பண்ணதுன்னு. ;-)

     

  • At February 2, 2008 at 7:22 AM, Blogger கொழுவி said…

    சுமார் ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த மனோரமாவைக் கெளரவிக்கும் நிகழ்வொன்றில் கமலகாசனே மேடையில் இணைந்து மனோரமாவுடன் அந்தப் பாடலைப் பாடியிருந்தார். ரொம்பப் பழைய அந்நிகழ்வை அண்மையில் இந்திய குடியரசு தின நிகழ்வில் சன் ஒளிபரப்பியது.

     

  • At February 2, 2008 at 7:57 AM, Blogger G.Ragavan said…

    அந்தப் பாட்டு எல்.ஆர்.ஈஸ்வரியும் டி.எம்.எஸ்சும் பாடுனது. அதை மனோரமாவும் கமலும் நல்லாவே பாடியிருக்காங்க. காலத்தை வென்ற பாடல். தூத்துக்குடிப் பாடல். தேடிக் கொடுத்தமைக்கு நன்றி.

     

  • At February 2, 2008 at 3:36 PM, Blogger கானா பிரபா said…

    // கொழுவி said...
    சுமார் ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த மனோரமாவைக் கெளரவிக்கும் நிகழ்வொன்றில் கமலகாசனே மேடையில் இணைந்து மனோரமாவுடன் அந்தப் பாடலைப் பாடியிருந்தார். //

    மேலதிக தகவலுக்கு நன்றி கொழுவி

    //G.Ragavan said...
    அந்தப் பாட்டு எல்.ஆர்.ஈஸ்வரியும் டி.எம்.எஸ்சும் பாடுனது. அதை மனோரமாவும் கமலும் நல்லாவே பாடியிருக்காங்க. காலத்தை வென்ற பாடல். தூத்துக்குடிப் பாடல். தேடிக் கொடுத்தமைக்கு நன்றி.//

    வாங்க ராகவன்

    இந்த உறுத்தல் இல்லாத மீள் கலவைப் பாடலை ரசிக்க முடிகின்றது. இந்த வாட்டி நானே யூடிபில் ஏற்றினேனாக்கும் ;-)

     

  • At February 2, 2008 at 4:27 PM, Blogger வடுவூர் குமார் said…

    நானும் ரிக்கார்ட் பண்ணினேன்,நீங்களே முன்னால் போட்டுடிங்கீங்க.நல்லது.

     

  • At February 2, 2008 at 5:37 PM, Blogger Vasanthan said…

    கொழுவி சொல்லும் விழா நடிகைகள் சிறிபிரியாவும், ராதிகாவும் மனோரமாவுக்கென நடத்திய விழா. பத்மசிறி விருது வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்விழா நடைபெற்றது. எப்போது ஆச்சிக்கு விருது வழங்கப்பட்டதென்பது சரியாக ஞாபகமில்லை.

    ஆனால் கலைஞர் ஆட்சியிலிருக்கும்போது அவ்விழா நடைபெற்றது. கலைஞரின் வாழ்த்துச் செய்தியை நடிகர் சரத்குமார் வாசித்தார்.

     

  • At February 2, 2008 at 5:50 PM, Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said…

    //தேறியதை மட்டும் You tube இல் ஏற்றி உங்களோடு பகிரலாம் என்று இந்தப் பதிவைத் தருகின்றேன்//

    இதுக்குத் தான் எங்க கா.பி.அண்ணாச்சி வேணும்கிறது!

    தம்பி உடையான் படைக்கு அஞ்சான்
    அண்ணாச்சி உடையான் பாட்டுக்கு அஞ்சான்! :-))

     

  • At February 2, 2008 at 5:57 PM, Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said…

    எல்.ஆர்.ஈஸ்வரி குரலில் கேட்ட பாடல்...மனோரமா குரலிலும் சூப்பரா ஒத்துப் போகுது!

    பரத் சும்மா வாய் அசைப்பது நல்லாவே தெரியுது! கமல் சிரிக்கும் போது அவரு மிஸ் பண்ணிட்டாரு! :-))

    நன்றி அண்ணாச்சி! நல்ல ஜாலி அசைபடம்! :-)

     

  • At February 2, 2008 at 6:08 PM, Blogger கானா பிரபா said…

    // வடுவூர் குமார் said...
    நானும் ரிக்கார்ட் பண்ணினேன்,நீங்களே முன்னால் போட்டுடிங்கீங்க.நல்லது.//

    வாங்க குமார்

    நீங்க யூடிபில் ஏற்றும் வேலை மிச்சம் இப்போ;-)

    //வசந்தன் said...
    கொழுவி சொல்லும் விழா நடிகைகள் சிறிபிரியாவும், ராதிகாவும் மனோரமாவுக்கென நடத்திய விழா. //

    வணக்கம் அண்ணை

    இது தைப்பொங்கலுக்கு புதுவருசத்துக்கு முதல் நாள் ஒலிபரப்பியதைத் தான் இங்கே தந்தேன். இது ராதிகா கூட்டணியின் படைப்பு தான். கொழுவி வந்தாலே குழப்பமோ ;)

    // kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    தம்பி உடையான் படைக்கு அஞ்சான்
    அண்ணாச்சி உடையான் பாட்டுக்கு அஞ்சான்! :-))//

    ஆஹா..ஆஹா, தம்பி கண்ணபிரான் உள்ள இந்த அண்ணனும் படை, சொறி, சிரங்குக்கு அஞ்சான் ;-)

     

  • At February 2, 2008 at 7:42 PM, Blogger கானா பிரபா said…

    //kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    பரத் சும்மா வாய் அசைப்பது நல்லாவே தெரியுது! கமல் சிரிக்கும் போது அவரு மிஸ் பண்ணிட்டாரு! :-))
    //

    மனோரமா கூட தன் பகுதியில் விட்டுட்டாங்க ;-)

     

  • At February 3, 2008 at 4:44 AM, Blogger கானா பிரபா said…

    // .:: மை ஃபிரண்ட் ::. said...
    நானும் பார்த்தேன்.. என்னடா பரத் கமல் குரல்ல பாடுறாரேன்னு. பாட்டு முடிஞ்சதும்தான் தெரிஞ்சது ஏற்கனவே ரெக்கார்ட் பண்ணதுன்னு. ;-)//

    சிஸ்டர்

    உங்க ஊரில் தானே நடந்தது. நீங்களும் டிவில தான் பார்த்திருக்கீங்க போல.

     

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
மலையாள நடிகர் பரத்கோபி நினைவாக..!
ஹீரோ - வில்லன்...ம்....குட் காம்பினேசன்
Britney Spears தோன்றும் மலையாளப் பாடல்
நடிகர் பாண்டியனுக்காக...
என்ன கொடுமை இது அம்பயர்?
Happy New Year வந்ததே....!
அண்ணன் மேர்வின் சில்வாவை ஆறுதல் படுத்த
என் பார்வையில் ==> *** Taare Zameen Par***
2007 இல் நான் ரசித்த ஹிந்திப்படம் =>Heyy Babyy
Aap Jaisa Koi - ஆஹா எத்தனை வடிவமடா?
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது