வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Saturday, July 5, 2008
இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் ஐம்பது வரையான படங்களுக்கு இசையமைத்தும் இருக்கின்றார். அதில் தெலுங்கில் தான் அதிகம் வந்திருக்கின்றன. இவரின் இசையமைப்புத் திறனுக்கு மிகச் சிறந்த ஒரு உதாரணம் சிகரம் திரைப்படம். கே.பாலசந்தரின் உதவியாளராக அனந்து பலகாலம் இருந்து பின் கவிதாலா சார்பிலேயே எடுத்த படம் அது.

பார்த்திபன் நடித்த தையல்காரன் திரைப்படம், எண்பதுகளில் கலக்கிய கால் இழந்த நடிகை சுதா சந்திரன் நடித்த மயூரி போன்றவற்றிற்கும் இசை இவர் தான். இறுதியாக தன் மகன் சரண் தயாரிப்பில் வந்த "உன்னைச் சரணடைந்தேன்" திரைப்படத்திற்கும் இசை கொடுத்திருந்தார். அப்படத்தின் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை. ஆனாலும் இசைஞானி இளையாராஜா, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி, மற்றும் எஸ்.பி.பி ஆகிய மூன்று இசையமைப்பாளர்கள் பாடிய "நட்பு நட்பு" பாடல் ஒரு புதுமை படைத்தது.

ரஜினிகாந்த் நடித்த "துடிக்கும் கரங்கள்" திரைப்படத்தின் இசை கூட எஸ்.பி.பி தான். ஆனால் அவரின் உத்தியோகபூர்வ தளத்தில் கூட அப்படத்தைத் இசையமைப்புப் பட்டியலில் போட மறந்து விட்டார். அப்படத்தில் இருந்து

சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்

சிகரம் திரைப்படத்தின் எல்லாப் பாடல்களுமே முத்துக்கள் என்றாலும், எடுத்த எடுப்பில் முதலில் என்னைக் கவராவிட்டாலும் இப்போது இந்தப் பாடலை எப்போதும், எத்தனை முறை கேட்டாலும் காதில் தேன் வந்து பாயுது.
"இதோ இதோ என் பல்லவி"



இதோ இதோ என் பல்லவி பாடலை முதற்தடவையாக மேடையில் பாடுகின்றார் எஸ்.பி.பி. இணைந்து பாடுகின்றார் சைந்தவி. எனக்கு மிகவும் பிடித்த, ஆனால் இன்றுவரை அதிகம் பேசப்படாத இசையமைப்பாளர் தாயன்பன் இந்த இசை நிகழ்ச்சியை வழங்குகின்றார். சுமார் 8 வருசங்களுக்கு முன்னர் தாயன்பன் அவுஸ்திரேலியா வந்திருந்தபோது தன்னுடைய முழு இசைக்கலைஞர்களையும் கொண்டு வந்து எந்த வித கீபோர்ட் ஜாலமும் இல்லாமல் நேரடி இசைவிருந்து கொடுத்தவர். தாயன்பன் இசையில் வந்த "உன்னிடத்தில் நான்" என்ற திரைப்படத்தில் "நினைத்தால் உனைத்தான் நினைப்பேன்" என்ற ஜேசுதாஸ், வாணி ஜெயராம் பாடலைக் கேட்டுப்பாருங்கள். (Dhool தளத்தில் அந்தப் பாடலைக் கேட்க) தாயன்பன் திறமை புரியும்.

posted by கானா பிரபா 2:27 AM  
 
15 Comments:
  • At July 5, 2008 at 3:53 AM, Blogger நிஜமா நல்லவன் said…

    ///சிகரம் திரைப்படத்தின் எல்லாப் பாடல்களுமே முத்துக்கள் என்றாலும்//

    உண்மை தான். இப்படத்தின் எல்லா பாடல்களும் எனக்கு பிடிக்கும்.

     

  • At July 5, 2008 at 4:00 AM, Blogger ஆயில்யன் said…

    சந்தனம் பூச மஞ்சள் நிலாவும் - எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு :))


    //சிகரம் திரைப்படத்தின் எல்லாப் பாடல்களுமே முத்துக்கள் ///

    சரிதான் அதிகம் நான் கேட்டு மகிழ்ந்த பாடல் அகரம் இப்ப சிகரமாச்சுத்தான் :))

    இப்பத்தான் இந்த பாட்டு நிதானிச்சு கேட்டுக்கிட்டிருக்கேன் :))

     

  • At July 5, 2008 at 4:19 AM, Blogger G.Ragavan said…

    எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிறந்த பாடகர். இசையமைப்பாளராக அவர் சில பல படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் பாடகராகவே சிறப்பாக ஜொலித்தார் என்பது என் கருத்து. எல்லாப் பாடகர்களிலும் ஒரு குட்டி இசையமைப்பாளர் ஒளிந்திருக்கிறார். மயூரி படத்திற்கு இசை எஸ்.ஜானகி. எஸ்.பி.பி கிடையாது. டி.எம்.எஸ் இசையமைத்த முருகன் பாடல்கள் மிகப் பிரபலம். இசையமைப்பாளராக பி.சுசீலாவும் சில பல பக்திப் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

    துடிக்கும் கரங்கள் படத்தில் எல்லாப் பாடல்களுமே அருமை. இளையராஜாவின் சாயல் தெரிந்தாலும் எல்லாப் பாடல்களுமே அருமை. மேகம் முந்தானை, சந்தனம் பூசும் மஞ்சள் நிலாவும் பாடல்களும் மிக அருமை. சிகரம்தான் உண்மையிலேயே சிகரம்.

     

  • At July 5, 2008 at 4:50 AM, Blogger கோபிநாத் said…

    \\"இதோ இதோ என் பல்லவி"\\

    எனக்கும் பிடித்த பாடல்...நீண்ட நாட்களுக்கு பிறகு தான் இந்த படத்திற்க்கு இசை எஸ்.பி.பின்னு தெரிஞ்சிக்கிட்டேன் ;)

    ஆனால் அதிகம் கேட்டது அகரம் இப்ப சிகரமாச்சு என்ற பாடல் தான் ;)

    மீதி பாடல்கள் எல்லாம் உங்க புண்ணியத்துல இப்பதான் கேட்குறேன் தல ;))

     

  • At July 5, 2008 at 6:34 AM, Blogger CVR said…

    சிகரம் படத்தில் எனக்கு பிடித்தது "வர்ணம் கொண்ட வெண்ணிலவே" பாட்டுதான்....
    என்ன ஒரு மெலடி,என்ன ஒரு மெலடி.....
    நல்ல பதிவு தல!
    பாடகராகவே பெரும்பான்மையானவருக்கு தெரிந்திருக்கும் எஸ் பி பி பத்தி மேலே தெரிய வெச்சிருக்கீங்க..
    :)
    வாழ்த்துக்கள்!!

     

  • At July 5, 2008 at 7:25 AM, Blogger கானா பிரபா said…

    நிஜமா நல்லவரே

    வருகைக்கு நன்றி

    ஆயில்ஸ்

    உங்க தல பாட்டில் பிடிக்காத பாட்டு வேற இருக்கா ;)

    வணக்கம் ராகவன்

    எஸ்.பி.பியின் பிரத்தியோக தளத்திலும் மயூரிக்கு இசை அவரே என்று போட்டிருக்கிறார்கள் :( இருங்க வீசிடி எடுத்துப் பார்த்து உறுதிப்படுத்துகின்றேன். பாலு உண்மையில் பாடகராகத் தான் என்றுமே மிளிர்வார். சிகரம் போன்றவை அத்திப்பூ போலத் தான்.

    தல

    நீண்ட நாளைக்குப் பிறகு கேளுங்க கேளுங்க, கேட்டுக்கொண்டே இருங்க.

    சிவிஆர்

    வருகைக்கு நன்றி ;)

     

  • At July 5, 2008 at 7:47 AM, Blogger ஆ.கோகுலன் said…

    சைந்தவி பாடுவது அபாரம்..

    இதே படத்தில் வண்ணம் கொண்ட வெண்ணிலவே பாடலும் பிரபலமானது.

    மேலதிக தகவல்களுக்கு நன்றி..

     

  • At July 5, 2008 at 2:32 PM, Anonymous Anonymous said…

    காபி அண்ணா, ரெண்டாவது வீடியோ, sorry not available அப்படீன்னு வருது. சரி பண்ணரீங்களா

     

  • At July 5, 2008 at 4:02 PM, Blogger கானா பிரபா said…

    // ஆ.கோகுலன் said...
    சைந்தவி பாடுவது அபாரம்..//

    எஸ்.பி.பி பாடுவது தெரியலியோஓஓ;-)


    //சின்ன அம்மிணி said...
    காபி அண்ணா, ரெண்டாவது வீடியோ, sorry not available அப்படீன்னு வருது. சரி பண்ணரீங்களா//

    சில வேளை அப்படிக் காட்டும் , ரிப்ரெஷ் பண்ணிப் பாருங்க, எனக்கு இங்கே பார்க்கக் கூடியதா இருகே.

     

  • At July 5, 2008 at 6:34 PM, Blogger ஆ.கோகுலன் said…

    //எஸ்.பி.பி பாடுவது தெரியலியோஓஓ;-)//

    :))) எஸ்பிபியைப் பற்றி நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன..?

    பாடகர் என்ற ரீதியில் அவர் விமர்சனங்கள் என்ற ஈர்ப்பு விசையைக்கடந்து தன்னியக்கத்தில் இயங்கிக்கொண்டிருப்பவர்.. :)

     

  • At July 7, 2008 at 5:23 AM, Blogger ஹேமா said…

    S.Pஅவர்களே ஒரு சிகரம்தானே.அவரைத்தாண்ட இன்னும் யாரும் இல்லையென்றே சொல்வேன்.யார் என்னதான் பாடினாலும்(K.Jஜேசுதாஸ் தவிர) அவர்களின் குரலில் தழுவும் பாவம் யாரிடமும்"இல்லையே!இதோ இதோ என் பல்லவி..."அருமையான பாட்டு.கேட்க கேட்கத் திகட்டாததாய். சைந்தவிக்கும் சபாஷ்.ஏன்..."மயூரி" படப் பாடல்களும் அருமை.ஆனால் ஏனோ அவைகள் பிரபல்யம் ஆகவில்லை. அந்தப் பாடல்களையும் எங்காவது சேர்த்துக் கொள்ளுங்கள் பிரபா.என்ன ஒரு கவலை என்றால் S.P.அவர்கள் தன் திறமை வளர்வதோடு தன் உடம்பையும் அதிகமாக வளர்க்கிறாரே!!!இன்னும் பல காலங்கள் அவர் வாழவேண்டும்.

     

  • At July 8, 2008 at 2:18 AM, Blogger கானா பிரபா said…

    வணக்கம் ஹேமா

    மயூரி பாடல்களையும் பின்னர் சேர்க்கின்றேன். எஸ்.பி.பி இன்னொரு தலைமுறை கடந்தும் நிலைத்திருப்பதே அவரின் தனித்துவம் இல்லையா.

     

  • At July 9, 2008 at 3:14 AM, Anonymous Anonymous said…

    Hi Prabha,
    i am unable to open the link for சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்.. i am getting following error message in you tube.

    This is a private video. If you have been sent this video, please make sure you accept the sender's friend request.
    Help please

    i like the songs from the movie Mayuri

     

  • At July 9, 2008 at 3:43 AM, Blogger கானா பிரபா said…

    வணக்கம் ஞானராஜா

    அங்கு எம்பெட் பண்ணும் வசதி இல்லாததால் இப்போது நேரடி லிங்க் கொடுத்திருக்கிறேன். பாருங்கள்.

    மயூரி விரைவில் வரும்.

     

  • At July 9, 2008 at 6:34 AM, Anonymous Anonymous said…

    பாட்டு கேட்டுக்கிட்டிருக்கேன் in another window. நன்றி

     

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
இசையமைப்பாளர் ரவீந்திரன்
மலையாளம் பறயும் கமல்ஹாசன்
மீரா நந்தன் வருகவே :-(::)
தசாவதாரம் நானும் பார்த்தேன்
கமல் ஹாஸ்யம் 10
எனக்குப் பிடித்த 10 கமல்(கள்)
பச்சப்பனம் தத்தே பொன்னாரப்பூ முத்தே...!
திரைக்கலைஞர் ஜான் அமிர்தராஜ் நினைவாக...!
குத்தாட்டம் போடும் கொரியக் குழந்தை
"ஆரேரே ஆரேரே" - Happy Days பாட்டு
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது