வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Wednesday, February 27, 2008
பார்வதி பாடும் "ஆசை அதிகம் வச்சு"

You Tube பை மேய்ந்த போது மலையாள அம்ருதா டிவியில் வரும் சூப்பர் சிங்கர்" சிறுவர் சுற்றில் பார்வதி என்ற சிறுமி பாடிய பாடலை ரசித்த கணம் அவளின் ஊனத்தை மறைத்தது இவளின் சிறப்பான பாட்டும், நடனமும். ஆண்டவன் இவளுக்கு வளமான எதிர்காலத்தைக் கொடுக்கட்டும்.
posted by கானா பிரபா 1:23 AM   17 comments
 
17 Comments:
  • At February 27, 2008 at 2:03 PM, Blogger G.Ragavan said…

    பார்வதி மிக நன்றாகப் பாடுகிறார். தன்னம்பிக்கை மிளிர்கிறது. அவருக்கு நல்ல வளமான எதிர்காலம் அமைய முருகப் பெருமானை வேண்டுகிறேன்.

     

  • At February 27, 2008 at 4:25 PM, Blogger கோபிநாத் said…

    தல

    அசத்திட்டா பார்வதி...அருமையான குரல்வளம் அவளுக்கு...வாழ்க பல்லாண்டு ;))

     

  • At February 28, 2008 at 3:33 AM, Blogger கானா பிரபா said…

    ராகவன், கோபி

    தங்கள் வருகைக்கு நன்றிகள்.

     

  • At March 6, 2008 at 1:57 AM, Blogger Iyappan Krishnan said…

    http://video.aol.com/video-detail/amrita-tv-super-star-junior/1249224294


    தன்னம்பிக்கை மிளிர்கிறது. நல்ல எதிர்காலம் கிடக்க என் பிரார்த்தனைகள்.

     

  • At March 6, 2008 at 2:32 AM, Blogger கானா பிரபா said…

    வாங்க ஜீவ்ஸ்

    உண்மையிலேயே பார்வதிக்கு வளமான எதிர்காலம் கிடைக்கவேணும். மேலதிக இணைப்புக்கும் நன்றி

     

  • At March 6, 2008 at 2:45 AM, Blogger ஆயில்யன் said…

    இப்பத்தான் ஜீவ்ஸ் லிங்க் மூலமா பார்த்துக்கிட்டு உங்க பதிவுக்கு வந்தேன்!

    நல்ல குரல்வளம்! எதிர்காலத்தில் தமிழ் அன்னையை தாலட்ட வரும் குரலாக கூட இருக்க கூடும் :)

     

  • At March 6, 2008 at 2:47 AM, Blogger கானா பிரபா said…

    வாங்க ஆயில்யன்

    உங்க வாய் முகூர்த்தம் பலிக்கணும். இன்னொரு சித்ராவாகவும் இருக்கலாம்.

     

  • At March 6, 2008 at 2:48 AM, Blogger ஆயில்யன் said…

    கூடுதல் தகவல்:- பார்வதி பாடிய பாடல் - தலைவி ஸ்ரேயா கோஷல் பாடியது என்பதினை இச்சமயத்தில் இங்கு கூறிக்கொள்வதில் ஸ்ரேயா நற்பணி மன்றத்தின் சார்பில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்

     

  • At March 6, 2008 at 3:53 AM, Blogger M.Rishan Shareef said…

    "This video is currently not available' என்று வருகிறது.கொஞ்சம் கவனிக்கவும்.

     

  • At March 7, 2008 at 12:29 AM, Blogger கானா பிரபா said…

    // ஆயில்யன் said...
    கூடுதல் தகவல்:- பார்வதி பாடிய பாடல் - தலைவி ஸ்ரேயா கோஷல் பாடியது என்பதினை இச்சமயத்தில் இங்கு கூறிக்கொள்வதில் ஸ்ரேயா நற்பணி மன்றத்தின் சார்பில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்//

    ஆகா, பாடகியைக் கூட நமீதா ரேஞ்சுக்கு ஆக்கிப்புட்டீங்களாப்பு? ;-)


    //எம்.ரிஷான் ஷெரீப் said...
    "This video is currently not available' என்று வருகிறது.கொஞ்சம் கவனிக்கவும்.//

    வணக்கம் ரிஷான்

    இப்போது சரியாக இருக்கும் பாருங்கள்

     

  • At March 7, 2008 at 2:16 AM, Blogger M.Rishan Shareef said…

    அன்பின் கானாபிரபா,

    இத்துடன் 8ஆவது தடவையாக முயற்சித்துப் பார்த்தேன்.அந்த வீடியோ நீக்கப்பட்டுள்ளது என்றே வருகிறது நண்பரே.


    //கூடுதல் தகவல்:- பார்வதி பாடிய பாடல் - தலைவி ஸ்ரேயா கோஷல் பாடியது //

    ஐயோ ஆயில்யன்,
    'ஆசை அதிகம் வச்சு' பாட்டு நிழல்கள் ரவி,ரேவதி,ரோஹினி நடித்த 'மறுபடியும்' திரைப்படத்திற்காக எஸ்.ஜானகி பாடியது.இசை இளையராஜா என்று நினைக்கிறேன்.

     

  • At March 7, 2008 at 2:25 AM, Blogger கானா பிரபா said…

    வணக்கம் நிர்ஷான்

    தங்கள் இணைப்பில் ஏதோ சிக்கல் என்று நினைக்கின்றேன். இப்போதும் வேறு நண்பர்கள் சிலரால் இது பரிசோதிக்கப்பட்டு உறுதிப்பட்டுத்தப்பட்டிருக்கின்றது.

    ஆயில்யன் குறிப்பிடுவது பார்வதி பாடும் இன்னொரு ஹிந்திப்பாட்டு, யூடிபில் அதுவும் கிடைக்கிறது.

     

  • At March 7, 2008 at 2:45 AM, Blogger நிஜமா நல்லவன் said…

    ஊனமுற்றவர்களின் வெற்றிக்கு அடிப்படையே அவங்களோட அபார தன்னம்பிக்கை தான். அது நிறையவே பார்வதிகிட்ட இருக்கு. வளமான எதிர்காலம் அமைய எல்லாம்வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

     

  • At May 11, 2008 at 1:17 PM, Blogger M.Rishan Shareef said…

    அப்பாடா...5 மாதங்கள் காத்திருந்த பலன் வீணாகவில்லை.
    இன்று இப்பாடலைப் பார்த்து விட்டேன்.
    நன்றி நண்பர் பிரபா :)

     

  • At May 17, 2008 at 5:16 PM, Blogger தமிழன்-கறுப்பி... said…

    பெருமையாக இருக்கிறது பார்வதியைப்பார்க்க...என்ன ஒரு ஒளி அவள் முகத்தில்!
    நிச்சமாய் அவளுக்கு வளமான எதிர்காலம் இருக்கிறது...

    நன்றி அண்ணன் பகிர்வுக்கு...

     

  • At May 17, 2008 at 6:25 PM, Blogger சின்னப் பையன் said…

    வாவ்!! அற்புதமாக பாடுகிறார்.

    அவருக்கு நல்ல எதிர்காலம் அமையவேண்டும்...

     

  • At May 17, 2008 at 7:12 PM, Blogger கானா பிரபா said…

    தமிழன், சின்னப்பையன்

    வருகைக்கு நன்றி ;-)

     

Post a Comment
<< HOME
 
Tuesday, February 19, 2008
சிங்கத்தை விரட்டிய வேட்டையன் கவுண்டமணி
நீண்ட நாளைக்குப் பின் நம்ம தோஸ்து கவுண்டமணி வந்து கலக்கியிருக்கிறார். காட்டில் சிங்கம் ஒன்றிடம் அகப்பட்ட கவுண்டர், தன் துப்பாக்கியையும் தொலைத்து விட்டு தன் மூளை (!) பலத்தால் அந்தச் சிங்கத்தை விரட்டிய கதையைச் சொல்லுகின்றார், கேளுங்கள்.
Youtube: charlesch27
posted by கானா பிரபா 11:58 PM   0 comments
 
0 Comments:
Post a Comment
<< HOME
 
Friday, February 8, 2008
"தீபிகா படுகோன்"

"ஓம் சாந்தி ஓம்" திரைப்படத்தின் மூலம் பரபரப்பான புது கனவுக்கன்னியாக வந்திருக்கிறார் தீபிகா படுகோன். இவரின் தந்தை பிரகாஷ் படுகோன் ஒரு காலகட்டத்து பிரபல பட்மிண்டன் விளையாட்டுக்காரர். ஆரம்பத்தில் விளம்பரத்துறயில் காலடி வைத்து பின்னர் அவரின் முதல் படமாக உபேந்திராவுடன் கன்னடத்தில் நடித்திருந்த "ஐஸ்வர்யா" திரைப்படம் ஓடாமல் ஓரம் கட்டப்பட்ட படமாம். இப்போது இந்திய அளவில் பேசப்படும் நடிகையாக மாறிவிட்டார்.

தீபிகா படுகோனின் கன்னடத் திரைப்படமான ஐஸ்வர்யாவில் ஒருந்து இரு பாடல்களும், ஓம் சாந்தி ஓம் படப் பாடலையும் இங்கே தருகின்றேன்.

"ஓம் சாந்தி ஓம்" திரைப்பாடல்


"ஐஸ்வர்யா" திரைப்பாடல் ஒன்று


"ஐஸ்வர்யா" திரைப்பாடல் இரண்டு
posted by கானா பிரபா 6:53 PM   9 comments
 
9 Comments:
  • At February 9, 2008 at 4:02 AM, Blogger G.Ragavan said…

    பிரமாதமா இருக்காரே...பிரதிமாதமும் பாக்குறாப்புல இவங்கள வெச்சிக் காலண்டர் போட்டாங்களாமே...அது எங்குட்டும் கெடைக்குமா?

    ஓம் சாந்தி ஓம் படத்த ஆம்ஸ்டர்டாம்ல கூட்டத்துல போய்ப் போத்தேன். மட்டமான படம். நாலஞ்சு இங்கிலீஷ் படத்துல இருந்தும் சில பழைய இந்தியப் படங்கள்ள இருந்தும் சுட்டிருக்காங்க.

    ஆனா நீங்க குடுத்துருக்குற பாட்டு...கேக்க ரொம்ப நல்லாயிருக்கு. Singing in the rain படத்துல இருந்து சுட்ட காட்சியமைப்புன்னாலும் தீபிகா படுகோனே பிரமாதம்.

     

  • At February 9, 2008 at 6:11 PM, Blogger கானா பிரபா said…

    வாங்க ராகவன்

    அந்தக் கருமத்தை நானும் பார்த்தேன் ;-) ஆனால் இங்கே தந்த பாடல் போன்ற காட்சியமைப்புக்களை ரசிக்கலாம். மற்றப்படி நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் உல்டா தான்.

     

  • At February 9, 2008 at 6:27 PM, Blogger வடுவூர் குமார் said…

    ஓம் சாந்தி பட பாடல் மெட்டு கூட எங்கோயோ கேட்ட ஞாபகம் வருது!!
    தீபிகா... அப்படி ஒன்றும் ஆஹா! ஹோஹோ! என்று இல்லையே.

     

  • At February 10, 2008 at 2:35 AM, Blogger கானா பிரபா said…

    வாங்க வடுவூர்க்காரரே

    இந்தப் பாட்டைக் கேட்கும் போது தமிழில் ஜே ஜே திரையில் வரும் "உனை நான் உனை நான்" பாட்டு தான் எனக்கு ஞாபகம் வரும்.

    ஆள் எப்படியோ, தீபிகா தான் பாலிவூட்டின் லேட்டஸ்ட் சூறாவளி ;)

     

  • At February 11, 2008 at 2:32 AM, Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said…

    தீபிகா படுபாவி என்று விளித்து வவாச பதிவில் கா.பி.அண்ணாச்சி அறியாமல் செய்த சிறு பிழையைத் தேவன் மன்னித்தாராக!

    தீபிகா படுகோனேவின் காதல் பார்வை கா.பி.அண்ணாச்சியின் மேல் விழுமாறு வரம் அருளியுள்ளாராக! :-))

     

  • At February 11, 2008 at 9:21 PM, Blogger கானா பிரபா said…

    தல

    பிராயச்சித்தமா மூணு பாட்டு போட்டாச்சு ;-))

     

  • At February 12, 2008 at 12:52 AM, Blogger Haran said…

    பிரபா அண்ணா,
    தீபிகாவைப்பற்றி நன்றாக ஜொள்ளியுள்ளீர்கள். ஓம் சாந்தி ஓம் பாட்டைக் கேட்கும்போது... உனை நான் உனை நான் பாடலும்... அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா (பாலசுப்ரமணியம் பாடியது) பாடலுமே ஞாபகத்திற்கு வருகின்றன (அந்தப் பாடலை மெதுவாக - slow நினைத்துப் பார்த்தால் அதனுடைய மெட்டும் வருவது தெரியும்....

     

  • At February 12, 2008 at 2:33 AM, Blogger கானா பிரபா said…

    நான் ஜொள்ளினது இருக்கட்டும், சந்தடி சாக்கில் நீரும் நல்லா ஜொள்ளீட்டீர் என்ன ;-)

     

  • At April 22, 2008 at 1:47 AM, Blogger வெண்காட்டான் said…

    வணக்கம். தொழில் நுட்பரீதியாக நல்ல படம். மேலும் தமிழ் கலைஞர்கள் (தொழில்நுட்பம்) இந்தித் திரையுலகில் கலக்கும் படம். இந்த படத்தில் தமிழ் கலைஞர்க்ள பங்கு மிக அதிகம். அதற்காகப் பாராட்டலாம். மற்றும் படி சராசரி இந்திப்படத்தில் சிறந்த படம்.

     

Post a Comment
<< HOME
 
Saturday, February 2, 2008
மனோரமாவிற்காக கமல் பாடிய பாடல்
"தமிழ் சினிமா 75" என்ற மலேசியாவில் நடிகர்களின் கலை நிகழ்ச்சியை சமீபத்தில் பார்த்திருந்தேன். நாலு மணி நேர நிகழ்ச்சியில் இரண்டு மணி நேர விளம்பரமும், குத்தாட்டமும் நிரம்பியிருக்க, அவற்றை ஓட விட்டுப் பார்த்த நிகழ்ச்சியில் தேறியதை மட்டும் You tube இல் ஏற்றி உங்களோடு பகிரலாம் என்று இந்தப் பதிவைத் தருகின்றேன்.

நடிகை மனோரமாவிற்கான கெளரவமாக இடம்பெற்ற நிகழ்வில், நடிகர் கமலஹாசன் இந்த நிகழ்ச்சிக்கு வராமலே (அதுவும் நல்லதுக்கு தான்), மனோரமாவுடன் இணைந்து போற்றிப் பாடிய "முத்துக்குளிக்க வாரீகளா" பாட்டு புது வடிவில் சிறப்பாக இருந்தது. ஏற்கனவே பாடிவைத்து ஒலிப்பதிவு செய்த கமலஹாசனின் குரலுக்கு நடிகர் பரத் வாயசைக்க மனோரமாவும் கூடவே இணைந்து கொண்டார். ஆனால் சில இடங்களில் அவர் பாடும் கணங்களை மறந்து வாயை மூடி இருந்ததும் கவனிக்கத் தவறவில்லை. இதோ அந்தக் காட்சி.
posted by கானா பிரபா 5:21 AM   11 comments
 
11 Comments:
  • At February 2, 2008 at 6:17 AM, Blogger MyFriend said…

    நானும் பார்த்தேன்.. என்னடா பரத் கமல் குரல்ல பாடுறாரேன்னு. பாட்டு முடிஞ்சதும்தான் தெரிஞ்சது ஏற்கனவே ரெக்கார்ட் பண்ணதுன்னு. ;-)

     

  • At February 2, 2008 at 7:22 AM, Blogger கொழுவி said…

    சுமார் ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த மனோரமாவைக் கெளரவிக்கும் நிகழ்வொன்றில் கமலகாசனே மேடையில் இணைந்து மனோரமாவுடன் அந்தப் பாடலைப் பாடியிருந்தார். ரொம்பப் பழைய அந்நிகழ்வை அண்மையில் இந்திய குடியரசு தின நிகழ்வில் சன் ஒளிபரப்பியது.

     

  • At February 2, 2008 at 7:57 AM, Blogger G.Ragavan said…

    அந்தப் பாட்டு எல்.ஆர்.ஈஸ்வரியும் டி.எம்.எஸ்சும் பாடுனது. அதை மனோரமாவும் கமலும் நல்லாவே பாடியிருக்காங்க. காலத்தை வென்ற பாடல். தூத்துக்குடிப் பாடல். தேடிக் கொடுத்தமைக்கு நன்றி.

     

  • At February 2, 2008 at 3:36 PM, Blogger கானா பிரபா said…

    // கொழுவி said...
    சுமார் ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த மனோரமாவைக் கெளரவிக்கும் நிகழ்வொன்றில் கமலகாசனே மேடையில் இணைந்து மனோரமாவுடன் அந்தப் பாடலைப் பாடியிருந்தார். //

    மேலதிக தகவலுக்கு நன்றி கொழுவி

    //G.Ragavan said...
    அந்தப் பாட்டு எல்.ஆர்.ஈஸ்வரியும் டி.எம்.எஸ்சும் பாடுனது. அதை மனோரமாவும் கமலும் நல்லாவே பாடியிருக்காங்க. காலத்தை வென்ற பாடல். தூத்துக்குடிப் பாடல். தேடிக் கொடுத்தமைக்கு நன்றி.//

    வாங்க ராகவன்

    இந்த உறுத்தல் இல்லாத மீள் கலவைப் பாடலை ரசிக்க முடிகின்றது. இந்த வாட்டி நானே யூடிபில் ஏற்றினேனாக்கும் ;-)

     

  • At February 2, 2008 at 4:27 PM, Blogger வடுவூர் குமார் said…

    நானும் ரிக்கார்ட் பண்ணினேன்,நீங்களே முன்னால் போட்டுடிங்கீங்க.நல்லது.

     

  • At February 2, 2008 at 5:37 PM, Blogger Vasanthan said…

    கொழுவி சொல்லும் விழா நடிகைகள் சிறிபிரியாவும், ராதிகாவும் மனோரமாவுக்கென நடத்திய விழா. பத்மசிறி விருது வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்விழா நடைபெற்றது. எப்போது ஆச்சிக்கு விருது வழங்கப்பட்டதென்பது சரியாக ஞாபகமில்லை.

    ஆனால் கலைஞர் ஆட்சியிலிருக்கும்போது அவ்விழா நடைபெற்றது. கலைஞரின் வாழ்த்துச் செய்தியை நடிகர் சரத்குமார் வாசித்தார்.

     

  • At February 2, 2008 at 5:50 PM, Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said…

    //தேறியதை மட்டும் You tube இல் ஏற்றி உங்களோடு பகிரலாம் என்று இந்தப் பதிவைத் தருகின்றேன்//

    இதுக்குத் தான் எங்க கா.பி.அண்ணாச்சி வேணும்கிறது!

    தம்பி உடையான் படைக்கு அஞ்சான்
    அண்ணாச்சி உடையான் பாட்டுக்கு அஞ்சான்! :-))

     

  • At February 2, 2008 at 5:57 PM, Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said…

    எல்.ஆர்.ஈஸ்வரி குரலில் கேட்ட பாடல்...மனோரமா குரலிலும் சூப்பரா ஒத்துப் போகுது!

    பரத் சும்மா வாய் அசைப்பது நல்லாவே தெரியுது! கமல் சிரிக்கும் போது அவரு மிஸ் பண்ணிட்டாரு! :-))

    நன்றி அண்ணாச்சி! நல்ல ஜாலி அசைபடம்! :-)

     

  • At February 2, 2008 at 6:08 PM, Blogger கானா பிரபா said…

    // வடுவூர் குமார் said...
    நானும் ரிக்கார்ட் பண்ணினேன்,நீங்களே முன்னால் போட்டுடிங்கீங்க.நல்லது.//

    வாங்க குமார்

    நீங்க யூடிபில் ஏற்றும் வேலை மிச்சம் இப்போ;-)

    //வசந்தன் said...
    கொழுவி சொல்லும் விழா நடிகைகள் சிறிபிரியாவும், ராதிகாவும் மனோரமாவுக்கென நடத்திய விழா. //

    வணக்கம் அண்ணை

    இது தைப்பொங்கலுக்கு புதுவருசத்துக்கு முதல் நாள் ஒலிபரப்பியதைத் தான் இங்கே தந்தேன். இது ராதிகா கூட்டணியின் படைப்பு தான். கொழுவி வந்தாலே குழப்பமோ ;)

    // kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    தம்பி உடையான் படைக்கு அஞ்சான்
    அண்ணாச்சி உடையான் பாட்டுக்கு அஞ்சான்! :-))//

    ஆஹா..ஆஹா, தம்பி கண்ணபிரான் உள்ள இந்த அண்ணனும் படை, சொறி, சிரங்குக்கு அஞ்சான் ;-)

     

  • At February 2, 2008 at 7:42 PM, Blogger கானா பிரபா said…

    //kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    பரத் சும்மா வாய் அசைப்பது நல்லாவே தெரியுது! கமல் சிரிக்கும் போது அவரு மிஸ் பண்ணிட்டாரு! :-))
    //

    மனோரமா கூட தன் பகுதியில் விட்டுட்டாங்க ;-)

     

  • At February 3, 2008 at 4:44 AM, Blogger கானா பிரபா said…

    // .:: மை ஃபிரண்ட் ::. said...
    நானும் பார்த்தேன்.. என்னடா பரத் கமல் குரல்ல பாடுறாரேன்னு. பாட்டு முடிஞ்சதும்தான் தெரிஞ்சது ஏற்கனவே ரெக்கார்ட் பண்ணதுன்னு. ;-)//

    சிஸ்டர்

    உங்க ஊரில் தானே நடந்தது. நீங்களும் டிவில தான் பார்த்திருக்கீங்க போல.

     

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
ஆயில்ஸ் வாழணும் நூறு ஆயுள்ஸ்
எஸ்.எஸ்.சந்திரன் மறைவில்
சாதித்துக் காட்டி நெகிழ வைத்த அபிநயா
அன்று கேட்டவை இன்று புத்தம் புதிதாய்
மண மேடையில் .:: மை பிரண்ட்::.
2009 சிறந்த மலையாள கானங்கள்
ஆயில்யன் - 1980
"மதுரை to தேனி வழி ஆண்டிப்பட்டி" சுகமான பயணம்
கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்
"காற்றில் எந்தன் கீதம்" ஒரு சிலாகிப்பு
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது